வேணுவனம் - சுகா

Are you over 18 and want to see adult content?

More Annotations

Obchod s kozmetickými potrebami

Obchod s kozmetickými potrebami

cosmeticshop.sk
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:34:36
Obchod s kozmetickými potrebami

Obchod s kozmetickými potrebami

cosmeticshop.sk

Are you over 18 and want to see adult content?

Butterfly Fun Facts – {and some not-so-fun facts}

Butterfly Fun Facts – {and some not-so-fun facts}

butterfly-fun-facts.com
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:34:52
Butterfly Fun Facts – {and some not-so-fun facts}

Butterfly Fun Facts – {and some not-so-fun facts}

butterfly-fun-facts.com

Are you over 18 and want to see adult content?

Magiczne Zakończenie Wakacji 2019 - oficjalna strona festiwalu

Magiczne Zakończenie Wakacji 2019 - oficjalna strona festiwalu

magicznezakonczeniewakacji.pl
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:35:10
Magiczne Zakończenie Wakacji 2019 - oficjalna strona festiwalu

Magiczne Zakończenie Wakacji 2019 - oficjalna strona festiwalu

magicznezakonczeniewakacji.pl

Are you over 18 and want to see adult content?

کسب درآمد از معتبرترین و بهترین سایت های کلیکی ایرانی و خارجی

کسب درآمد از معتبرترین و بهترین سایت های کلیکی ایرانی و خارجی

ptc-site.blogsky.com
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:35:22
کسب درآمد از معتبرترین و بهترین سایت های کلیکی ایرانی و خارجی

کسب درآمد از معتبرترین و بهترین سایت های کلیکی ایرانی و خارجی

ptc-site.blogsky.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of geeknation.com

A complete backup of geeknation.com

geeknation.com
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:35:31
A complete backup of geeknation.com

A complete backup of geeknation.com

geeknation.com

Are you over 18 and want to see adult content?

Secure Payment Gateway - Card Access Services

Secure Payment Gateway - Card Access Services

cardaccess.com.au
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:35:59
Secure Payment Gateway - Card Access Services

Secure Payment Gateway - Card Access Services

cardaccess.com.au

Are you over 18 and want to see adult content?

A complete backup of sqirlla.com

A complete backup of sqirlla.com

sqirlla.com
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:36:13
A complete backup of sqirlla.com

A complete backup of sqirlla.com

sqirlla.com

Are you over 18 and want to see adult content?

A.M.O.R.C.

A.M.O.R.C.

etudes-rc.org
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:36:26
A.M.O.R.C.

A.M.O.R.C.

etudes-rc.org

Are you over 18 and want to see adult content?

Skybound Home - Skybound Entertainment

Skybound Home - Skybound Entertainment

skybound.com
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:36:42
Skybound Home - Skybound Entertainment

Skybound Home - Skybound Entertainment

skybound.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of video-barca.com

A complete backup of video-barca.com

video-barca.com
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:36:53
A complete backup of video-barca.com

A complete backup of video-barca.com

video-barca.com

Are you over 18 and want to see adult content?

Herzlich willkommen bei SystemShop24.de, der Onlineshop für Werkzeug

Herzlich willkommen bei SystemShop24.de, der Onlineshop für Werkzeug

systemshop24.de
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:37:09
Herzlich willkommen bei SystemShop24.de, der Onlineshop für Werkzeug

Herzlich willkommen bei SystemShop24.de, der Onlineshop für Werkzeug

systemshop24.de

Are you over 18 and want to see adult content?

DroidVilág.hu - Kütyü shop

DroidVilág.hu - Kütyü shop

droidvilag.hu
Profile Image
Earl Hamilton
2019-10-01 00:37:23
DroidVilág.hu - Kütyü shop

DroidVilág.hu - Kütyü shop

droidvilag.hu

Are you over 18 and want to see adult content?

Favourite Annotations

A complete backup of www.brokenteens.com

A complete backup of www.brokenteens.com

www.brokenteens.com
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:37:48
A complete backup of www.brokenteens.com

A complete backup of www.brokenteens.com

www.brokenteens.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of indiansexwebcams.com

A complete backup of indiansexwebcams.com

indiansexwebcams.com
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:37:51
A complete backup of indiansexwebcams.com

A complete backup of indiansexwebcams.com

indiansexwebcams.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of www.pornxxxxtube.net

A complete backup of www.pornxxxxtube.net

www.pornxxxxtube.net
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:37:56
A complete backup of www.pornxxxxtube.net

A complete backup of www.pornxxxxtube.net

www.pornxxxxtube.net

Are you over 18 and want to see adult content?

A complete backup of www.www.erotic-photos.net

A complete backup of www.www.erotic-photos.net

www.www.erotic-photos.net
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:38:00
A complete backup of www.www.erotic-photos.net

A complete backup of www.www.erotic-photos.net

www.www.erotic-photos.net

Are you over 18 and want to see adult content?

A complete backup of www.sextubehub.com

A complete backup of www.sextubehub.com

www.sextubehub.com
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:38:11
A complete backup of www.sextubehub.com

A complete backup of www.sextubehub.com

www.sextubehub.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of porntubes2u.com

A complete backup of porntubes2u.com

porntubes2u.com
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:38:15
A complete backup of porntubes2u.com

A complete backup of porntubes2u.com

porntubes2u.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of www.bustypics.com

A complete backup of www.bustypics.com

www.bustypics.com
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:38:21
A complete backup of www.bustypics.com

A complete backup of www.bustypics.com

www.bustypics.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of www.freeomovie.com

A complete backup of www.freeomovie.com

www.freeomovie.com
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:38:21
A complete backup of www.freeomovie.com

A complete backup of www.freeomovie.com

www.freeomovie.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of xnalgas.com

A complete backup of xnalgas.com

xnalgas.com
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:38:26
A complete backup of xnalgas.com

A complete backup of xnalgas.com

xnalgas.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of hqvirgins.com

A complete backup of hqvirgins.com

hqvirgins.com
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:38:32
A complete backup of hqvirgins.com

A complete backup of hqvirgins.com

hqvirgins.com

Are you over 18 and want to see adult content?

A complete backup of www.sexosur.cl

A complete backup of www.sexosur.cl

www.sexosur.cl
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:38:36
A complete backup of www.sexosur.cl

A complete backup of www.sexosur.cl

www.sexosur.cl

Are you over 18 and want to see adult content?

A complete backup of www.www.scandalplanet.com

A complete backup of www.www.scandalplanet.com

www.www.scandalplanet.com
Profile Image
Earl Hamilton
2020-11-20 12:38:38
A complete backup of www.www.scandalplanet.com

A complete backup of www.www.scandalplanet.com

www.www.scandalplanet.com

Are you over 18 and want to see adult content?

Text

வேணுவனம் அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேணுவனம் பகவதி, என் பள்ளித் தோழன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்

பிறகு

திருநவேலி ARCHIVES வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் எஸ்.கேபி.கருணா ARCHIVES Widget Ready. This center column is widget ready! Add one in the admin

panel.

ஆளுமை ARCHIVES இன்றைய சூரியைப் பற்றி ஜான் இப்படி சொல்கிறார். “இளமையின் துடிப்பு மிகுந்த குரலால் கேட்பவரைக் கட்டிப் போட்ட அந்த அப்பாவிக் ’தி இந்து’ நாளிதழ். ARCHIVES Widget Ready. This left column is widget ready! Add one in the admin

panel.

நல்லதோர் வீணை செய்தே . . . ‘உக்கிரம் என்பது நிலவின் வெளிச்சத்தில் அருகும்

தனிமை

'சொல்வனம்' இதழ் 1 ARCHIVES September 10, 2015 by சுகா Posted in 'சொல்வனம்' இதழ் 1, 'வார்த்தை' இதழ், கட்டுரை, மரபின் மைந்தன் Tagged மூங்கில் மூச்சு, ரசனை, வார்த்தை 3 Comments. ‘எழுத்தும் 'எழுத்தும் எண்ணமும்' …TRANSLATE

THIS PAGE

Widget Ready. This left column is widget ready! Add one in the admin

panel.

ரஹ்மான் என்ற ராஜசேகர் . . . ‘வணக்கம் ஸார்! நீங்க நெல்லை எக்ஸ்பிரஸ்ல வாரியன்னு ஜே கே வேணுவனம் அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேணுவனம் பகவதி, என் பள்ளித் தோழன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்

பிறகு

திருநவேலி ARCHIVES வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் எஸ்.கேபி.கருணா ARCHIVES Widget Ready. This center column is widget ready! Add one in the admin

panel.

ஆளுமை ARCHIVES இன்றைய சூரியைப் பற்றி ஜான் இப்படி சொல்கிறார். “இளமையின் துடிப்பு மிகுந்த குரலால் கேட்பவரைக் கட்டிப் போட்ட அந்த அப்பாவிக் ’தி இந்து’ நாளிதழ். ARCHIVES Widget Ready. This left column is widget ready! Add one in the admin

panel.

நல்லதோர் வீணை செய்தே . . . ‘உக்கிரம் என்பது நிலவின் வெளிச்சத்தில் அருகும்

தனிமை

'சொல்வனம்' இதழ் 1 ARCHIVES September 10, 2015 by சுகா Posted in 'சொல்வனம்' இதழ் 1, 'வார்த்தை' இதழ், கட்டுரை, மரபின் மைந்தன் Tagged மூங்கில் மூச்சு, ரசனை, வார்த்தை 3 Comments. ‘எழுத்தும் 'எழுத்தும் எண்ணமும்' …TRANSLATE

THIS PAGE

Widget Ready. This left column is widget ready! Add one in the admin

panel.

ரஹ்மான் என்ற ராஜசேகர் . . . ‘வணக்கம் ஸார்! நீங்க நெல்லை எக்ஸ்பிரஸ்ல வாரியன்னு ஜே கே ஜெயமோகன் ARCHIVES Widget Ready. This center column is widget ready! Add one in the admin

panel.

கோவிட் காலம் பிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை எஸ்.கேபி.கருணா ARCHIVES Widget Ready. This center column is widget ready! Add one in the admin

panel.

நடைச்சித்திரம் . . . 90களின் துவக்கத்தில் சாலிகிராமம் அபுசாலி தெருவில் இளையராஜா ARCHIVES அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். ராஜதாளம் . . . பிரசாத் ஸ்டூடீயோவுக்கு வந்திருந்த தாளவாத்தியக்

கலைஞர்

பழைய பாடல் sukaaa, this effortless style – Wow!!!! I just love it!!! My cliched mind was waiting for ‘Nanjil Prema’ but ‘Saveetha’ was the

twist 🙂

'சொல்வனம்' இதழ் 1 ARCHIVES September 10, 2015 by சுகா Posted in 'சொல்வனம்' இதழ் 1, 'வார்த்தை' இதழ், கட்டுரை, மரபின் மைந்தன் Tagged மூங்கில் மூச்சு, ரசனை, வார்த்தை 3 Comments. ‘எழுத்தும் கருப்புகவுணியும், …TRANSLATE THIS

PAGE

‘ஒடம்பைக் கொறைக்கலாம்னு இருக்கேன், ஸார்’. ஹைதராபாத்தில் பைரவ ப்ரியம் எனக்கும் நாய்கள் என்றால் அத்தனை இஷ்டம்தான். ஆனால் கோலப்பனைப்

kssuka@gmail.com

*

வேணுவனம்

– சுகா

MENU

Skip to content

* திருநவேலி

* இசை

* ஆளுமை

* கட்டுரை * சிறுகதை நடைப்பழக்கம் . . . November 20, 2020 by சுகா Posted in Uncategorized , அனுபவம் , இளையராஜா , கட்டுரை

, சுகா

Tagged

சாலிகிராமம்

Leave a comment

சாலிகிராமத்தின் காந்திநகரிலிருந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி குமரன் காலனியின் பாதியில் வலது பக்கமாகத் திரும்பி நேரே சென்று முட்டினால் அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அந்த பிள்ளையார் எங்களால் ‘சமீரா பிள்ளையார்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம், அந்தப் பிள்ளையார் கோயில் ‘சமீரா டப்பிங் தியேட்டர்’ வளாகத்தின் முன்பு அமைந்துள்ளது. ‘சதிலீலாவதி’ உட்பட வாத்தியார் பாலுமகேந்திராவின் சில படங்களுக்கான டப்பிங் பணிகள் சமீரா டப்பிங் தியேட்டரில்தான் நடைபெற்றன. ஆபாவாணனின் நிழலிசையாகத் திகழ்ந்த மனோஜ் கியான் இரட்டையரில் ஒருவருக்கு சொந்தமான டப்பிங் தியேட்டர் அது. வழக்கமாக அதைக் கடக்கும் போது சமீராவுக்குச் சென்று அங்குள்ள தலைமை சவுண்ட் இஞ்சினியர் கிருஷ்ணனை சந்தித்து விட்டு வருவது வழக்கம். கிருஷ்ணன் பின்னாளில் திரைப்பட இயக்குநராக மாறினார்(ன்).  ’விகடகவி’ என்னும் திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய நாயகி பிறகு நிறைய படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்று, கல்யாணம், விவாகரத்து என எல்லாவற்றையும் பார்த்து இப்போது ஆன்மிகத் தேடலில் இருக்கிற அமலா பால். நடைப்பயிற்சிக்காக செல்லும் போது சமீராவை எட்டிப் பார்ப்பதில்லை. கிருஷ்ணன் பிடித்துக் கொள்வான். ‘இப்ப நீ வாக்கிங் போய் ஃபிட் ஆகி எங்களையெல்லாம் ஏளனமாப் பாப்பே. அதுக்குத்தானே? பேசாம உக்காரு. ஒரு ரீலை முடிச்சுட்டு வரேன். ஸாருக்கு டீ கொண்டு வாங்கப்பா’ என்று காலி பண்ணிவிடுவான். அதனால் தூரத்தில் நின்று சமீரா பிள்ளையாருக்கு மட்டும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு இடது பக்கம் திரும்பி அருணாசலம் சாலையை இணைக்கிற தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அப்படி ஒருநாள் பிள்ளையாருக்கு ஹாய் சொல்லும் போதுதான் அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரும் நடைப்பயிற்சிக்கு செல்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் என்னைப் போல நடைப்பயிற்சிக்கான வேஷ உடையோ, காலணிகளோ இல்லாமல் சாதாரண அரைக்கை சட்டையும், இளம்பச்சை வண்ணத்தில் மடித்துக் கட்டிய சாரமும் அணிந்திருந்தார். நான் முதன்முறையாக அவரைப் பார்க்கிறேன். அதற்கு முன் பல புகைப்படங்களிலும், காணொளிகளிலும் பார்த்து பழகிய முகம். அவர் என்னை கவனிக்கவில்லை. ஒரு மாதிரியான ‘தக்கு தக்கு’வென நடக்கத் துவங்கினார். அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேறு வழியேயில்லாமல் என் முகத்தைப் பார்த்து புன்னகைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். புன்னகை என்றால் முகம் மலர்ந்து கண்கள் சிரிக்கின்ற புன்னகை அல்ல. மனசுக்குள் புன்னகைப்பது லேசாக உதட்டில் தெரிவதாக ஒரு பாவனை. அவ்வளவுதான். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இருவரும் இணைகிற இடத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் எங்களது நடையைத் தொடங்கி, அருணாசலம் சாலை, கே கே சாலை என தொடர்ந்து தசரதபுரம் வழியாக வந்து காந்தி நகருக்குத் திரும்புகிற பாதை வரைக்கும் ஒன்றாக நடப்போம். பின்பு அவரவர் பாதையில் திரும்பி விடுவோம். திரும்பும் போதும் அதே மனப்புன்னகை. மழை பெய்து சாலையெல்லாம் தண்ணீர் தேங்கி வடிந்திருந்த ஒரு நாளில் தசரதபுரத்தில் பார்த்துப் பார்த்து அன்னநடை பயில வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் முகம் பார்த்து உதடு பிரித்து லேசாக சிரித்தவர், ‘வாக்கிங் போகும் போதும் விபூதியா?’ என்றார். அத்தனை நாட்களில் அவர் என்னைப் பார்த்து பேசிய ஒரே வரி அதுதான். அவர் கேட்டதற்கு சற்றே பிரகாசமான மனப்புன்னகையையே பதிலாக அளித்தேன். அதை அவர் எதிர்பார்க்கவுமில்லை. காந்திநகர் பாதை வந்ததும் வழக்கம் போல பிரிந்து போனோம். சில மாதங்களில் காந்தி நகரிலிருந்து நான் சாய் நகருக்குச் சென்ற பிறகு எனது நடைப்பயிற்சியின் தெருக்கள் சாலிகிராமத்தின் வேறு பகுதிக்கு மாறிவிட்டன. நடைநண்பரைப் பார்க்க இயலவில்லை. தி இந்து(ஆங்கிலம்)வில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் மூலம் லால்குடி ஜெயராமனின் புதல்வர் கிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு அவரது தகப்பனாரைப் பற்றிய ‘The Incurable Romantic’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு இளையராஜா அவர்களை அழைக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அமரர் லால்குடி ஜெயராமன் மீது நன்மதிப்பு கொண்டிருந்த இளையராஜா விழாவுக்கு வர சம்மதித்தார். தியாகராய நகரிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளையராஜா அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எனது நடைநண்பர் அரங்குக்குள் வந்தார். இளையராஜா அவர்களை வணங்கி விட்டு அருகில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் அவரது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்து இறங்கின. ‘இவன் என்ன இங்கே இருக்கிறான்? யார்தான் இவன்?’ என்பதாக இருந்தன அவரது முகபாவம். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இளையராஜா அவர்கள் ஏதோ கேட்கவும் கலைந்து போனது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை. தொடுபுழாவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நண்பர் கோலப்பன் அழைத்தார். எனது நடைநண்பர் காலமான செய்தியைச் சொல்லி இளையராஜா அவர்களிடம் தெரியப்படுத்தச் சொன்னார். அதிர்ச்சியான அந்த செய்தியை இளையராஜா அவர்களை அழைத்து நான் சொல்லவும், ‘என்னய்யா சொல்றே? நல்லா விசாரிச்சியா?’ என்று கேட்டார். அவராலும் அந்த செய்தியை நம்ப முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ப விரும்பவில்லை என்பது அவரது குரலில் தெரிந்தது. நான் ஃபோன் செய்த சில நிமிடங்களிலேயே அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று இளையராஜா அவர்கள் அஞ்சலி செலுத்திய செய்தியை பிறகு தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சில மாதப்பரிச்சயம். ஒரு வரி தவிர வேறேதும் பேசிக்கொண்டதில்லை. முறையாக அறிமுகம் ஆகிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எனக்கது குறையாகத் தெரியவில்லை. அடிக்கடி நான் கேட்டு உவக்கும் முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் ஶ்ரீ காந்திமதிம் கீர்த்தனை மூலம் ஹேமவதி ராகத்தைக் குழைத்துக் கொடுத்தபடி மெல்லிய குரலில் என்னிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறார், எனது நடைநண்பர் அமரர் மாண்டலின் ஶ்ரீநிவாஸ். கோவிட் காலம் June 21, 2020 by சுகா Posted in Uncategorized , அனுபவம் , இளையராஜா , ஜெயமோகன்

8 Comments

பிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் மெல்ல நிலைமை மாறி சகஜநிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. விளக்கேற்றிய வாரத்தில் எங்கள் தெருவில் ஜனநடமாட்டம் இயல்பாக இருந்தது. காய்கறிக்காரர் முகக்கவசம் அணியாமல் கத்தரிக்காயும், முட்டைக்கோஸும் விற்றார். சைக்கிளின் பின்னால் பெரிய எவர்சில்வர் கேனைக் கட்டி டீ விற்றார், மற்றொருவர். ‘குட்டி சமோசா இருக்கா?’ என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார், பக்கத்துத் தெரு டெய்லர். பால்கனியில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு காகிதத் தேநீர் கோப்பை மட்டும்தான் தெரிந்தது. ‘குட்டி’ சமோசா தென்படவில்லை. மாலை மங்கிய வேளையில் சின்ன ஒலிபெருக்கி ‘இடியாப்பம் இடியாப்பம்’ என்று கூவியது. ஒரு நண்பகல் பொழுதில் வேறொரு ஒலிபெருக்கி ‘ஏ பூட்டு ரிப்பேர்’ என்று ரகசியமாக அழைத்தது. தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு டாக்டர் பீலா ராஜேஷ் மறந்தும் புன்னகைத்து விடாமல் அன்றைய தினத்தின் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். அதற்கடுத்த நாட்களில் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர் வீட்டுக் கதவைத்தட்டி ‘எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே? இருமலோ, காய்ச்சலோ வந்தா என் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு நம்பரைக் கொடுக்காமலேயே, ‘அடுத்த வீடு கே. ஜெய்சிங்’ என்று தன் கையிலுள்ள பட்டியலை வாசித்தபடிக் கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாள் மறக்காமல் அவரது கைபேசி என்ணை அவராகவே கொடுத்து விட்டு, ‘நான்தான் ஏதோ அவசரத்துல போயிட்டேன். நீங்களாவது

கேட்டு

வாங்கியிருக்கலாம்ல?’ என்று செல்லமாக கோபித்தார். பதில் சொல்ல முயன்றால் இருமல் வந்து விடுமோ என்று பயந்து வராத இருமலை அடக்கிச் சிரிக்க வேண்டியிருந்தது. இனி சில காலத்துக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புத்திக்கு புலப்பட மேலும் சில நாட்கள் ஆனது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த உள்ளம் கிடந்து துடியாய்த் துடித்தது. ஆறு நாவல், எண்பது சிறுகதைகள், பதினாறு திரைக்கதைகள், போனால் போகிறதென்று பத்திருபது குறுநாவல்களை எழுதிப் போட்டு விடுவோம் என்று மனம் சூளுரைத்தது. ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை. சாப்பிடுவதும், தூங்குவதுமாகத்தான் பொழுது கழிந்தது. கழிகிறது. அந்த சமயத்தில்தான் இளையராஜாவின் டிரம்மர் புருஷோத்தமன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ராஜதாளம்’ கட்டுரையை எழுத வேண்டியிருந்தது. அது போக ஆனந்த விகடனில் ‘பண்டிதன் கிணறு’ சிறுகதை எழுத வாய்த்தது. மற்றும் சில சிறுகதைகள் எழுத முடிந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில் பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் ஆனந்த விகடனில் எனது கதையை இன்று வரைக்கும் எழுதிய நானும், ‘படிச்சியா இல்லியா’ என்று நான் மிரட்டிய காரணத்தால் எனது பள்ளித் தோழன் பகவதியும் மட்டுமே வாசித்திருக்கிறோம். மற்றவர்கள் இணையத்தில் படித்திருக்கக் கூடும். எனது கதை வெளியான விகடன் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்துப் பேசிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் கந்தசுப்பிரமணியத்தின் மூலம் கதை மூன்றாம் நபரைச் சென்றடைந்திருப்பது தெரிய வந்தது. (அதற்கு முந்தைய வாரம் நான்தான் அவருக்கு என் கதை விகடனில் வெளிவந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருந்தேன்). எழுதுவது குறைவாக இருந்தாலும் வாசிப்பது நிறைவாகத்தான் இருந்தது. தினம் ஒரு சிறுகதை எழுதித் தள்ளும் ஜெயமோகனின் எல்லா கதைகளையும் உடனுக்குடன் வாசித்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பேன். ஒவ்வொரு கதைக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் ‘மதுரம்’ சிறுகதைக்கும் மட்டும் கடிதம் எழுதினேன். மற்ற கதைகளைப் படித்துவிட்டு கடிதம் எழுத முனைவதற்கு முன் ஜெயமோகன் அடுத்தடுத்து பதினாறு கதைகள் எழுதி விடுகிறார். அதற்குள் எந்தக் கதைக்கு கடிதம் எழுத நினைத்தோம் என்பது மறந்து போய்விடுகிறது. இதற்கிடையில் நான் மனச்சோர்வில் இருப்பதாக அவராக நினைத்துக் கொண்டு ‘சங்கரன் மாமா போல் உற்சாகமாக இருக்கவும். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவருக்காக சங்கரன் மாமாவின் கேள்வி ஒன்றை அனுப்பி வைத்தேன். ‘கொரோனா விளிப்புணர்வு பாடல்களுக்கு ஏதாவது தடுப்பூசி இருக்கா, மருமகனே?’ ஜெயமோகன் உற்சாகமாகியிருக்க வேண்டும் என்பதை அவரது அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் காட்டின. இந்தக் கொரோனா காலத்தில் ஜெயமோகனின் சிறுகதைகள் பெரும் துணையாக உடன் நிற்கின்றன. வாசிக்கிற பழக்கமுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் தற்சமயம் எழுதி வரும் கதைகளைப் பற்றிச் சொல்லி வருகிறேன். கமல் அண்ணாச்சிக்கும் சொல்லி ஜெயமோகனது சில கதைகளை அனுப்பியும் வைத்தேன். படித்து விட்டு உற்சாகமடைந்த அவர், ஜெயமோகனின் எண்ணைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசினார். கமல் அண்ணாச்சி உட்பட ஜெயமோகனின் சிறுகதைத் தாக்குதலைப் படித்து விட்டு பலரும் ‘ராட்சஸன், அரக்கன்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள். ஒரு நாள் சொப்பனத்தில் கருப்பு கட் பனியனும், நீள ஜடாமுடியும், காதில் குண்டலங்களும், கையில் குறுவாளும் வைத்தபடி, என் மார்பின் மீதமர்ந்து, ‘சாயா குடிக்காமோ?’ என்று மலையாளத்தில் மிரட்டினார், ஜெயமோகன். அடுத்த நாள் அவரது தளத்துக்குச் சென்றால் ‘முத்தங்கள்’ என்றொரு பேய்க்கதையை எழுதியிருந்தார். அன்றிரவு உறங்காமல் வெகுநேரம் ஜெயமோகனுக்காகக் காத்திருந்தேன். ஆளைக் காணோம். குறுவாளோடு வேறெங்கோ சாயா குடிக்கப் போய்விட்டார். பி.சி.ஶ்ரீராம் சொன்னது போல அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் படங்கள் ஒருகட்டத்தில் அலுத்துவிட்டன. வெப் சீரீஸ்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த உலகத்தில் கேங்க்ஸ்டர்ஸ் மட்டும்தான் வாழுகிறார்களோ என்று கொரோனாவைத் தாண்டிய அச்சம் ஏற்பட்டது. ‘Game of thrones, Banshee’ போன்ற வெப் சீரிஸ்களை முடித்தபின் Homeland 8வது சீஸனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களை திரையரங்கிலேயே பார்த்து விடுவதால் பழைய கிளாஸிக் திரைப்படங்கள் சிலவற்றை மீண்டும் பார்க்க வாய்த்தது. உதா: கிரீடம். அப்போது பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி இப்போதும் ஏற்பட்டது. மறந்தும் இன்னொரு முறை பார்த்து விடக்கூடாது என்று முடிவெடுக்க வைத்த ‘தனியாவர்த்தனம்’ பக்கம் தலைவைத்தே படுக்க வில்லை. மெல்ல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நாட்டம் குறைந்து யூ டியூப் பக்கம் போய் ‘Hope for paws’ பார்க்க ஆரம்பித்து, தினமும் அதிலேயே அதிக நேரம் செலவிடும் படியாக ஆயிற்று. நாய்ப்பிரியர்களுக்கான சேனல் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, தெருவோரம் திரிகிற நாய்களை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நலம் தேறும் வரை அவற்றை போஷித்து, பின் அதை வளர்க்க விரும்புபவர்களுக்கு அளிக்கிறார்கள். தமக்கு உதவ வருகிறார்கள் என்பதை அறியாத முரட்டு நாய்களை இவர்கள் அணுகும் கலையை வியந்துத் தீரவில்லை. ஒரு நல்ல திரைப்படம் கொடுக்கிற அத்தனை காட்சி அனுபவத்தையும் இந்த சேனலிலுள்ள காணொலிகள், ‘நாய்ப்பிரியர்களுக்கு’க் கொடுக்கின்றன. இடைப்பட்ட நேரங்களில் தினமும் பள்ளி நண்பர்களுடனான Conference call உரையாடல், மாலைநேரத்து மொட்டை மாடி நடைப்பயிற்சி, அவ்வப்போது நிகழும் காலை நேரத்து யோகப் பயிற்சி என பொழுதை பயனுள்ள வகையில் போக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. நண்பர் பி.கே. சிவகுமாரின் அழைப்பின் பேரில் ஒரு நாள் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்துக்காக காணொலியில் சிற்றுரையும், உரையாடலும் அமைந்தன. இன்னொரு நாள் நார்வே திரைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காக திரைக்கதை குறித்த சிற்றுரை மற்றும் உரையாடல். காணொலிகள் மூலம் நிகழ்ந்த திரைத்துறை வேலைகள் தொடர்பான குழு உரையாடல்களின் முடிவில் கேட்கப்பட்ட ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இன்னும் யாரிடமும் விடையில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் வருகிற செய்திகளைப் பார்க்கும் போது இருந்துதான் ஆக வேண்டும். 75 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து, ஜூன் 2ஆம் தேதி இளையராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து விட்டு வந்தேன். டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், நானும் சென்ற போது வீட்டுக்குள் யாரையும் பெரியவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் இருவரும் மட்டும் சென்று தள்ளி நின்றபடி பார்த்து வணங்கி வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். ‘வருஷா வருஷம் இன்னிக்கு உங்க கூடத்தானே இருப்பேன். அதான் வந்தேன்’ என்றேன். ‘நாங்கல்லாம் வெளியே கூப்பிடும்போதெல்லாம் அண்ணன் வரல. எளுபத்தஞ்சு நாள் களிச்சு இன்னைக்கு உங்களைப் பாக்கணும்தான் வந்தாங்க’ என்றார், ஆல்பர்ட். சிரித்தபடி ‘ரொம்ப சந்தோஷம்யா. இனி வெளியே எங்கேயும் போகாதே’ என்றார், பெரியவர். இதற்குள் நான் வெளியே வந்ததை நடிகர் இளவரசுவுக்கு ஆல்பர்ட் சொல்ல, ‘யோவ். கொஞ்சம் இடைவெளி விட்டு நின்னு காப்பி குடிப்போம்யா. எவ்வளவு நாளாச்சு’ என்றார், இளவரசு. ‘ஓகே அண்ணாச்சி’ என்றேன். சாலிகிராமம் சரவணபவனில் வழக்கமாக தினமும் கூடும் நாங்கள், அன்றைக்கு தள்ளித் தள்ளி நின்றபடி காப்பி ஆர்டர் செய்தோம். சரவணபவனில் வழக்கத்துக்கு மாறாக பச்சைக் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்களை நன்கறிந்த சரவணபவன் ஊழியர்கள் முகமூடிக்குள் சிரித்தபடி, ‘ஸார். நீங்களா? அடையாளமே தெரியாம மாறிட்டீங்களே!’ என்றார்கள். முகமூடிக்குள் மறைந்து சிரித்த எங்கள் பதில் சிரிப்பை அவர்கள் கண்டுகொண்டார்கள். ‘காப்பி குடிக்கும் போது மாஸ்க்கைக் கெளட்டணும்யா. ஏற்கனவே தம்பி பிரஸாத்து மாஸ்க்கைக் களட்டாம மாஸ்க்கையும், சட்டையும் நனைச்சு இன்னொரு காப்பி வாங்கிக் குடிச்ச கத தெரியும்லா?’ என்றேன். எல்லோரும் சிரித்து, காப்பி குடித்து விலகி நின்றபடி விடைபெற்று மீண்டும் வீட்டுக்குள் புகுந்து கொண்டோம். கொரோனா குறித்த பயம், கவலை, சந்தேகங்கள் எல்லோருக்கும் இருக்கிறதுதான். நாம் கவனமாக இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. மருந்து கண்டுபிடிக்கும் போது கண்டுபிடிக்கட்டும். அதுவரைக்கும் நாமும் பாதுகாப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம். சந்தேகங்களை வளர விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சீனு ராமசாமியின் உதவியாளன் கேட்ட சந்தேகம் மாதிரி பலருக்கும் இருக்கிறதா, அறியேன். ‘அண்ணே! ரொம்ப பயமுறுத்தறாங்களேண்ணே’. ‘தம்பி! சக்கர வியாதி, ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறு இருக்கறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். அவ்வளவுதான். மத்தவங்க அவங்களவுல கவனமா இருந்துக்கிட்டாலே போதும்பா.’ ‘அப்ப பைல்ஸ் வந்தா பயம் இல்லதானண்ணே?’ இந்த அவலச்சுவை உரையாடல்களுக்கு மத்தியில் உண்மையாகவே பதற்றமடையும் நண்பர்களுக்கு கவிஞர் இசையின் ஒரு வரியைச் சொல்லி வருகிறேன். ‘எந்த மனிதனும் ஒரேயடியாகக் கைவிடப்படுவதில்லை. அவ்வளவு இரக்கமன்றதன்று

இறை’.

இதில் இறையை விரும்பாதோர், ‘றை’யன்னாவுக்கு பதிலாக ‘சை’யன்னாவைப் போட்டுக் கொள்ளலாம். ராஜதாளம் . . . May 19, 2020 by சுகா Posted in Uncategorized Tagged அஞ்சலி

,

இசை ,

புரு

,

புருஷோத்தமன்

4 Comments

பிரசாத் ஸ்டூடீயோவுக்கு வந்திருந்த தாளவாத்தியக் கலைஞர் சிவமணி குறிப்பிட்ட ஒருவரைப் பார்த்ததும் காட்டிய மரியாதையில் அத்தனை பணிவும், உண்மையும் தெரிந்தது. இளையராஜா அவர்களாலும் மற்ற மூத்த திரையிசைக் கலைஞர்களாலும் ‘புரு’ என்றழைக்கப்பட்ட புருஷோத்தமன் என்னும் ஒப்பற்ற தாளவாத்தியக்கலைஞர்தான், அவர். இன்றைய காலக்கட்டத்தில் உலகின் தலைசிறந்த தாளவாத்தியக் கலைஞராக மதிக்கப்படும் சிவமணி ஒருவரைப் பார்த்து வணங்குகிறார் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட கலைஞராக இருக்க முடியும்?! ஆனால் புரு இயல்பானவர். ‘என்னப்பா? ராஜாவைப் பாக்க வந்தியா? நல்லா இருக்கேல்ல?’ என்று கேட்டுவிட்டு தன் இசைப்பையைத் திறந்து அன்றைய இசைப்பதிவுக்கான வேலைகளைத் துவங்க ஆரம்பித்துவிட்டார். புருவின் குடும்பமே இசைக்குடும்பம். அவரது சகோதரர் சந்திரசேகர் அசாத்தியமான கிடார் கலைஞர். சந்திரசேகர்தான் ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலுக்கு கிடார் வாசித்தவர். இளையராஜாவின் ஆரம்ப கால நண்பர்களில் புரு, கிடாரிஸ்ட் சதானந்தம், கீ போர்ட் கலைஞர் விஜி மேனுவல், வயலின் இசைக்கலைஞர் வி.எல். நரசிம்மன், வயாலோ ஜூடி போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் டிரம்மராக இருந்த புரு ஒரு கட்டத்தில் இளையராஜாவின் இசைத்துணுக்குகளை வைத்துக் கொண்டு இசைக்கலைஞர்களை இசைக்க வைக்கும் பணிக்கு உயர்ந்தார். தாளத்தை வடிவமைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல் மற்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்களை கண்டக்ட் செய்யும் பணியையும் புருவையே செய்ய வைத்தார், இளையராஜா. இளையரஜாவின் இசைக்குறிப்புகளை பின்பற்றி ஒரு குழுவை இசைக்கச் செய்வதென்பது, வெறுமனே காகிதத்தில் எழுதியிருக்கும் இசைத்துணுக்குகளை வாசிக்கச் செய்து மேற்பார்வை செய்யும் சாதாரண வேலையல்ல. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி, அத்தனை இசைக்கருவிகளையும் கவனித்து, அந்தந்தத் துணுக்குகளை மிகச் சரியாக இசைக்கச்செய்து, இறுதியில் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இளையராஜா வந்து ‘ஓகே’ சொல்லும் வரைக்குமான பணி, புருவுடையது. ஆரம்ப காலங்களில் தொழில்நுட்ப வசதிகள் அத்தனை வந்திருக்காத காலத்தில் இசைக்கலைஞர்கள் அனைவரும் பாடக, பாடகிகளுடன் இணைந்து வாசிக்க வேண்டும். அதுகுறித்து இப்போதைய இசை செய்பவர்களுக்குப் புரியாது. அது அவர்களின் குறையுமல்ல. அவர்கள் இசைத்துறைக்குள் நுழையும் போதே அவர்களுக்கான பணிகள் அத்தனையையும் தொழில்நுட்பம் பல நூறு வடிவங்களில் செய்து கொடுக்கிறது. அதனால்தான் இந்த கொரோனா காலத்திலும் பல நூறு கொரோனா பாடல்கள் கொரோனாவுக்கு முன்பே மக்களை வந்தடைகின்றன. ஆனால் அப்போது அப்படியல்ல. ஒரு பாடல் பதிவின் போது யாரேனும் ஒரு இசைக்கலைஞர் தவறு செய்து விட்டாலும், மறுபடியும் முதலிலிருந்து எல்லோரும் துவங்க வேண்டும். அது இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. பாடுபவர் தவறு செய்தாலும் மறுபடியும் முதலிலிருந்துதான். கேட்பதற்கு எளிதாக இருக்கும் பாடலுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும், நேர்த்தியும் நம் காதுகளுக்குத் தெரிவதில்லை. மும்பையில் ஒரு விடுதியில் இளையராஜா அவர்களுடன் தங்கியிருந்தபோது எனது ஐ பேடில் அவரது பாடல்களை ஒலிக்கச் செய்தேன். அவருடனான வெளியூர் பயணங்களில் பொதுவாக அவர் என்னிடம், ‘நாகஸ்வரம் ஏதாவது போடேன்’ என்பார். ஆனால் இரவு நேரத்தில் அவருக்கு அவரது பாடல்களை நினைவுபடுத்துகிற விதமாக சில பாடல்களை ஒலிக்கச் செய்வது என் வழக்கம். புகழ் பெற்ற சில பாடல்கள் சிலவற்றை அவர் மறந்திருப்பார். சில பாடல்களை அதன் மெட்டு, அது இடம் பெற்ற திரைப்படம், நடித்த நடிகர், இயக்குநர் இவற்றையெல்லாம் தாண்டி அதில் வாசித்த கலைஞர்களுக்காக நினைவு வைத்திருப்பார். ‘மனிதனின் மறுபக்கம்’ திரைப்படத்தில் சித்ரா பாடிய ‘சந்தோஷம் இது சந்தோஷம்’ பாடலை நான் ஒலிக்கச் செய்தபோது, முழு பாடலையும் கேட்டு முடித்து விட்டு சொன்னார். ‘இந்தப் பாட்டுக்கு லைவ்வா புரு எப்படி வாசிச்சிருக்கார் பாத்தியா?’ இதைச் சொல்லும் போது அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தெரிந்தது. சென்னைக்கு வந்த பிறகு புருவிடம் மேற்படி சம்பவத்தைச் சொன்னேன். ‘எந்த பாட்டு?’ என்றார். கைபேசியில் உள்ள பாட்டை ஒலிக்கச் செய்தேன். ‘நான் வாசிச்சதுன்னா ராஜா சொன்னாரு?! ஞாபகம் இல்லப்பா’. ‘அதுசரி. ஒண்ணு ரெண்டு வாசிச்சிருந்தா ஞாபகம் இருக்கும்! ஓராயிரம் பாட்டுல்ல வாசிச்சிருக்கீங்க? நீங்களாவது பரவாயில்ல. அவருக்கிட்ட ‘இவளொரு இளங்குருவி’ பாட்டை சிலாகிச்சு சொன்னா, அது யாரு படம்யா? பிரபுவாங்கறாரு’. ‘அவருக்கு அதெல்லாம் எப்படிப்பா நினைவிருக்கும்? அது பிரம்மாங்கற படம் இல்ல?’ ‘ஆமா ஸார். உங்களுக்காவது ஞாபகம் இருக்கே?’ ‘நல்லா நினைவிருக்கு. அதுல இன்னும் ரெண்டு மூணு பாட்டு கூட ஒரே நாள்ல முடிச்சோம். கமல் படம்தானே?’ இளையராஜாவின் இசைக்கலைஞர்கள் இப்படித்தான். அவர்கள் வாசித்த பாடல்கள் புகழ் பெற்ற பாடல்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அன்றைய தினம் டேக் ஓகே ஆன பிறகு அவர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கும் சம்பந்தமில்லை. புரு அவர்களிடம் பல பாடல்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவரே திரையில் தோன்றும் ‘மடை திறந்து(நிழல்கள்), மற்றும் ‘இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்), பருவகாலங்களின் கனவு(மூடுபனி), கவிதை பாடு குயிலே (தென்றலே என்னைத் தொடு), வான்மீதிலே (ராகங்கள் மாறுவதில்லை), யார் யாரோ (செல்வி), என்னம்மா கண்ணு சௌக்கியமா(மிஸ்டர் பாரத்), அட மச்சமுள்ள மச்சான்(சின்ன வீடு), சங்கீத மேகம்(உதயகீதம்), ஹேய் ஐ லவ் யூ (உன்னை நான் சந்தித்தேன்), சிறிய பறவை சிறகை விரித்து(அந்த ஒரு நிமிடம்), பூ போட்ட தாவணி (காக்கிச்சட்டை), காதல் மகராணி(காதல் பரிசு), வனிதாமணி(விக்ரம்), ஒரு

காதல்

என்பது(சின்னத்தம்பி பெரிய தம்பி), ரம்பம்பம்(மைக்கேல் மதனகாமராஜன்), புது மாப்பிள்ளைக்கு(அபூர்வ சகோதரர்கள்), நீ அப்போது பாத்த புள்ள(பகல்நிலவு), கன்னிப்பொண்ணு கைமேலே(நினைவெல்லாம் நித்யா), கண்கள் ரெண்டும் (உனக்காகவே வாழ்கிறேன்), முத்தாடுதே (நல்லவனுக்கு நல்லவன்), நான் காதலில் (மந்திரப்புன்னகை), நந்தவனம் பூத்திருக்குது (இல்லம்), பாட்டிங்கே(பூவிழி வாசலிலே), அப்பப்பா தித்திக்கும் (ஜப்பானில் கல்யாணராமன்), தொடாத தாளம் (ஆனந்த்),  எனக்குத் தா (வேலைக்காரன்), இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்(சிங்கார வேலன்), ஒரு பூங்காவனம் (அக்னி நட்சத்திரம்), அஞ்சலி படப்பாடல்கள், நீ மீத நாக்கு (ராக்‌ஷசுடு – தெலுங்கு), கடப்புறத்தொரு (எஸ் எம் எஸ் – மலையாளம்), கொம்புல பூவ சுத்தி (விருமாண்டி) . . . இன்னும் பல பாடல்களைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் சில பாடல்களை நினைவுபடுத்தி ஏதேனும் சில வார்த்தைகள் சொல்லுவார். அவராக சில பாடல்களைச் சொல்வதுண்டு. அப்படி அவர் சொன்ன பாடல்களில் ஒன்று, ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படத்தின் ‘மேகம் கொட்டட்டும்’ பாடல். ‘சதாவும், சசியும் (இளையராஜாவின் கிடார் இசைக் கலைஞர்கள்) மூச்சைப்புடிச்சுக்கிட்டு பாலு ஸாரை ஃபாலோ பண்ணி பாட்டு ஃபுல்லா ஓடிக்கிட்டே இருப்பாங்க. நானும்தான். ஆனா கடைசில மிருதங்கம் வந்து ஜாயின் ஆகும் பாரு. அதுல நான் மிருதங்கத்துக்கு பதில் சொல்லி வாசிக்கணும். இப்பக் கேட்டாலும் சந்தோஷப்படறதுக்கு பதிலா பயமாத்தான் இருக்கு. என்னா பாட்டுப்பா! இப்ப என்னை அந்தப் பாட்டுக்கு வாசிக்கச் சொன்னா ஏதாவது மிஸ் ஆனாலும் ஆகும்’. பொதுவாக இளையராஜாவின் இசை குறித்து அடிக்கடி நானும், நெதர்லேண்ட்ஸில் வசிக்கும் திருநவேலி சகோதரர் விக்கி என்ற விக்னேஷ் சுப்பிரமணியமும் பேசிக் கொள்வது வழக்கம். பியானோ வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ் சுப்பிரமணியத்தின் அபிமான கலைஞர் விஜி மேனுவல். அவரைத் தவிர புருஷோத்தமன் அவர்களின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருப்பவர் விக்கி. இளையராஜாவின் இசை பற்றிப் பேசும் போதெல்லாம் எங்கள் உரையாடலில் தவறாமல் புரு இடம்பெறுவார். “உனக்காகவே வாழ்கிறேன் படத்துல கண்கள் ரெண்டும் பாட்டுல 7/8ல புரு ஸார் வாசிச்ச மாரி வாசிக்கதுக்கு இந்தியால இல்ல. ஒலகத்துலயே ஆள் கெடயாதுல்லா. அதுல அவர் குடுத்த flam paradiddles வேற யாராலயும் குடுக்க முடியாது. அதுலயே இன்னொரு பாட்டு, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’. ‘விக்கி. ராஜபார்வை வயலின் பந்துவராளி ஃபியூஷன்’ . . . ‘ஆகா. அதுல கடைசில வந்து டிரம்ல புரு ஸார் ஜாயின் பண்ற இடம்.  மத்த எல்லாரும் காணாமப் போயிருவாங்கல்லா.’ ‘ஆமா ஆமா. ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் வின்ட்லயும் புரு ஸார் நிறைஞ்சிருப்பாரே’. ‘Base drumக்கு சிறந்த உதாரணம் ஜானில செனோரிட்டா. Sammy Davis Foot steps ஸ்டைல்ல ஒரு பாட்டு உண்டே ஆனந்த் படத்துல.’ ‘தொடாத தாளம்தானே?’ ‘ஆமா. அதுல ரிதம்ல புரு ஸார் அவ்வளவு நேர்த்தியா வெளையாடிருப்பாரு. ஹை ஹாட் வாசிப்புல அவர் குடுத்த துல்லியம்’. ‘நான் தேடும் செவ்வந்திப் பூ இண்டர்லூட்ஸ்தானே?!’ ‘ஆமா ஆமா. மடை திறந்து பாட்டுலயும் உண்டே. அவர் வாசிக்கிற Feather touch playing styleலுக்காகவே ராஜா ஸார் நூத்துக்கணக்கான பாட்டை உருவாக்கிக் குடுத்திருக்காரு.’ ‘சந்தோஷம் இது சந்தோஷம் பாட்டைப் பத்தி சொல்லும் போது ராஜா ஸார் இதைத்தான் சொன்னார் விக்கி.’ ‘படித்துறை’ திரைப்படத்துக்காக திருநெல்வேலியிலிருந்து கணியன் இசைக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்திருந்தேன். பாடல் பதிவு மற்றும் ரெக்கார்டிங் ஸ்டூடியோ பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத அந்தக் கலைஞர்கள் வாசித்ததை புருதான் கண்டக்ட் செய்தார். இளையராஜாவிடம் அவர்களின் வாசிப்பை வியந்துத் தள்ளினார். அவர்கள் வாசிக்கும் போது அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆடியபடிதான் கண்டக்ட் செய்தார். சொல்லப்போனால் அந்தக் கலைஞர்களை அழைத்து வந்ததனாலேயே என்னுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் மிகச் சிறந்த டிரம்ஸ் கலைஞர்களான நோயல் கிராண்ட்,  ஃபிரான்கோ வாஸ் போன்றோருக்கு இணையான மரியாதைக்குரிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமான செய்தி வந்த இன்றைய நாளில் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படத்தின் ‘கண்ணன் வந்து பாடுகிறான்’ பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் தாளத்தில் புருஷோத்தமன் அவர்களையும், கூடவே ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களையும் நினைத்துக் கொள்கிறேன். ஒப்பற்ற தாளவாத்தியக் கலைஞர் புருஷோத்தமன் அவர்கள் காலமான இன்று ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் பிறந்தநாள். மகானுபாவர் . . . February 18, 2020 by சுகா Posted in அணிந்துரை Tagged பாட்டையா

,

பாரதிமணி

,

வாசகசாலை

3 Comments

“ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவிலைச்சுற்றி கோட்டை. நான்கு திக்குகளிலும் வாசல் உண்டு. அதில் கிழக்கே கோட்டை பிரசித்தம். அதன்  பக்கத்தில் பழவங்காடி பிள்ளையார் கோவில். அவர் நல்லவர்களும், கெட்டவர்களும் வேண்டுவதைத் தரும் கடவுள். எப்போதும் சிதர்த்தேங்காய் உடைபட்டுக்கொண்டிருக்கும். இந்தத்தேங்காயை வருடாந்திர ஏலத்தில் கொள்முதல் செய்து பணக்காரர்களானவர் பலர். கிழக்கே கோட்டையிலிருந்து தொடங்குகிறது சாலைக்கடை பஜார். நீல. பத்மநாபன் நாவல்களிலும், ஆ. மாதவன் சிறுகதைகளிலும், கிருஷ்ணப்பருந்து போன்ற நாவல்களிலும் வரும் பாத்திரங்கள் உண்டு, உறங்கி வாழ்ந்த களன். வருடாவருடம் பத்மநாபஸ்வாமி கோவிலில் ஆறாட்டு, முறை ஜபம் நடைபெறும். பனிரெண்டு வருஷங்களுக்கு ஒருமுறை ‘லட்சதீபம்‘.

. முறை

ஜபத்துக்கு, நூற்றுக்கணக்கான நம்பூதிரிகள் வரவழைக்கப்பட்டு, பத்மதீர்த்தத்தில் இடுப்பளவு தண்ணீரில் நின்று ஜபிப்பார்கள். ஒன்றுக்கும் உதவாதவனைக்   குறித்து, அங்கு ஒரு சொலவடை உண்டு. “மொண்ணைத்தடியனெஎந்தினுகொள்ளாம்? முறைஜபத்தினுதூணினுகொள்ளாம்’!ஆறாட்டுக்கு  நாட்டையே ஆண்டுவரும் உற்சவமூர்த்தியை பல்லக்கில் அலங்கரித்து, யானை, குதிரை காலாட்படையுடன் பத்மநாபதாசனான மகாராஜா, கையில் வாளுடன் மார்பில் பச்சைக்கல் அட்டிகை பளபளக்க, மணல்  விரித்த தார் ரோட்டில் வெறுங்காலுடன் பத்துமைல் நடந்து சங்குமுகம் கடலில் நீராட்ட அழைத்துச் செல்வார்.. இந்த உற்சவத்தில் கலந்துகொள்ள சுசீந்திரம் கோவிலிலிருந்து ‘குண்டணி‘ அம்மனும், குமார கோவிலிலிருந்து முருகப்பெருமாளும் பல்லக்கில் 50 கி.மீ. பயணம் செய்து திருவனந்தபுரம் வருவார்கள். வழியில் எதிர்ப்படும் பழையாறு, குழித் துறையாறு, நெய்யாறு, கரமனையாறு, கிள்ளியாறு இவற்றைக்கடப்பதற்கு அவர்களுக்கு தனி பேட்டா அலவன்ஸ் கொடுக்கவேண்டும்! குண்டணி அம்மன் முருகப்பெருமானுக்கு முன்னதாக ஓடிச்சென்று, முருகன் ஒரு குறத்தியை மணந்து கொண்டதால், அவருக்குத் தீட்டு, அவரைச்சேர்க்கக்கூடாது என்று கோள் சொல்லுவாள். அதையறிந்த முருகன் கோபித்துக்கொண்டு, உற்சவத்தில் பங்கு பெறாமல், ஆரிய சாலைக் கோவிலுக்குத் திரும்பிவிடுவார். இப்போதும் நாஞ்சில் நாட்டில், கோள்மூட்டிவிடும் பெண்களை, ‘குண்டணிஅம்மன்‘ என்று பரிகசிப்பார்கள்!” தன்னை எழுத்தாளன் அல்லன் என்று சொல்லிக் கொள்ளும் ‘பாட்டையா’ பாரதி மணியின் வரிகள் இவை. இதை முதல் முறையாகப் படிக்க நேரும் எந்த ஒரு வாசகனும் வாய் கூசாமல் பாட்டையா சொல்லும் பொய்யை நம்ப மாட்டான். நிச்சயம் இது யாரோ ஒரு தேர்ந்த எழுத்தாளர் எழுதியது என்றுதான் அவன் மனம் நம்பும். பத்மநாபஸ்வாமி கோயிலையும், அது அமைந்திருக்கிற பிரதேசத்தையும் பற்றி அறிந்திராதவர்களைக் கூட தனது எழுத்து மூலம் கண் முன்னே காட்சிகளாக விரித்துக் காண்பிக்கிற வித்தை அறிந்த பாட்டையா லேசுபட்ட ஆள் இல்லை. அவரோடு பழகும் பேறு கிடைத்தவர்களுக்கு எழுத்தில் அவர் சொல்லாமல் விட்ட ஏராள ‘தாராள’ விஷயங்களை மூச்சு வாங்க அழுத்த்த்த்தம் திருத்த்த்தமான உச்சரிப்பில் பாட்டையா சொல்லி அற்புதமான அனுபவத்தை வழங்குவார். அடிப்படையில் நல்ல ரசிகனே கலைஞனாக உருவாக முடியும் என்பதற்கு பாட்டையா ஓர் உதாரணம். நார்த்தங்காய் ஊறுகாயோ, நாரோயில் பெண்களோ, நிகம்போத் சுடுகாடோ எதைச் சொன்னாலும் அதை பார்க்க, ரசிக்க, ருசிக்க, மகிழ, கலங்க வைக்கும் வார்த்தைகளை சாயம் ஏதும் சேர்க்காமல் சுத்தமாக நமக்குக் கொடுப்பார். பாட்டையாவுக்கு வாய்த்த அனுபவங்களைக் கேட்கும் போதெல்லாம் எந்த ஒரு மனிதருக்கும் அவர் மேல் பொறாமையும், ஆச்சரியமும் ஏற்படும். பொறாமை அவரது பரந்துபட்ட அனுபவங்கள் குறித்து. ஆச்சரியம் அவரது நினைவாற்றல் குறித்து. பதின்வயது வரையிலான அவரது பார்வதிபுரம் வாசமும், பின் தமது நீண்டகால தில்லி வாழ்க்கையும், பாரதி திரைப்படத்துக்குப் பிறகான சென்னை ஜாகையும், தற்போதைய பெங்களூரு வசிப்பும் குறித்த அனுபவங்கள் எல்லாமே அவர் மனதில் தேக்கி வைத்திருந்து நமக்குச் சொல்பவை. குறிப்பு எழுதி வைத்து, தேவைப்படும் போது எடுத்துப் பார்த்து, மூக்குக் கண்ணாடியை மேல் தூக்கி வெளிச்சத்தில் வைத்து கவனமாகப் படித்து சரிபார்த்து சொல்லப்படுபவை அல்ல. பாட்டையாவின் ருசியுணர்வைப் பற்றி அவரோடு பழகியவர்களும், அவரை வாசித்தவர்களும் அறிவர். நான் கூட ஒரு கட்டுரையில் ‘பாட்டையாவின் நாக்கு நாலு முழமல்ல. நாப்பது முழம்’ என்று எழுதியிருக்கிறேன். இதுதொடர்பாக ஒரு சம்பவம். ஒரு படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்செந்தூரிலிருந்துக் கிளம்பி திருநவேலி ரயில்வே ஸ்டேஷனுக்குக் காரில் வந்து கொண்டிருக்கிறார், பாட்டையா. வருகிற வழியில் ஓலைக்கூரை போட்ட கடை ஒன்றிலிருந்து கிளம்பி வருகிற புகையில் மசால் வடையின் மணத்தை பாட்டையாவின் மூக்கு கண்டுபிடித்து விடுகிறது. (எங்கள் ஊரில் அது ஆமவட) டிரைவரை வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, நூறு ரூபாய்த்தாளைக் கொடுத்து வடை வாங்கி வரச் சொல்லுகிறார். ‘நூறு ரூவாய்க்கு சில்லறை இல்லம்பானே ஐயா!’ ‘எனக்கு சில்ற வேண்டாம்பா.’ ‘என்னய்யா சொல்லுதிய?’ ‘நூறு ரூவாய்க்கும் வட வாங்கிட்டு வாங்கென்’. வாழை இலையில் வடைகளையும், உடன் நறுக்கி மடக்கிய மற்றொரு சிறு இலையில் தேங்காய் சட்னியும் வைத்து தினத்தந்தி பேப்பரில் மடக்கி வாங்கி இரண்டு கைகளிலும் ஏந்தி வந்து பாட்டையாவின் கைகளில் கொடுக்கிற வரைக்கும் அந்த ஓட்டுநரின் மனதில், ‘இப்படி ஒரு கோட்டிக்காரக் கெளவரு இந்த ஒலகத்துல உண்டுமாய்யா?’ என்றுதான் நினைத்திருப்பார். வடையை வாங்கிய பின் பாட்டையா செய்த முதல் காரியம், ‘இந்தாடே! ரெண்டு வட தின்னு’ என்று அந்த ஓட்டுநரிடம் கொடுத்ததுதான். ஓட்டுநரின் மனதில் பாட்டையா இன்று வரைக்கும் ஆமவடயின் மணத்தோடு சம்மணம் போட்டு அமர்ந்திருப்பார். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் பாட்டையா ஏறி அமரவும் ரயில் கிளம்புகிறது. அவரது இருக்கைக்கு அருகே ஓர் இளம் நடிகையும், அவரது தாயாரும் வந்து அமர்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பசி. இரவுணவு ஏதும் வாங்கியிருக்கவில்லை. அவர்களது ரகசிய சம்பாஷணை பாட்டையாவின் பாம்புக்காதுகளில் பதிகிறது. இவர் கையில்தான் ஊருக்கே பரிமாறும் அளவுக்கு வடை புதையல் இருக்கிறதே!. ‘கொளந்தே! (பாட்டையா விளித்தது தாயை) என்கிட்ட மசால் வடை இருக்கு. உனக்கு சங்கோஜம் இல்லேன்னா தர்றேன். அபார ருசி. இப்பதான் பதினேளாவத உள்ளெ தள்ளினென். சட்னி முளுசையும் நக்கித் தள்ளிரல. நெறயவே இருக்கு. தரட்டுமா?’ ஒரு சின்ன தயக்கத்துக்குப் பிறகு தாயும், மகளுமாக பாட்டையாவின் வடைவிருந்தோம்பலில் பசி ஆறியிருக்கிரார்கள். பாட்டையாவின் மன விசாலத்தின் நீளத்தை எந்த சர்வேயராலும் அளக்க முடியாது. இது போன்ற பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் நீங்கள் வாசிக்கலாம். இவை கழியும் பழங்கதைகள் அல்ல. காலம் கடந்து வாசிக்க இருக்கும் பிற்கால சந்ததியினர் மனதில் புகுந்து பதிய இருக்கும் புத்தம்புதுமையான எழுத்து. பாட்டையா பாரதி மணி என்னும் மனிதருக்கு எப்போதும் மனிதர்களிடையே இருக்க வேண்டும். மனிதர்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் மனுஷாள் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவரது வாழ்வின் நோக்கமே அதுதான். தன்னை விரும்புகிற, தான் விரும்புகிற மனிதர்களை அவராகவே அழைத்து விளித்து பேசுவது அவரது வழக்கம். தொலைபேசியில் என்னை எதிர்பாரா சந்தர்ப்பத்தில் அழைப்பார். எடுத்த எடுப்பிலேயே, ‘முட்டாப்பயலே! உன் சத்தம் என் காதுல விளுந்து எத்தனை நாளாச்சு தெரியுமால? அதுக்குத்தான் கூப்பிட்டேன்’ என்பார். நானெல்லாம் ஆள் கூட்டத்தில் தனியன்.

அத்தனை

ஜனசமுத்திரத்திலும் தனியாக மனதுக்குள் வேறெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பவன். ஆனால் பாட்டையா என்னும் அபூர்வ மனிதர் தனிமையிலும் சபை நடுவே இருப்பவர். பெங்களூரு இல்லத்தில் தனியறையில் அநேகமாக இந்த சமயம் பாட்டையா முன் அமர்ந்து காருக்குறிச்சி அருணாசலம் ‘சக்கனி ராஜ’ வாசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் உரிமையாக பாட்டையா ‘அருணாச்சலம்! கொஞ்சம் ‘ஈ வசுதா வாசியும். ஒம்ம சஹானா கேட்டு நான் அளனும்’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். சற்றுநேரத்தில் பாலக்காடு மணி ஐயர் ‘மதுராபுரி நிலயே மணிவலயே’ பாடிக் கொண்டிருப்பார். நாம் அவரை தொந்தரவு செய்யாமல் அறைக்கு வெளியே நின்று கேட்போம். நடைச்சித்திரம் . . . January 29, 2020 by சுகா Posted in அனுபவம் , கட்டுரை

, பாலு

மகேந்திரா 2 Comments 90களின் துவக்கத்தில் சாலிகிராமம் அபுசாலி தெருவில் ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே வந்த கே.ஜே.யேசுதாஸின் ஒன்று விட்ட சகோதரர், வாத்தியாரைப் பார்த்து பதறி வணங்கி, ‘என்ன ஸார் இது? நீங்க நடந்து போறீங்க?’ என்றார். ‘ஏன்? நான் நடந்தா என்ன?’ என்றார், வாத்தியார். ‘வேணும்னா தம்பிய போகச் சொல்லலாமே! நீங்க போய் நடந்துக்கிட்டு?’ என்னைக் காண்பித்து சொன்னார். ‘எனக்காக நானும், அவனுக்காக அவனும் நடக்கறான்’. வாத்தியாரின் பதில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை என்பது அவரது முகபாவனையில் தெரிந்தது. ‘என்னவோ போங்க’ என்பது போல நகர்ந்து சென்றார். ‘வாடா போகலாம்’. சிரித்தபடி வாத்தியார் நடையைத் தொடர, நானும் அவரைத் தொடர்ந்தேன். சாலிகிராமத்துக்குள்ளேயே எங்கு செல்வதாக இருந்தாலும் வாத்தியார் நடந்துதான் செல்வார். அப்போதெல்லாம் அநேகமாக வாரத்தில் நான்கு நாட்கள் பாண்டி பஜார் நடைபாதைக் கடைகளையொட்டி வாத்தியாரும், நானும் நடந்து செல்வோம். சும்மா நடப்பதும் உண்டு. அது தவிர சின்னச் சின்ன ஆபரணங்கள், துணிமணிகள் உட்பட இன்னும் சில கலைப்பொருட்களை அங்குள்ள நடைபாதைக் கடைகளில்தான் வாத்தியார் தேர்ந்தெடுத்து வாங்குவார். அங்கும் எதிர்ப்படும் மனிதர்கள் கேட்கும் ‘என்ன ஸார் நடந்து வர்றீங்க?’ கேள்விகளைப் பொருட்படுத்தாமல் அடுத்த கடைக்குச் செல்வோம். ஒருமுறை அப்படி ஒரு நடைபாதைக் கடையில் பின்னணி பாடகி எஸ்.ஜானகியைக் கண்டோம். ஜானகி அம்மாவும், வாத்தியாரும் பரஸ்பரம் ‘என்ன நடந்து வர்றீங்க?’ என்று கேட்டுக் கொள்ளவில்லை. ‘வாக்கிங்’ போவதற்காகப் பூங்காக்களையோ, கடற்கரையையோ நாடாமல் நாம் இருக்கும் பகுதியிலுள்ள தெருக்களிலேயே நடப்பது என்கிற முடிவை எடுக்க வைத்தவர், வாத்தியார்தான். முன்பெல்லாம் சாலிகிராமம் அருணாசலம் சாலையில் நடப்பதுண்டு. சூர்யா மருத்துமனைக்கு அருகிலுள்ள ‘திருநெல்வேலி ஹோட்டல்’ கதிர் கண்களில் சிக்கிக் கொள்வேன். ‘என்னண்ணே! ஆளையே காணோம்?’ கதிரின் தாயுள்ளம் கொண்ட வாஞ்சைக் குரல், சில நொடிகளில் வாழை இலையில் வைக்கப்பட்ட வடைகளின் முன் உட்கார வைத்துவிடும். கூடவே முறுகலான எண்ணெய் தோசையும் வந்து அமரும். ஒருகட்டத்துக்குப் பின் அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்த்து, நடேசன் நகர் பக்கம் நடையைத் திருப்பினேன். அங்கும் சாத்தான் காத்திருந்தது. அங்குள்ள ‘சுவாமிநாத் கபே’யின் உரிமையாளர்

என்னவோ

கும்பகோணத்துக்காரர்தான். ஆனால் அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் திருநவேலி ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் கல்லிடைக்குறிச்சி ஆச்சி ஒருத்தி இருக்கிறாள். என் நேரத்துக்கு  கடையை ஒட்டி வெளியே காபி போட்டுக் கொண்டிருக்கும் அவள் கண்களில் சிக்கிக் கொள்வேன். ‘என்னய்யா? பாத்தும் பாக்காத மாரி போறே?’ ‘இல்ல பெரிம்ம. ஒன்னப் பாத்துட்டுதானெ ரோட்ட க்ராஸ் பண்ணி வாரென்’. பிள்ளேள்லாம் சும்ம இருக்கா? இப்போதைக்கு ஊருக்குப் போனியா? நான் போறதுக்கு ரெண்டு மாசம் செல்லும். கோயில் கொட வருதுல்லா’. கல்லிடைக்குறிச்சிக்காரியின் வட்டார வழக்குப் பேச்சில் மயங்கி காபிக்கு முன், இட்லி மற்றும் பூரி கிழங்கு சாப்பிடுவேன். சுவாமிநாத் கபேயில் சாப்பிடும்போதெல்லாம் அண்ணாச்சி இளவரசுவிடம் மாட்டுவேன். ‘யோவ்! நீ வாக்கிங் போற லட்சணத்த தயவு செஞ்சு வெளிய சொல்லி கில்லித் தொலச்சுராதே. ஒருத்தன் மதிக்க மாட்டான். ஏன் பூரியோட நிறுத்தறே? ஒரு ரவா சொல்லி சாப்பிடேன்’. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுவாமிநாத் கபேக்கு எதிரே உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கு தினமும் செல்வது இளவரசு அண்ணாச்சியின் வழக்கம். அவர் உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும் அந்த ஜிம்முக்குச் சென்று எல்லோருடனும் மனம் விட்டுப் பேசிவிட்டு, களைப்புடன் சுவாமிநாத் கபேக்கு வந்து சீனியில்லாத காபி குடித்துவிட்டு செல்வார். நடேசன் நகர் பக்கம் நடைப்பயிற்சி செல்வதும் சரிவராத காரணத்தால் மீண்டும் சில நாட்கள் அருணாசலம் சாலைப் பக்கம் தொடர்ந்தேன். இந்தமுறை மனக்குரங்கு திருநவேலி ஹோட்டல் கதிர் அழைக்காமலேயே உள்ளே இழுத்துச் செல்லத் துவங்கிவிட்டது. ‘அப்புறம் கதிரு! என்ன ஒன்னய ஆளையே காங்கல?’ ‘நான் இங்கனயேதானெண்ணெ கெடக்கென். நமக்கு எங்கெ போக்கெடம் சொல்லுங்க. இன்னொரு வட வைக்கட்டுமா?’ தனியாக அமர்ந்து ‘எங்கே தவறு நடக்கிறது?’ என்று யோசித்துப் பார்த்து ஹோட்டல்கள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் நடக்க தீர்மானம் செய்து உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கினேன். சாலிகிராமம் காந்தி நகரைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டுக்கு நான்கைந்து வீடுகள் தள்ளி உள்ள ஒரு வீட்டு வாசல் கேட் அருகே போகிற வருகிற ஜனங்களை வேடிக்கை பார்க்கும் ‘கியூட்டி’ என்கிற லாப்ரடார் வகை நாயைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்கள் ஆகும். கியூட்டியிடமும், அவளை மகள் போல வளர்க்கும் மனிதரிடமும் நின்று பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. சில நேரங்களில் கியூட்டியைப் பார்க்காமல் நடந்து போனால் சத்தம் போட்டு ‘கியூட்டி’ அழைக்கும். குரலில் ‘மாமா’ என்று கேட்கும். ‘இப்படி பாக்காம போகாதீங்க ஸார். அப்புறம் அவ அப்ஸெட் ஆயிடுவா’. கியூட்டியுடன் சில நிமிடங்கள் செலவழித்துவிட்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தால் அங்கு ‘ரூனோ’ காத்திருப்பான். ‘ரூனோ’ பீகிள் வகையைச் சேர்ந்த பையன். ‘கியூட்டியை’யாவது அவள் வீட்டு வாசலில் நின்று கொஞ்சுவதோடு ஜோலி முடிந்துவிடும். ஆனால் ‘ரூனோ’வுக்கு என்னுடன் வெளியே ஒரு ரவுண்டு வர வேண்டும். அவன் வீட்டு ஆட்கள் என் தலையைப் பார்த்ததும் அவன் கழுத்துப் பட்டையில் ஒரு வாரைப் பொருத்தி என் கைகளில் கொடுத்து விடுவார்கள். அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று விட்டு, அவனை வீட்டில் விட்டுவிட்டு நான் வீடு திரும்பிவிடுவேன். இப்படியே போச்சுன்னா நாம நடந்த மாதிரிதான் என்று தோன்றவே வடபழனி குமரன் காலனியைத் தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன். அங்குதான் திரைப்பட தயாரிப்பு நிர்வாக உதவியாளர்கள் சங்கம் இருக்கிறது. அதை கவனிக்காமல் அது வழியாக நடந்து சரியாக கோபாலிடம் மாட்டிக் கொண்டேன். ‘ஸாஆஆஆர்! வண்டில ஏறுங்க’. கிட்டத்தட்ட மிரட்டினான்,

கோபால்.

‘கோபால். சொன்னாப் புரிஞ்சுக்கோ. நான் கொஞ்சம் நடக்கணும்’. ‘நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன். வண்டில ஏறப்போறீங்களா, இல்லியா?’ கோபாலால் தெருகடத்தப்பட்டு என் வீட்டுக்குள் அடைக்கப்பட்டேன். குமரன் காலனியை ஒட்டியுள்ள தெருக்களில் நடக்கலாமே! அங்கு யார் நம்மை என்ன செய்து விட முடியும்? சுமுகமாக நடக்க முடிந்தது. சில தினங்கள்தான். அங்கு(ம்) ஒரு சினிமா பட்டறை இருப்பதை கவனிக்கத் தவறினேன். விளைவு, ‘அப்பத்தாவை ஆட்டயைப் போட்டுட்டாங்க’(ஆம். அதுதான் படத்தின் பெயர்) திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீஃபனால் மறிக்கப்பட்டேன். வழக்கமான ‘என்ன ஸார் நடந்து போ . . .’. ஸ்டீஃபனை முடிக்க விடவில்லை. ‘ஆமா ஸ்டீஃபன். நான் நடந்து போயிக்கறேன். நீ பைக்கை ஆஃப் பண்ணு’. திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். அதற்கு அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள். குமரன் காலனியையும், அருணாசலம் சாலையையும் இணைக்கிற சாலைத் திருப்பத்தில் ‘பரணி டப்பிங் தியேட்டர் இன்சார்ஜ்’ தனகோடியின் கைனட்டிக் ஹோண்டா என் மீது மோதியது. வண்டியில் தனகோடி இருந்தார். தூயசினிமா பாஷையில் ‘ஜி’ என்றழைத்தபடி தனகோடி என் கைகளை எட்டிப் பிடித்தார். தனகோடி அணிகிற சட்டைத்துணியில் என் அளவுக்கு நான் ஆறு முழுக்கை சட்டையும் மூன்று கைக்குட்டைகளும் தைத்துக் கொள்ளலாம். அத்தனை அகலமான மனிதர். உள்ளமும் குறைச்சலில்லை. ‘எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ஜி, நீங்க நடந்து போறதப் பாக்கறதுக்கு’. கண்கள் கலங்க முயன்றன. ‘நீங்க கலங்கற அளவுக்கு ஒண்ணும் ஆகல தனகோடி. ‘பழமுதிர்சோலை’க்கு வந்தேன். பளம் வாங்கிட்டு அப்படியே நடந்து போகலாம்னு பிளான். நீங்க கெளம்புங்க’. இன்னொரு நாள் இருட்டியபிறகு திருநவேலி ஹோட்டல் வரைக்கும் செல்லாமல் அருணாசலம் சாலையின் பாதிதூரம் வரைக்கும் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு காரில் என்னைக் கடந்து சென்ற கவிஞருமான ‘கவிஞர் சிநேகன்’ ஒரு நொடி காரின் வேகத்தைக் குறைத்து, பிறகு என்ன நினைத்தாரோ, நல்ல வேளையாக ஒரு கவிஞருக்கேயுரிய இலாவகத்துடன் காரை வேகமாகச் செலுத்தினார். ஒரு கவிஞர் போல ஒப்பனைக்கலைஞர் இருக்க வேண்டிய அவசியமில்லையே! அமரர் தமிழ்வாணனின் தொப்பியைப் போன்ற தொப்பி அணிபவர் திரைப்பட ஒப்பனைக் கலைஞர் ராமச்சந்திரன். கலைஞர் கருணாநிதி சாலை என்கிற கே கே சாலையிலுள்ள நாட்டு மருந்து கடை அருகே வரும் போது எதிரே தெரிந்த ராமச்சந்திரனின் தொப்பியை சரியாகப் பார்க்காமல் விட்டதன் விளைவு, ராமச்சந்திரன் என் கைகளில் பணத்தைத் திணிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. ‘ஆட்டோல போங்க ஸார். ஏன் ஸார் நடந்து போறீங்க? உங்கக்கிட்ட காசு இல்லங்கறது புரியுது. நான் தரேன் ஸார்’. கிட்டத்தட்ட ஓட்டமும், நடையுமாக ராமச்சந்திரனிடமிருந்துத் தப்பி வந்தேன். இனிமேல் பக்கத்து வீட்டுக்கே ஊபர்லதான் போக வேண்டியது வருமோ என்கிற கவலையை என்னைத் தெரிந்த சொற்ப மனிதர்கள் எனக்கு அளித்து வருகிறார்கள். சென்ற மாதத்தில் தசரதபுரம் போலீஸ் பூத் தாண்டி மீன் மார்க்கெட்டுக்கு முந்தைய வளைவில் உள்ள தெருவில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ‘நாசே’ ராமச்சந்திரன் வீட்டுக்கு முன் நடந்து வரும்போது, முற்றிலும் முகம், கைகளை மறைத்து துணி சுற்றிய ஒரு பெண் தனது டூ வீலரால் என்னை மறித்து என்னைத் திடுக்கிட வைக்கும் விதமாக ‘ஸா . . . .ர்’ என்று அலறி வண்டியை அவசர அவசரமாக சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார். யாராக இருக்கும் என்று நான் யோசிப்பதற்குள் முகமூடியை அவிழ்த்தபடியே, ‘என்னைத் தெரியலியா ஸார்? நான் தான் பேச்சியம்மாள்’ என்றார். ‘அடிப்பாவி, நீயா? நான் பயந்துல்லா போனேன். எங்கெ இந்தப்பக்கம்?’ ‘பக்கத்து ஸ்டிரீட் டப்பிங் தியேட்டர்ல ஒரு டப்பிங். நம்ம விஜிமேடம்தான் இன்சார்ஜ். அத முடிச்சுட்டு வரேன்.’ பேச்சியம்மாளுக்கு சொந்த ஊர் சங்கரன்கோயில். ‘அசுரன்’ திரைப்படத்தில் இரண்டு, மூன்று கதாபாத்திரங்களுக்கு மாற்றி மாற்றிப் பேச வைத்திருந்தேன். பேச்சியம்மாள் வாயிலிருந்தும் அதே கேள்வி: ‘என்ன ஸார் நடந்து போறீங்க?’ ‘யம்மா! என் வீடு பக்கத்துலதான் இருக்கு. முடி வெட்டிட்டு அப்படியே நடந்து வாரென்.’ ‘அதுக்காக நீங்க நடந்து போகலாமா? என்னால பாத்துட்டுப் போக முடியல. நீங்க என் குருல்லா’. ‘ஏ பிள்ள! அன்னா தெரியுது பாரு ஒரு பில்டிங்கு. அதான் என் வீடு. நீ கெளம்பு’. சற்று கண்டிப்பான குரலில் சொல்லி பேச்சியம்மாளை அனுப்பி வைத்தேன். இதைப் படித்த யாரேனும் சாலிகிராமத்திலுள்ள காந்தி நகர் மற்றும் வடபழனி குமரன் காலனி தெருக்களில் சுட்டெரிக்கும் வெயிலில் கூட குரங்கு குல்லா அணிந்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றி, கருப்பு கூலிங் கிளாஸ் போட்டு, முகத்தை மறைக்கும் விதமாக கைக்குட்டை கட்டி ஓர் உருவம் நடந்து செல்வதைப் பார்த்தீர்களானால் ஏதோ வடநாட்டு சம்பல் கொள்ளைக்காரனென்றோ, பிள்ளை பிடிக்கிறவன் என்றோ நினைத்து ‘ஒன்று பூஜ்யம் பூஜ்யம்’ எண்ணை அழைத்து விடாதீர்கள். அவன்

பாவம்.

பைரவ ப்ரியம் December 7, 2019 by சுகா Posted in அனுபவம் , நாய்கள் Tagged நாய்கள்

8 Comments

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேலென்னான் அவனொருவன் தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால் தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத்

தடவீரே!

‘என்னய்யா இப்பிடி உருகி உருகி பாடியிருக்கா!’ எடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் ஆரம்பிப்பார், கோலப்பன். நான் தான் லூசு மாதிரி சம்பிரதாயமாக ‘ஹலோ’வில் துவங்கி நல்லா இருக்கேளா கோலப்பன்? பிள்ளேள்லாம் சும்ம இருக்கா?’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அதற்குள் கோலப்பன் தான் சொல்ல வந்ததில் பாதி சொல்லி முடித்திருப்பார். மூத்த பத்திரிக்கையாளர் கோலப்பனை அபூர்வமாக தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கலாம். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பணிபுரியும் கோலப்பன், நாஞ்சில் நாட்டுக்காரர். பறக்கை என்னும் கிராமத்துச் சிறுவன் கோலப்பனை இன்னும் பத்திரிக்கையாளர் கோலப்பன் தொலைத்து விடாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். ஆண்டாளின் பாடலை வியப்பதில் துவக்குவார், கோலப்பன். “நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது. கூறாதோ நான் படும் பாடுகள்

நூறு.

நானொரு ஆண்டாளோ திருப்பாவைப்பாட ஏழையை விடலாமோ இதுபோல வாட” என்று ‘மோகமுள்’ திரைப்படத்தின் பாடலுக்குத் தாவுவார். ‘அதென்னய்யா சண்முகப்ரியால இந்தப் பாட்டப் போட்டுட்டாரு? வளக்கமா பக்திக்குத்தானே அந்த ராகத்துல பாட்டு போடுவாங்க?’ கேட்டுவிட்டு அவரே பதிலும் சொல்லிக்கொள்வார். ‘அதுசரி. பக்தியும், காதலும், காமமும் கிட்டக் கிட்டதானெ கெடக்கு!’ நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவரே இப்படி தொடர்வார். ‘ஒருவேளை ஆண்டாள் மாரியே தங்கம்மாவும் நாச்சியார் திருமொளியோ திருப்பாவையோ பாடியிருந்தா அவளுக்கு அந்தப் பய பாபு கெடச்சிருப்பானோய்யா?’ கோலப்பனின் தொலைபேசி அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் அமையும். மின்னஞ்சலில் ஏதேனும் இசைத்துணுக்குகள் அனுப்பி வைத்து ராகம் குறித்து கேட்பார். ‘சுகா. இந்த மலயாளத்தான் பாட்டு காம்போதிதானெ?’ பதில் அனுப்புவதற்குள் ஃபோன் பண்ணுவார். ‘காம்போதிதான், கோலப்பன்.’ ‘அவ்வொ அம்மையும் அப்பனும் தேனும், பாலுமா சிவபெருமானுக்கு அபிசேகம் பண்ணியிருப்பாங்கய்யா. இல்லென்னா சவம் இப்பிடி தொண்ட வாய்க்குமா சொல்லுங்கொ’. கோலப்பனுக்கு ஆழ்வார் பாசுரங்கள், கர்நாடக சங்கீதம், குறிப்பாக நாகஸ்வரம், நாஞ்சில் நாட்டு உணவு, மற்றும் தி. ஜானகிராமன், கிருஷ்ண பிரேமி இவையெல்லாம் அத்தனை இஷ்டம். பெரும்பாலும் அவரது பேச்சு இவற்றைச் சுற்றிதான் இருக்கும். இதெல்லாம் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு. சமீபகாலமாக கோலப்பனின் விருப்பம், சிந்தனை, பேச்சு எல்லாமே ஒரே விஷயம் குறித்து மட்டுமாகி விட்டது. ஜெயமோகன் ஒருமுறை சொன்னார். ‘இப்பல்லாம் கோலப்பன் நாயைத் தவிர வேற எதைப் பத்தியும் பேசறதில்ல. கவனிச்சீங்களா?’ சென்னையில் கோலப்பனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மனைவி, மகன், மகளுடன் வசிக்கும் கோலப்பனின் வீட்டின் இன்னொரு பக்கம் கோலப்பனின் வயதான மாமியாரும் வசிக்கிறார். கோலப்பனின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டும். அவ்வப்போது எண்ணிக்கை கூடும், குறையும். வீட்டுக்குள் நாம் நுழைந்ததும் முதலில் ஒரு கோம்பை நாய் வந்து நம்மை வரவேற்கும். அடுத்து வெளிநாட்டு சொகுசு வகை நாயான பீகிள் வந்து வாலாட்டும். அதற்குப் பின்னாலேயே வேட்டை நாய்களான சிப்பிப்பாறையும், ராஜபாளையமும் நம்மைப் பார்த்து முறைத்து பின் சிரிக்கும். ‘ஏ பிள்ளேளா! ஆரு வந்திருக்கா தெரியுதா? உள்ளெ வாங்கொன்னு கூப்பிடுங்கொ’. இப்படி சொல்வது கோலப்பனின் இல்லாள். அந்த வகையில் கோலப்பன் அதிர்ஷ்டக்கட்டை. அவரது குடும்பமே பைரவ ப்ரியர்கள்தான். ‘அத ஏன் கேக்கியோ? நேத்து இந்தச் சின்னப்பய என்ன பண்ணுனான் தெரியுமாய்யா? என் சாக்ஸைத் தூக்கிக் கொண்டு போயி எங்கனயோ ஒளிச்சு வச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாரி என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு நிக்கான். எல அப்பா சாக்ஸ எடுத்தியான்னு நானும் கேக்கேன். அவொ அம்மையும் கேக்கா. வாயத் தொறப்பனான்ட்டாம்யா’. கோலப்பனின் சின்னப்பையனான பீகிள் நாய்க்குட்டியை உற்றுப் பார்த்தேன். பதிலுக்கு அதுவும் என் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு தலையைக் கவிழ்ந்து கொண்டதோடு சரி. என்னிடமும் ஒரு வார்த்தை சாக்ஸைப் பற்றிப் பேசவில்லை. நாய்களை பெற்ற பிள்ளைகளாகக் கருதும் பெற்றோருடன் அவை பேசும்தான். பல வீடுகளில் செல்ல நாய்களுடன் அமர்ந்து குடும்பக் கதைகளைப் பேசும் மனிதர்களை, நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது நாட்டு நடப்புகளை நாயுடன் பேசிக் கொண்டே செல்பவர்களை, பள்ளிக்கூட வேன் வரைக்கும் வந்து வழியனுப்பும் நாயுடன் பேசும் சிறுமிகளை, (ஐயோ. நான் போயிக்கிடுதேன். நீ வீட்டுக்குப் போ) கடைக்குச் சென்று அம்மா எழுதிக் கொடுத்த சாமான்கள் வாங்கும் போது உடன் வந்த நாய்க்கு பிஸ்கட்டோ, பொறையோ, ரஸ்க்கோ வாங்கிப் போட்டு ‘குட் கேர்ளா சாப்பிட்டுட்டு கெளம்பு. நான் சாமான்லாம் வாங்கிட்டு வாரேன்’ என்று சொல்லும் பையன்களை, இப்படி நிறைய . . . ஒரு மங்கிய மாலை வேளையில் தசரதபுரம் நாகாத்தம்மன் கோயிலின் பின் தெருவொன்றில் கனத்த குரலில் கண்டிப்புடன் யாருடனோ ஒரு பெண்மணி பேசிக் கொண்டிருந்தார். ‘நீ ஒண்ணும் பஸ் ஸ்டாண்டுக்குப் போயிக் காத்துக் கெடந்து அவளக் கூட்டிக்கிட்டு வர வேண்டாம். அவளே ஆட்டோல வந்திருவாளாம். இப்பதான் ஃபோன் பண்ணுனா. நீ ஒளுங்கா வீட்டுக்கு வந்து சேரு. அவ்ளோதான் சொல்லுவேன்’. அரைமனதோடு அந்த அம்மையாரின் குரலுக்குக் கட்டுப்பட்டு, யாரையோ திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் தளர்ந்த நடையுடன் சென்று கொண்டிருந்தது. கோலப்பனுக்கு ஃபோன் செய்து இந்த விஷயத்தைச் சொன்னேன். ‘பாக்க பாவமா இருந்தது, கோலப்பன். என்ன இருந்தாலும் அந்தம்மா அப்படி ஏசியிருக்கக் கூடாது. பிள்ள மொகம் வாடிப் போச்சு. இதையெல்லாம் வேற யாருக்கிட்டயும் சொன்னா

நம்மள

கோட்டிக்காரம்பாங்க. அதான் ஒங்கக்கிட்ட சொல்லுதென்’. அதற்காகவே காத்திருந்த மாதிரி கோலப்பன் சொல்ல ஆரம்பித்தார். ‘நீங்க என்ன நெனச்சாலும் சரி சுகா. இப்பம் நான் ஒங்கள கூப்பிடணும்னு நெனச்சேன். நீங்களே போன் பண்ணிட்டியோ. என் கூட வேல பாக்கற ஃபிரெண்டு ஒருத்தன் ஒரு பக்கு (Pug) நாய்க்குட்டி வாங்கியிருக்கான் பாத்துக்கிடுங்க. அதப் பாக்க என்னய கூப்பிட்டுக்கிட்டெ இருந்தான். இன்னைக்குத்தான் நேரம் வாய்ச்சுது. நான் பாக்கப்போனதென்னமோ அந்த பக்கு குட்டியத்தான். ஆனா வராதவன் வந்திருக்கானேன்னு என் ஃபிரெண்டு என் கூட பேசிக்கிட்டே இருக்கான். நானும் பேச்சு சுவாரஸ்யத்துல குட்டிய லேசா கொஞ்சிட்டு கீள எறக்கி விட்டுட்டு அவன் கூடவே பேசிக்கிட்டு இருந்தேன். சொன்னா நம்ப மாட்டிய சுகா. அந்த பக்குக் குட்டி அண்ணாந்து என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு ‘கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்க, கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்கன்னு நெலையா நின்னுட்டு’. ‘நான் நம்புதென், கோலப்பன்’. ‘அதுக்குத்தானய்யா ஒங்கக்கிட்ட சொல்லுதென்’. இதைச் சொல்லும்போது கோலப்பனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கோலப்பனின் வாழ்நாள் கனவு ஒன்று உண்டு. பணி ஓய்வு பெற்ற பின் தமது சொந்த கிராமமான பறக்கையில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு பத்து நாய்கள் வீதம் வளர்த்தபடி காருகுறிச்சி அருணாசலத்தின் நாகஸ்வர இசை கேட்டபடி நிம்மதியாக வாழவேண்டும். கோலப்பனின் கனவு நனவாக அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். ‘வாலிலே நன்றி சொல்லும் வாயிலே பிள்ளை யாகும் காலிலே அன்பு காட்டும் கண்ணிலே உறவு காட்டும் தோலிலே முளைத் தெழுந்த ரோமமும் தோழ னாகும் வேலினால் தாக்கி னாலும் வீட்டில்தான் விழுந்து சாகும்.’ கோலப்பனிடம் ஒருநாள் இந்த வரிகளைச் சொன்னேன். உணர்ச்சிவசப்பட்டு குரல் கலங்கி, ‘யார் எளுதுனதுய்யா?’ என்றார். கவியரசு கண்ணதாசன் எழுதிய ‘என்னருமை சீசர்’ முழுப்பாடலையும் அனுப்பிவைத்தேன். முழுவதையும் படித்து விட்டு கோலப்பன் சொன்னார். ‘சீசர் பாசத்தைப் பெற்ற தாயின் பாலிலும் கண்டேனில்லைன்னு எளுதிட்டாரேய்யா!’ ‘ஆமா கோலப்பன். பாட்ட எப்பிடி முடிச்சிருக்காரு கவனிச்சேளா?வளர்த்தவன் சிரிக்கின்றானா?வாய்விட்டே அழுகின்றானா?’ மீதமுள்ள வரிகளை உணர்ச்சி பொங்க கோலப்பனே சொல்லத் துவங்கினார். ‘தளர்ச்சியில் வீழ்கின்றானா? தன்வரை குமைகின்றானா? கிளர்ச்சியில் எழுகின்றானா? கேலியில் சமைகின்றானா? உளத்தினில் வளர்வதெல்லாம் உணர்வது நாயின் நெஞ்சே!’ அத்துடன் கோலப்பன் நிறுத்தவில்லை. ‘இந்தப்பாட்ட ஒரு ஆயிரம் பிட் நோட்டீஸ் அடிச்சு தெருவுல போறவஙக வாரவங்ககிட்டயெல்லாம் குடுக்கணும்யா’ என்றார். கோலப்பன் வெறுமனே நாய்கள் மேல் பிரியம் மட்டும் வைத்திருப்பவர் அல்ல. அவற்றின் வகைகள் குறித்த அறிவும் உள்ளவர். எழும்பூர் ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு நாயைக் காட்டிச் சொன்னார். ‘இந்தப் பய கன்னிக்கும், சிப்பிக்கும் க்ராஸாக்கும். மூக்க கவனிங்க. அப்பிடியே களுத்து மடிப்பையும் பாருங்கொ. நான் சொல்லது வெளங்கும்.’ எனக்கு ஒன்றும் விளங்கவில்லையென்றாலும் கோலப்பனை கவனித்தேன். அவர் அந்த கன்னி, சிப்பி நாயைத் தடவியபடி பேச ஆரம்பித்தார். ‘எங்கப்போவ் போறே? பிஸ்கட் திங்கியா? இரி. மொதல்ல தண்ணி தாரேன். குடி.’ நாய்களுக்கு, குறிப்பாக தெரு நாய்களுக்கு உணவை விட தண்ணீர்தான் கிடைக்காது. அதை முதலில் கொடுக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை கோலப்பனிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும். தன் வீட்டில் தான் வளர்க்கும் நாய்கள்தான் என்றில்லை. தெருவில் அடிபட்டு, உடம்பெல்லாம் புண்ணாகிக் கிடக்கும் நாய்க்குட்டிகளை வீட்டுக்குத் தூக்கி வந்து பண்டுவம் பார்த்து அவற்றை நல்ல கெதியாக்கி பின் தன்னைப் போன்ற பைரவ ப்ரியர்களைத் தேடிக் கொண்டு போய் கொடுப்பது கோலப்பனின் வழக்கம். கொடுத்ததோடு கடமை முடிந்தது என்று இருந்து விடாமல் அவ்வப்போது போய் அந்தப் பிள்ளைகளைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்து விட்டும் வருவார். ‘சுகா! நீங்க எவ்வளவோ டாப்பிக் எளுதியிருக்கியோ. இல்லேங்கல. ஆனா நாய்களப் பத்தி விகடன் தொடர்ல எளுதுனிய பாத்தேளா! அதுலேருந்துதாம்யா ஒங்க மேல மரியாதயே வந்தது!’. எனக்கும் நாய்கள் என்றால் அத்தனை இஷ்டம்தான். ஆனால் கோலப்பனைப் போன்ற ஒரு நாய்க் காதலரை, நாய்களின் தகப்பனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. தான் பெற்ற பிள்ளைகளைப் பற்றி என்னிடம் பேசியதை விட நாய்களைப் பற்றி அவர் பேசியதுதான் அதிகம். அதுவும் நாய்கள் என்று மறந்தும் சொன்னதில்லை. பிள்ளைகள்தான். தெற்கத்தி பாஷையில் பிள்ளேள். அவ்வளவு சௌகரியமாகவும், விஸ்தாரமாகவும் இல்லாத வீட்டில் அத்தனை வகை நாய்களையும் போட்டு வளர்த்து வரும் கோலப்பனை வியந்து ஒருமுறை குஞ்சுவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘எப்பிடித்தான் அந்தச் சின்ன வீட்டுக்குள்ள நாய்களை சீராட்டி வளக்காரோ, தெரியல. காலுக்குள்ளயும், கைக்குள்ளயும் வந்து விளுந்து ஆளுக நடமாடவே முடியாது, பாத்துக்கொ.’ ‘அவாள் மனவிஸ்தாரத்துக்கு முன்னாடி வீடாவது, ஒண்ணாவது? கோலப்பனால தெருவோரத்துலப் போட்டுக் கூட நாய்கள வளக்க முடியும்’ என்றான், குஞ்சு. கோலப்பனைப் பற்றி குஞ்சு சொன்னதுதான் நிஜம். எந்த இடத்திலும் அவரால் நாய்களைப் பேண முடியும். ‘இந்தப் பயலுக்கு நல்லா கித்தார் வருதுய்யா. அவனா கெடந்து வாசிக்கான். ஒளுங்குப்படுத்தி விட்டா நல்லா வாசிப்பான்னு தோணுது. சதா ஸார்க்கிட்ட சேத்து விடுங்களேன்.’ அதிசயமாக தன் மகன் குறித்துப் பேசினார், கோலப்பன். ‘பேசிட்டு சொல்லுதென், கோலப்பன்’. இளையராஜாவின் கிடாரிஸ்ட் சதானந்தம் அவர்களிடம் கோலப்பனின் மகனை கிடார் வகுப்பில் கொண்டு போய் சேர்ப்பதற்காக தியாகராய நகரிலுள்ள அவரது இசைக் கூடத்துக்கு நானும், கோலப்பனும் அவரது மகனை அழைத்துச் சென்றோம். வழக்கம் போல வகுப்பை விட்டு விட்டு சதா ஸார் என்னிடம் வெவ்வேறு இளையராஜாவின் பாடல்கள் குறித்துப் பேசத் துவங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல் சுதாரித்துக் கொண்டு, ‘நாம இன்னொரு நாள் பேசுவோம், ஸார். உங்க க்ளாஸ் நடக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு நானும், கோலப்பனும் கிளம்பி வெளியே வந்தோம். சதானந்தம் அவர்களின் இசைக்கூடத்தை ஒட்டியுள்ள தேநீர்க்கடையில் தேநீர் சொல்லிவிட்டு நின்று பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் குஞ்சு ஃபோன் பண்ணியிருந்தான். சென்னைக்கு வந்திருந்த அவனை நாங்கள் இருக்கும் இடத்துக்கு வரச் சொல்லியிருந்தேன். ஆட்டோவில் வந்து எதிர்முனையில் இறங்கி சாலையைக் கடந்து எங்களுருகே வந்த குஞ்சுவைப் பார்த்ததும் கோலப்பன் பரவசமானார். பதிலுக்கு பதில் பரவசத்துடன் குஞ்சுவும், கோலப்பனை நெருங்கி வந்து கைகளை விரிக்க, இருவரும் ஆசையுடன் ஒருவரைக்கொருவர் ‘சம்பந்தி’ என்றழைத்தபடி ஆரத் தழுவிக்கொண்டனர். குஞ்சுவின் ஆண் பிள்ளை நாய்க்கு கோலப்பன் தனது பெண்பிள்ளை நாயை ஆறு மாதத்துக்கு முன்புதான் கட்டிக் கொடுத்திருந்தார். ஆத்ம ருசி December 2, 2019 by சுகா Posted in தினகரன் , திருநவேலி

Tagged உணவு

,

ருசி

8

Comments

வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் கோயில் தெரு முனையிலுள்ள கோயில் வாசல், நெல்லையப்பர் கோயிலின் வசந்த மண்டபம், ஜோதீஸ் காப்பித்தூள்க்கடை, நயினார்குளம் பிள்ளையார் கோயிலை ஒட்டிய மரத்தடி என இவை எல்லாவற்றிலும் கந்தையா பெரியப்பாவைப் பார்க்கலாம். வட்டமாக நெற்றியில் சந்தனமும், அதில் குங்குமமும் வைத்து, ‘தொளதொள’வென வெள்ளைக் கதர்ச் சட்டையும், நாலு முழ வேட்டியும் அணிந்திருப்பார். சட்டைக்குள்ளே, வேட்டிக்கு மேலே, இடுப்பில் துண்டை இறுக்கமாகக் கட்டியிருப்பது வெளியே தெரியாது. ஆற்றில் குளிக்க வரும் போது, மதியப் பொழுதில் சிறிது நேரம் கட்டையைச் சாய்க்கும் போது என அபூர்வமான தருணங்களில்தான், அந்தத் துண்டை அவிழ்த்து உதறுவார். ஒட்ட வெட்டிய மிலிட்டரி கிராப்புக்கு நேர்மாறான நாலுநாள் தாடி, நிரந்தரமாக கந்தையா பெரியப்பா முகத்தில்

உண்டு.

எல்லோருமே அவரை ‘பெரியப்பா’ என்று அழைத்தார்கள். கந்தையா பெரியப்பாவின் குடும்பம் ரொம்பப் பெரியது. மூன்று தம்பிகளின் குடும்பங்களுடன், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு பழைய சுண்ணாம்புச் சுவர் வீட்டில்தான் எல்லோரும் குடியிருந்தார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்களைத்தான் குடியிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களையும், அப்படி சொல்லலாம்தான்! கந்தையா பெரியப்பாவுக்கு வாரிசு இல்லை. மூன்று தம்பிகளின் குழந்தைகளையும் கூட்டிப் பார்த்தால் எப்படியும் ஒரு பன்னிரெண்டு, பதிமூன்று பேர் தேறுவார்கள். எல்லாப் பிள்ளைகளையும் கந்தையா பெரியப்பாதான் வளர்த்தார். பிள்ளைகளை மட்டுமல்ல. பிள்ளைகளின் தகப்பன்களையும்தான். தன் தம்பிகளுக்கும், கந்தையா பெரியப்பாவுக்கும் நிறையவே வயது வித்தியாசம். அண்ணன் சொல்லைத் தட்டாத தம்பிகள். தம்பிகள் அனைவருக்கும் தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து கந்தையா பெரியப்பாதான் திருமணம் செய்து வைத்தார். தனக்கு பிள்ளைகள் இல்லை என்கிற குறையை தன் மனதுக்குள் புதைத்து விட்டு, தம்பி பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்த்தார். கந்தையா பெரியப்பாவின் மனைவி மங்கையர்க்கரசியும் கணவருக்கு இணையாக, தம் கொழுந்தனார்களின் பிள்ளைகளை சீராட்டினார். எல்லாப் பிள்ளைகளும் சிறுவயதிலிருந்தே, தங்கள் அப்பாவையோ, அம்மையையோ தேடியதில்லை. எல்லாவற்றிற்கும் பெரியப்பா, பெரியம்மைதான். ‘கந்தையா பெரியப்பா வீட்டுப் பிள்ளேளு, வாயத் தொறந்து பேசுன மொத வார்த்தயே பெரியப்பாதானடே!’ திருநெல்வேலி ஊரில் இப்படி சொல்லிக் கொள்வார்கள். தன் தம்பிகளின் பிள்ளைகள் அனைவரும் ‘பெரியப்பா, பெரியப்பா’ என்றழைப்பதால், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் அந்த வீடே ‘கந்தையா பெரியப்பா வீடு’ என்று அடையாளம் சொல்லப்படலாயிற்று. அண்டை வீட்டுக்காரர்கள், மைத்துனிகளின் உறவினர்கள் என உற்றார் உறவினரில் தொடங்கி, ஊரில் இருக்கும் அனைவருக்குமே ’பெரியப்பா’ ஆனார், கந்தையா. ‘நீங்க மிலிட்டரில இருந்தது, நெசந்தானா, பெரியப்பா?’ பழக்கடை மந்திரம் ஒருமுறை கேட்டான். ‘நெசம் இல்லாம, என்ன? பென்ஷன் வருதுல்லா! ஆனா, நீ நெனைக்குற மாரி டுப்பாக்கிய தூக்கிட்டு போயி சண்டல்லாம் போடல. எலக்ட்ரீஷியனா இருந்தேன். தம்பிங்க படிச்சு நிமிர்ற வரைக்கும் பல்லக் கடிச்சுட்டு இருக்க வேண்டியதாயிட்டு. பெரிய தம்பிக்கு முனிசிபாலிட்டில வேல கெடச்ச ஒடனேயே காயிதம் போட்டுட்டான். போங்கலெ, ஒங்க ரொட்டியும், சப்பாத்தியும்னு வடக்கே பாக்க ஒரு கும்பிடு போட்டுட்டு, அன்னைக்கே திருநவேலிக்கு ரயிலேறிட்டம்லா’. கந்தையா பெரியப்பா ஓர் உணவுப்பிரியர். வாயைத் திறந்தால் சாப்பாட்டுப் புராணம்தான். எதையும், எவரையும் உணவோடு சம்பந்தப்படுத்திதான் பேசுவார். ‘தீத்தாரப்பன் பாக்கதுக்குத்தான் உளுந்தவட மாதிரி மெதுவா இருக்கான். ஆனா, மனசு ஆமவட மாதிரிடே. அவ ஐயா செத்ததுக்கு பய ஒரு சொட்டு கண்ணீர் விடலயே!’ அத்தனை உணவுப்பிரியரான கந்தையா பெரியப்பா ஏனோ ஹோட்டல்களில் சாப்பிட விரும்புவதில்லை.. ‘போத்தி ஓட்டல என்னைக்கு இளுத்து மூடுனானோ, அன்னைக்கே வெளிய காப்பி குடிக்கிற ஆச போயிட்டுடே!’ ஆனால், கல்யாண விசேஷ வீட்டு பந்திகளில் சாப்பிடுவதில் அலாதிப் பிரியம். ‘செய்துங்கநல்லூர்ல ஒரு சடங்கு வீடு. நான் கைநனைக்காம பஸ் ஏறிரணும்னுதான் நெனச்சேன். ஏன்னா சடங்கான பிள்ளைக்கு அப்பன்காரன், ஒரு கொணங்கெட்ட பய, பாத்துக்கோ. ஆனா அவன் பொண்டாட்டி, நல்ல பிள்ள. எப்ப வீட்டுக்குப் போனாலும், ஒண்ணும் இல்லேன்னாலும் சின்ன வெங்காயத்த வதக்கி, கூட ரெண்டு கேரட்ட போட்டு கண்ண மூடி முளிக்கறதுக்குள்ள ரவையைக் கிண்டி சுடச் சுட உப்புமா தயார் பண்ணிருவா. சாப்பிட்டு முடிக்கதுக்குள்ள, கருப்பட்டி காப்பியும் போட்டிருவா. அவ மனசுக்கேத்த மாரியே, ஆக்குப்புரைல இருந்து வந்த கொதி மணமே சுண்டி இளுத்துட்டு. அப்புறந்தான் வெவரம் தெரிஞ்சுது. தவிசுப்பிள்ளைக்கு ரவணசமுத்திரமாம்’. எங்கு சாப்பிட வேண்டும், எங்கு சாப்பிடக்கூடாது என்கிற தெளிவு அவரிடத்தில் இருந்தது. ஆரெம்கேவியில் வேலை பார்க்கிற ராமலிங்கம் ஒருநாள் கொதிப்புடன் சொன்னான். ‘நம்ம லெச்சுமணன் தங்கச்சி கல்யாணத்துக்குன்னு லீவ போட்டுட்டு, நாங்குனேரிக்கு போனேன் பெரியப்பா. போற வளில பஸ்ஸு வேற பிரேக்டவுணாகி, நல்ல பசில போயி சேந்தேன், கேட்டேளா! . . . மண்டபத்த சுத்தி தெரிஞ்ச மனுஷாள் ஒருத்தரயும் காணோம். லெச்சுமணப்பய மணவறைல நிக்கான். கையக் கையக் காட்டுதென். திரும்பிப் பாப்பெனாங்கான். சரி, தாலி கட்டுறதுக்குள்ள காலைச் சாப்பாட்ட முடிச்சிருவோம்னு பந்திக்குப் போனேன். ஒரு பய எலையப் போட்டான். தண்ணி தெளிக்கதுக்குள்ள, இன்னொரு பய வந்து எலைய எடுத்துட்டுப் போயிட்டான், பெரியப்பா’. இதை சொல்லி முடிப்பதற்குள் அழுதேவிட்டான், ராமலிங்கம். ‘அட கூறுகெட்ட மூதி. அந்த லெச்சுமணன், சந்திப்பிள்ளையார் முக்குல டீ குடிக்கும் போதே, யாரும் பாத்திருவாளோன்னு அவசர அவசரமா வேட்டிக்குள்ள சம்சாவ ஒளிச்சு வச்சுத் திங்கற பயல்லா. நீ அவன் வீட்டு கல்யாணத்துக்குப் போனதே, தப்பு. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு கெளவி சும்மாவா சொல்லிட்டுப் போயிருக்கா. யார்யார் வீட்டு விசேஷங்களுக்குப் போகணும்னு ஒரு கணக்கு இருக்குடே’. கந்தையா பெரியப்பாவின் ருசிப் பழக்கம், அவர் தாயாரிடமிருந்து தொடங்கியிருக்கிறது. ‘எங்கம்மை ஒரு புளித்தண்ணி வப்பா, பாரு. ரெண்டு சீனியவரக்காய நறுக்கி போட்டு, தொட்டுக்கிட எள்ளுப் போல பொரிகடலத் தொவயலயும் வச்சு, சோத்த உருட்டி குடுப்பா.  தின்னுட்டு, அந்தாக்ல செத்துரணும் போல இருக்கும்வே. அதெல்லாம் அவளோடயே போச்சு, மாப்ளே.’ மாப்பிள்ளை என்று அவரால் அழைக்கப்படுகிறவர்களுமே கூட, ‘அப்படியா, பெரியப்பா?’ என்றே கேட்பார்கள். ஆக, ‘பெரியப்பா’ என்பது கந்தையா போல திருநெல்வேலிக்காரர்களுக்கு ஒரு பெயராகியே போனது. கல்யாண வீட்டுப் பந்திகளில் கந்தையா பெரியப்பாவின் தலை தென்பட்டு விட்டால் போதும். ‘தவிசுப்பிள்ளை’ வீரபாகு அண்ணாச்சி தானே பரிமாற வந்து விடுவார். ‘தண்ணிப் பானைல நன்னாரி வேர் கெடக்கும் போதே நெனச்சேன், தவிசுப்பிள்ளை நீதான்னு.’ கந்தையா பெரியப்பா சாப்பிட்டு முடிக்கும் வரை வீரபாகு அண்ணாச்சி அவரது இலையை விட்டு அங்கே இங்கே நகர மாட்டார். ‘நீ பரிமாறினேன்னா, ஒண்ணும் சொல்லாம சாப்பிடலாம்! வேற யாரும்னா பருப்புக்கு மேல சாம்பார ஊத்தாதே, ரசத்த கலக்காம ஊத்து, தயிர்ப்பச்சடிய தடியங்காக் கூட்டு மேல படாம வையின்னு மாறி மாறி சொல்லிக்கிட்டேல்லா இருக்கணும்! சமையல் படிச்சா மட்டும் போதுமாவே! பருமாறவும் தெரியணும்லா! என்ன சொல்லுதே?’ பேச்சு பேச்சாக இருந்தாலும், சாப்பிட்டுக் கொண்டேதான் சொல்வார், கந்தையா பெரியப்பா. வீரபாகு அண்ணாச்சி பதிலேதும் சொல்ல மாட்டார். அவரது கவனம் முழுக்க, கந்தையா பெரியப்பாவின் இலை மீதுதான் இருக்கும். என்ன காலியாகியிருக்கிறது, என்ன வைக்க வேண்டும் என்கிற யோசனையிலேயே இருப்பார். சாப்பிட்டு முடித்து, கைகழுவி வெற்றிலை பாக்கு போட உட்காரும் போது, கந்தையா பெரியப்பா சொல்வார். ‘நம்ம பளனியப்பன் மனம் போல அவன் வீட்டு கல்யாணச் சாப்பாட்டுல ஒரு கொறையுமில்ல’. இப்படித்தான் கந்தையா பெரியப்பா சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார். எல்லோருக்கும் இப்படி அவர் சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கிருஷ்ணபிள்ளையின் கடைசி மகள் கல்யாணத்திற்காக, மதுரையிலிருந்து ‘கேட்டரிங் சர்வீஸ்காரர்களை’ வரவழைத்து, தடபுடலாக விருந்துச் சாப்பாடு போட்டார். வழக்கமான கல்யாணச் சாப்பாட்டில் பார்க்க முடியாத வெஜிடபிள் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், விதம் விதமான ஐஸ்கிரீம்கள், பீடா என அமர்க்களப்படுத்தியிருந்தார். இவை போக சம்பிரதாயச் சாப்பாடும் இருந்தது. கந்தையா பெரியப்பா பெயருக்குக் கொஞ்சம் கொறித்து விட்டு சட்டென்று பந்தியை விட்டு எழுந்து விட்டார். கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறும் வரை ஒன்றுமே பேசவில்லை. சாயங்காலம் கல்பனா ஸ்டூடியோ திண்ணையில் அமர்ந்து மாலைமுரசு படித்துக் கொண்டிருக்கும் போது சொன்னார். அப்போதுமே கூட சொல்லியிருக்க மாட்டார். கிருஷ்ண பிள்ளை வீட்டுக் கல்யாணச் செய்தி, மாலை முரசில் வந்திருந்தது. பேப்பரை மடித்து வைத்து விட்டு சொன்னார். ‘மந்திரி வந்தாராம்லா, மந்திரி! எவன் வந்தா என்னத்துக்குங்கேன்! பந்தில ஒண்ணையாவது வாயில வக்க வெளங்குச்சா! எளவு மோருமாய்யா புளிக்கும்!’ கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவர் தொடர்ந்தார். ‘புது பணக்காரம்லா! அதான் பவுசக் கொளிக்கான். பெத்த அம்மைக்கு சோறு போடாம பட்டினி போட்ட பய வீட்டு சாப்பாடு எப்பிடி ருசியா இருக்குங்கேன்!’ கந்தையா பெரியப்பா அப்படி சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சாப்பிடும் உணவின் ருசிக்கும், அதற்குப் பின்னணியிலுள்ள மனிதர்களின் ஆத்மாவுக்கும் சம்பந்தமுள்ளது என்பார். ‘ஒலயக் கொதிக்க வச்சு, அதுல அரிசிய யாரு போட்டாலும் அது வெறும் சோறாத்தான் ஆகும். அது அன்னமா ஆகுறது, பொங்குற மனுஷி கைலயும், மனசுலயும்தான் இருக்கு’. அந்தநம்பிக்குறிச்சியில் கற்குளத்தம்மா இறந்த பதினாறாவது நாள் விசேஷத்துக்குப் போயிருந்த போது, பந்தி முடிந்தவுடன் சொன்னார். ‘கற்குளத்தம்மா ஆளுதான் கருப்பு. மனசு பூரா தங்கம்லா! எத்தன குடும்பத்த வாள வச்சிருக்கா! இன்னைக்கு இங்கெ இருக்கெற வெள்ளத்துர, கண்ணம்மா, மாயாண்டி குடும்பம்லாம் எதுக்கு கெடந்து இந்தா அளுக அளுதாங்கங்கே! இந்தக் குடும்பம்லாம் அவ போட்ட சோத்தத் தின்னுதானெவே வளந்துது! அதான் இன்னைக்கு பந்திய விட்டு எந்திரிக்கவே மனசு வரமாட்டேங்கு. தாயளி, சோறே மணக்கே!. கற்குளத்தம்மா ஆத்மா, அந்த மாதிரில்லாவே!’ நூற்றுக்கு நூறு கந்தையா பெரியப்பா சொன்ன வார்த்தைகளை எல்லோராலுமே உணர முடிந்தது. நல்ல வேக்காடில் வெந்த அரிசிச் சோறு, உருக்கின பசுநெய், பதமாக வெந்த பருப்பு, மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார், வெள்ளைப் பூண்டின் நெடி முகத்தில் அடிக்காத ரசம், சம அளவில் வெங்காயமும், வாழைக்காயும் சரியாகக் கலந்த புட்டு, தேங்காயை தாராளமாக போட்டு வைத்த அவியல், துவரம்பருப்பு போட்டு செய்த தடியங்காய்க் கூட்டு, அரிசி பாயாசம், பொரித்த அப்பளம் என அனைத்துமே அத்தனை ருசி. வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள கந்தையா பெரியப்பா வீட்டில் அவரது பதினாறு நாள் விசேஷத்தின் பந்தி முடிந்ததும், எல்லோருமே சொன்னார்கள். ‘கந்தையா பெரியப்பா ஆத்மா அந்த மாரில்லா! அதான் சாப்பாடு இந்த ருசி ருசிக்கி’. புகைப்படம்: கார்த்திக் முத்துவாழி கருப்புகவுணியும், கருங்குறுவையும் . . . November 24, 2019 by சுகா Posted in Uncategorized , அனுபவம்

Tagged உணவு

,

குன்றக்குடி

,

ஶ்ரீரங்கம்

3 Comments

‘ஒடம்பைக் கொறைக்கலாம்னு இருக்கேன், ஸார்’. ஹைதராபாத்தில் மோகன்லாலின் ‘மரைக்காயர்’ படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து ஃபோனில் இதைச் சொல்லும் போது மனோஜின் குரலில் உறுதி தெரிந்தது. எனக்குத்தான் பதற்றமாக இருந்தது. ‘வேண்டாம்டா மனோஜ். அடையாளம் தெரியாமப் போயிரும்’. ‘இல்ல ஸார். நான் முடிவு பண்ணிட்டேன். சென்னைக்கு வந்தவுடனே ஒங்கள வந்து பாக்கறேன்.’ மனோஜ், திரைப்பட ஒலிப்பதிவாளர். ஒலிப்பதிவு அறையில் அமர்ந்து வேலை செய்வதில் மனோஜுக்கு விருப்பமில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடிக, நடிகையரின் வசனங்களை ஒலிப்பதிவு செய்வதில் ஆர்வம் உள்ள இளைஞன். ஒலிப்பதிவு சம்பந்தமான ஆழமான அறிவும், தேடலும் உள்ளவன். ஏ. ஆர். ரஹ்மானின் உள்வட்டத்தைச் சேர்ந்தவன். ரஹ்மானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடி உலகப்புகழ் பெற்ற பல பாடகர்கள் மனோஜின் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையை அவ்வப்போது அலங்கரிப்பவர்கள். திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி உட்பட அவரது அலுவலக ஊழியர்கள் அனைவருமே மனோஜை ‘சுகாவின் தத்துப்புத்திரன்’ என்றே சொல்வார்கள். எல்லா இடங்களிலும் என்னுடன் காணப்படும் மனோஜைக் காண்பித்து பலர் என்னிடம், ‘உங்க ஸன்னா, ஸார்?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘ஆம்’ என்றே சொல்லியிருக்கிறேன். ஜெயகாந்தனின் ‘குருபீடம்’ சிறுகதையைப் போல என்னை தன் குருவாக அவனாகவே முடிவு செய்து, ஏற்றுக் கொண்ட மனோஜ், ஒலிப்பதிவு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த சகல விஷயங்களிலும் எனது குரு. ஆனால் குருவை அதட்டித்தான் கற்றுக் கொள்வேன். ‘என்னடா இது? நீ வாங்கிக் குடுத்த ப்ளூடூத் ஸோனி ஸ்பீக்கர் லேப்டாப்போட கனக்ட் ஆகவே மாட்டேங்குது?’ ‘ஸார். அதுக்கு மொதல்ல ப்ளூடூத்தை ஆன் பண்ணனும்,

ஸார்’.

படப்பிடிப்புக்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சென்றுவிட்டாலும் தவறாமல் ஃபோனில் பேசுபவன். சென்னைக்கு வந்து விட்டாலும் ஃபோன் வரும். ‘என்ன மனோஜ்! வந்துட்டியா?’ ‘இப்பதான் ஸார் வந்தேன். ஒங்களைப் பாக்க வரலாமா?’ ‘வாயேன். எங்கே இருக்கே?’ ‘ஒங்க ஏரியாலதான் ஸார்’. ‘வடபழனி வந்துருக்கியா?’ ‘இல்ல ஸார். சாலிகிராமத்துக்கே வந்துட்டேன்.’ ‘அடப்பாவி. சாலிகிராமத்துல எங்கே இருக்கே?’ ‘ஒங்க பில்டிங்குக்குக் கீளதான் ஸார் நிக்கறேன்’. மனோஜின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்று, செல்ஃபி எடுத்துக் கொள்வது. நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி எப்படியும் ஆயிரமாவது இருக்கும். இன்னொரு பொழுதுபோக்கு இன்ஸ்டாக்ராமில் லைக் போடுவது. பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த அழகியாக இருந்தாலும் மனோஜின் லைக்கிலிருந்துத் தப்ப முடியாது. சென்னைக்கு வெகு அருகே

உள்ளே

செம்பாக்கத்தில்தான் மனோஜின் வீடு உள்ளது. ஒரே ஒரு முறை என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். பலமணிநேரப் பயணத்துக்குப் பிறகு செம்பாக்கம் அடைந்ததும் என் மன பிராந்தியத்தில் தாமிரபரணி தெரிந்தது. ‘அடேய்! என்னை திருநவேலிக்கேக் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?’ மனோஜின் தாய்மொழி கன்னடம். அவனது தாயார் தீவிர தமிழ் வாசகி. அன்றைக்கு மனோஜின் பெற்றோர் என்னை வரவேற்ற விதம் அத்தனை கூச்சத்தை வரவழைத்தது. ‘நீங்க எங்க பையனோட குரு. ஒங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போறதா சொன்னான். ஒங்கள சரியா கவனிக்கணுமேன்னு எங்களுக்கு டென்ஷனா ஆயிடுச்சு.’ மனோஜின் தாயார் இன்னும் என்னென்னவோ சொன்னார். நான் மனோஜின் தகப்பனாரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனோஜுக்கும், அவனது தகப்பனாருக்குமான ஒரே வித்தியாசம், அவனது தகப்பனார் வைத்திருந்த மீசை. மற்றபடி அவரும் மகனைப் போலவே உருண்டையாக இருந்தார். சின்ன உருண்டை, பெரிய உருண்டையெல்லாம் இல்லை. மொத்தமாக உருண்டை. அவ்வளவுதான். முறுக்கு மீசையை பசு நெய் தடவி நீவி விட்டிருந்தார். மீசையைத் தாண்டி அவரது சிரிப்பைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. அவர் பேச ஆரம்பித்ததும் அவருக்கும் என் மேல் அத்தனை மரியாதையை அவரது மகன் புகட்டி வைத்திருந்தது புலப்பட்டது. மனோஜின் புஷ்டியான உடல்வாகு அவனது தாய் மற்றும் தகப்பன் வீட்டு சீதனம். உலகிலுள்ள சகல சைவ உணவு வகைகளையும் தேடித் தேடிச் சென்று சுவைப்பவன். சென்னையில் உள்ள அனைத்து சைவ ஹோட்டல்களுக்கும் மனோஜ் என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். ‘ஸார். சௌகார்ப்பேட்டைல ஒரு தோசைக் கட. நெய்ல முக்கி தர்றாங்க, ஸார்.’ சொன்ன கையோடு அழைத்தும் சென்றான். அடுத்த முறை அழைத்தபோது மறுத்து விட்டேன். ‘வேண்டாம்டா மனோஜ். அன்னிக்கு நெய் தோச சாப்பிட்டதுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு  தண்ணி குடிச்சாலும் நெய் குடிச்ச மாதிரியே இருந்தது.’ ‘அப்ப போரூர்ல ஒரு நல்லெண்ணெய் தோசைக் கடை இருக்கு. போலாமா, ஸார்?’ இந்தளவுக்கு தேடல் உள்ள மனோஜ் ‘ஒடம்பைக் கொறக்கலாம்னு இருக்கேன், ஸார்’ என்று சொன்னால் மனம் பதறத்தானே செய்யும்!? மயிலாப்பூரிலிருந்து மனோஜின் இரு சக்கர வாகனம் ஆழ்வார்ப்பேட்டைக்குத் திரும்பி ஒரு கடையின் வாசலில் நிற்கும் போது, இனிமேலும் நாம் உட்கார்ந்திருக்கலாகாது என்று பின் இருக்கையிலிருந்து இறங்கினேன். ‘வாங்க ஸார்.’ வேகம் வேகமாகக் கடைக்குள் சென்றான். அது பாரம்பரிய அரிசி, மற்றும் தானியங்கள் விற்கும் கடை. கருப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி(யானை அல்ல), கருத்தக் கார் அரிசி, காலாநமக் அரிசி, மூங்கில் அரிசி, அறுபதாம் குருவை அரிசி, தூயமல்லி அரிசி, குழியடிச்சான் அரிசி, சேலம் சன்னா அரிசி, பிசினி அரிசி, சூரக்குறுவை அரிசி, வாலான் சம்பா அரிசி என பற்பல அரிசிகள். இவற்றில் சில பெயர்களை மட்டும் அறிந்திருக்கிறேன். சிலவற்றை பெயரறியாமல் சிறு வயதில் உண்டுமிருக்கிறேன். ஒவ்வொன்றையும் வாங்கி பையில் போட்டுக் கொண்டே இருந்தான், மனோஜ். ‘ஸார் ஒங்களுக்கு?’ ‘கருப்பு கவுணியும், கருங்குறுவையும் மட்டும் எடுத்துக்கறேன்டா. எனக்கென்னவோ அது ரெண்டும் எனக்காகத்தான் வச்சிருக்காங்கன்னு தோணுது.’ குருசிஷ்யன் இருவரும் கருப்பு கவுணியிலும், கருங்குறுவையிலும் தீவிரமாக இறங்கினோம். விதி குன்றக்குடியிலிருந்து அழைத்தது. என் உடன் பிறவா சகோதரர்கள் சரவணனும், பாலசுப்பிரமணியமும் குன்றக்குடிக்கு அழைத்தனர். பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் பணி புரிபவர். வருடாவருடம் தனது சொந்த ஊரான குன்றக்குடிக்கு வரும் போதெல்லாம் என்னை தமது இல்லத்துக்கு அழைப்பார். ‘அண்ணே! நம்ம வீட்டுக்கு வந்துட்டு, சண்முகநாதனை தரிசிச்சுட்டு அப்படியே பிள்ளையார்ப்பட்டிக்கும் போயிட்டு வரலாம்ணே!’. இந்த வருடம் தம்பியின் அழைப்பைத் தட்ட இயலவில்லை. பாலசுப்பிரமணியத்துக்கு என் மூலம் அறிமுகமான தம்பிகள் ரமேஷ், மற்றும் ‘கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் என்னுடன் கிளம்பினர். நான் கிளம்பியதால் எனக்கு முன்பாகவே காரில் மனோஜ் இருந்தான். கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் குன்றக்குடியில் ஆபத்து காத்திருப்பதை அறியாத சிரிப்பு மனோஜின் குண்டு முகத்தில் தவழ்ந்தது. மாலையில் கிளம்பிய கார், போகிற வழியில் மேல் மருவத்தூர் தாண்டி, 99 காப்பிக்கடையில் நின்ற போதே குன்றக்குடி யானையின் மணியோசை ஒலிக்கத் துவங்கியது. ‘சுக்கு காபி மட்டும் குடிக்கலாம், ஸார்’ என்றபடி அமர்ந்த மனோஜுக்கு முன் வெண் பொங்கலும், ஆப்பமும், வாழைப்பூ வடைகளும் வந்து அமர்ந்து மனோஜைப் பார்த்து புன்முறுவல் பூத்தன. முதலில் சாப்பிட ஆரம்பித்தவன், மனோஜ்தான். நான் முறைத்துப் பார்த்ததை தன் மனக்கண்ணால் கவனித்த மனோஜ், ‘பொங்கல் வரகுல பண்ணியிருக்காங்க, ஸார். ஹெல்தி ஃபுட்’ என்றபடி வாழைப்பூ வடைக்குத் தாவினான். கடைசி வரைக்கும் சுக்கு காபி வரவே இல்லை. இரவுணவுக்கு திருச்சி சென்றோம். திருநவேலி தம்பி குமரேசனின் பரிந்துரையின் பேரில் பைபாஸ் சங்கீதாஸ் சென்றோம். திருநவேலியிலிருந்து திருச்சிக்குக் கிளம்பி வந்த அவன் எங்களுக்காக சங்கீதாஸ் வந்திருந்தான். சங்கீதாஸுக்குள் நுழைந்ததும், அங்கு ஒட்டப்பட்டிருந்த ஒரு வண்ண ஸ்டிக்கர் மனோஜின் கண்களைப் பறித்தது. ‘ஸார். வெஜிடபிள் ஆம்லேட்டாம், ஸார். அதுவும் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீயாம்’ என்றான். ‘ஆம்லேட்டா?! என்னடா

மனோஜ்?’

‘ஸார். ஆமெலெட்டுன்னா ஆம்லெட் இல்ல ஸார். பயிறுல செஞ்சது. அடை மாதிரி இருக்கும்’. குண்டுப்பயல் ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறான் போல. ‘சரி சொல்லித் தொலை’ என்றேன். ‘இந்தக் கடைல தோசைல்லாம் வித்தியாசமா இருக்கும்னு குமரேசன் அண்ணன் சொல்றாரு,

ஸார்’.

குமரேசனும் அவன் பங்குக்கு ‘ஆமாண்ணே. மெனு கார்டு பாருங்க. ஒங்களுக்குப் புடிச்ச தோசையைச் சொல்லுங்க’ என்றான். மெனு கார்டைப் பார்த்ததும் மூடி வைத்து விட்டேன். ‘ரெண்டு இட்லி சொல்லுப்பா’ என்றேன். ‘ஏம்ணே? வெரைட்டியா தோச இருக்குமே! சொல்லலியா? வேறெங்கயும் கெடைக்காதுல்லா?’ என்றான், குமரேசன். ‘குமரேசா! அண்ணன் மேல நெஜமாவே ஒனக்கு மரியாத இருந்தா அந்த தோசையல்லாம் சாப்பிடச் சொல்லுவியாடே?’ கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன். ‘அப்படி என்னண்ணே போட்டிருக்கான்? ஏன் கோவப்படுதியோ? குடுங்க பாப்போம்’ என்று வாங்கியவனுக்கு ஒன்றும் புரிந்த மாதிரி தெரியவில்லை. மெனு கார்டை எட்டிப் பார்த்த மனோஜ் சொன்னான். ‘ஸார். மூணாவதா போட்டிருக்கற தோசயத்தானே சொல்றீங்க?’ ‘ஆமாடா’ என்றபடி இட்லியை சாப்பிட ஆரம்பித்தேன். ‘நல்லா இருக்கும்னு நெனைக்கறேன். ஒண்ணு சொல்லி பாதி பாதி ஷேர் பண்ணலாமா, ஸார்?’ என்று கேட்ட மனோஜை முறைத்துப் பார்த்தேன். ‘ஸாரி ஸார்’ என்றபடி, ‘இன்னொரு வெஜ் ஆம்லேட் கொண்டு வாங்க’ என்றான், மனோஜ். நகர்ந்த சர்வரிடம், ‘எக்ஸ்கியூஸ் மீ. ஒரு ஆம்லெட் வாங்கினா இன்னொண்ணு ஃப்ரீதானே?’ என்றும் கேட்டுக் கொண்டான். குன்றக்குடிக்கு நள்ளிரவில் போய்ச் சேர்ந்தோம். மறுநாள் காலை சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்களின் தாயாரை வணங்கினோம். அம்மா தன் பிள்ளைகளிடம் கண்களால் ஏதோ சொன்னார்கள். சற்று நேரத்தில் காலை உணவுக்காக பாலசுப்பிரமணியத்தின் வீட்டு டைனிங் டேபிளில் பெரிய இலை போடப்பட்டது. மனோஜ் காதைக் கடித்தான்.’ஸார். குன்றக்குடில இலைல உக்காந்துதான் சாப்பிடணும் போல. அதுவும் என் சைஸுக்கே எல்லா இலையும் போட்டிருக்காங்க’. ‘மாயாபஜார்’ (பழைய) திரைப்படத்தின் ரவிகாந்த் நிகாய்ச்சின் தந்திரக் காட்சிகள் போல கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு இட்லி, இரண்டு வடை, முந்திரிப் பூக்கள் பூத்த கேஸரித் தோட்டம், தனித் தீவு போலக் காட்சியளித்த வெண் பொங்கல், எண்ணெயில் ஜொலித்த இரண்டு அப்பம், சிறிதும் தண்ணீர் கலக்காத கெட்டி சாம்பார், முல்லை மலர் போன்ற சட்னி என அவ்வளவு பெரிய இலையின் பச்சை கண்ணுக்கேத் தெரியாமல் நிறைந்திருந்தது. டைனிங் டேபிளுக்கு இருபுறமும், கைகளைக் கட்டியபடி நின்று கொண்ட சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் எங்களை எழுந்து ஓட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். முதலில் நீண்ட நாள் பழக்கமான இட்லியிலிருந்துத் தொடங்கலாம் என்கிற எண்ணத்துடன் மெதுவாக இட்லியைத் தொடும் போது, பக்கத்து மனோஜ் இலையில் இட்லி வைத்த இடம் பச்சையாகத் தெரிந்தது. பொங்கலுக்குள் அவன் இறங்கியிருந்தான். பிரசாத்தின் கண்கள் கலங்கியிருந்தன. ‘ஏன் தம்பி? சட்னி காரமோ?’ ‘இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலண்ணே!’ ‘அப்புறம் என்ன தம்பி?’ ‘இல்லண்ணே. சைடுல பாருங்க. கையைக் கட்டிக்கிட்டு ரெண்டு அண்ணன்களும் கிங்கரர்கள் மாரி நிக்காங்க. ஒங்களையாவது அண்ணன்னு விட்டிருவாங்க. எங்க நெலம மோசம்ணே. இந்த மனோஜ் வேற டயட்ல இருக்கறதா சொல்லிட்டு வெளுத்து வாங்குதானேண்ணே! உடனயொத்த பய அவ்வளவு அளகா சாப்பிடுதான். ஒனக்கென்னல கொள்ளன்னு அடிப்பாங்களோன்னு பயமா இருக்குண்ணே!’ தம்பி சரவணனை லேசாகத் திரும்பிப் பார்த்தேன். ‘நல்லா சாப்பிடுங்கண்ணே!’ என்றார். அவரது தோற்றம் கவலையளித்தது. காரணம், சரவணனுக்கு முன் மனோஜ் ரொம்ப ஒல்லியாகத் தெரிவான். ‘ஏன் தம்பி? முழுசையும் சாப்பிடலன்னா அண்ணன் மேல கோபப்பட மாட்டீங்கல்ல?’ ‘கோபப்பட மாட்டேம்ணே. வருத்தப்படுவேன்.’ ‘ஸார். ஆறிடப் போகுது. சாப்பிடுங்க. கேஸரி நல்லாருக்கு’ என்றான்,

மனோஜ்.

அரை மணிநேரம் கழித்து கிட்டத்தட்டத் தவழ்ந்து பாலசுப்பிரணியனின் வீட்டிருந்து வெளியே வந்து காரில் ஏறியதும் எல்லா திசையிலிருந்தும் குறட்டையொலி கேட்டது. பிள்ளையார்ப்பட்டியில் பிள்ளையார் முன் அரைமயக்கத்தில் நின்று வணங்கினோம். தூக்கத்தைப் போக்க தோப்புக்கரணங்கள் போட்டுப் பார்க்க முயன்றும், நிறைமாத வயிறு அதற்கு இடம் கொடுக்கவில்லை. பிள்ளையார்ப்பட்டியிலிருந்து அரியக்குடி செல்லும் வழியில், ‘பிள்ளையார்ப்பட்டியில இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம், ஸார்’ என்றான், மனோஜ். என் மனதுக்கு நெருக்கமாக மனோஜ் இருப்பதற்கு இந்தச் சிறு வயதில் அவன் இப்படி கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிடுவதும் ஒரு

காரணம்.

‘வேணா சாயந்தரம் ஒரு வாட்டி பிள்ளையார்ப்பட்டி வரலான்டா. அவ்வளவுதானே?’ ‘இல்ல ஸார். இப்பதான் சூடா புளியோதரை குடுப்பாங்களாம். சாயந்தரம் சக்கரப் பொங்கல்தானாம்’ என்றான். நல்ல வேளையாக அதற்குள் அரியக்குடி வந்தது. திருவேங்கடமுடையானை தரிசித்து விட்டு அருகில் உள்ள சொக்கநாதபுரம் சென்று அங்குள்ள பிரத்யேங்கரா தேவி கோயிலுக்கும் சென்று வந்தோம். மதிய உணவு காரைக்குடியில். கருங்குறுவையை மறந்து விட்டிருந்த மனோஜ், அநேகமாக அங்குள்ள எல்லா வகைகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டான். ‘கோயில் கோயிலா அலைஞ்சதுல நல்ல பசி ஸார். இங்கெல்லாம் பெருமாள் கோயில்ல பிரசாதம் குடுக்கறதே இல்ல. ஏன் ஸார்?’ என்று கேட்டு விட்டு பதிலை எதிர்பாராமல், வெஜிடபிள் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தான். மதிய ஓய்வுக்குப் பிறகு குன்றக்குடி சண்முகநாதன் தரிசனம். சிறப்பு பூஜை. நாகஸ்வர பின்னணியில், ரம்யமான மலைக் காற்று. தரிசனம் நிறைந்து வெளியே வரும் போது சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் கைகளில் தூக்குச்சட்டி தொங்கியது. ‘ஸார். காலைல மிஸ் ஆன புளியோதரை’ என்றான், மனோஜ். குரலில் கொப்பளித்த குதூகலத்தில் கருப்பு கவுணி காணாமல் போயிருந்தது. ‘ஆனா இப்ப புளியோதரை வேண்டாம், ஸார்’ என்றான். தொடர்ந்து மனோஜே சொன்னான். ‘காரைக்குடில ஒரு ஹோட்டல்ல பொரிச்ச பரோட்டாவும், பால் குருமாவும் நல்லா இருக்குமாம் ஸார். பாலு ஸார் நம்மளக் கூட்டிக்கிட்டு போகணும்னு ஆசப்படறா, ஸார். பாவம் நல்ல மனுஷன்’. கோமா நிலையில் வந்து படுக்கையில் சரிந்த பிறகு சொப்பனத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ‘மனோஜ்க்கு புளியோதரை சாப்பிடாததுல வருத்தம்ணே’ என்றார், பிரசாத். ‘அதுக்காக நம்ம ஊர்ல சாப்பிடற மாதிரி பொரி கடல தொவையல் அரச்சு புளியோதரை சாப்பிடற நேரமா தம்பி, இது? இது பிரசாதம்லா. காலைல சாப்பிட்டா போச்சு.’ அரைத் தூக்கத்தில் இதைச் சொல்லும் போது தம்பி பாலசுப்பிரமணியம் அறையில் இருந்ததை நான் கவனிக்கவில்லை. மறுநாள் காலை நாங்கள் சென்னை கிளம்புவதாகத் திட்டம். காலை ஆறரை மணிக்கு எங்கள் அறையின் கதவைத் தட்டிய பாலசுப்பிரமணியம், சரவணன் சகோதரர்கள் கைகளில் எவர்சில்வர் தட்டுகள், தூக்குச்சட்டிகள், சிறிய பாத்திரம். அதிகாலையில் அரைத்த பொரிகடலைத் துவையலுடன் புளியோதரை பரிமாறப்பட்டது. மனோஜ் சாப்பிடத் தயாரானான். குன்றக்குடி சகோதரர்கள் பரிமாறும் முஸ்தீபுகளில் இறங்கினார்கள். ‘பல் மட்டுமாவது தேச்சுக்கிடறேன், தம்பி’ என்றேன். ‘நான் தேச்சிட்டேன், ஸார்’. சாப்பிடத் துவங்கினான், மனோஜ். சரவணன், பாலசுப்பிரமணியனின் முரட்டன்புப் பிடியிலிருந்து விடுபட்டு, ஶ்ரீரங்கம் சென்றடைந்தோம், அம்மா மண்டபத்தில் கூடியிருந்த பெரும் கூட்டத்தில் புகுந்து, காவிரியில் குளித்துக் கரையேறி, ஶ்ரீரங்கநாதனை தரிசித்து விட்டு வெளியே வரும் போது மனோஜின் கைகளில் புளியோதரை. முறைத்தேன். ‘இது குன்றக்குடி புளியோதரை இல்ல, ஸார். அதைத்தான் காலைல சாப்பிட்டோமே! இது ஶ்ரீரங்கம் பிரசாதம்’ என்றான். ‘சாயங்காலம் சாப்பிட்டுக்கலாம். இப்ப லஞ்ச் டைம்’ என்றார், பிரசாத். மதிய உணவுக்கு அதே பைபாஸ் சங்கீதாஸ். நான் மறந்திருப்பேன் என்று நினைத்து அந்த பிரத்தியேக தோசை இருக்கிறதா என்று நைஸாக கேட்டுப் பார்த்தான், மனோஜ். அது இரவில் மட்டும்தான் என்பதில் அவனுக்கு வருத்தம்தான். கூடவே ஒன்று வாங்கினால் மற்றொன்றும் இலவசமாகக் கிடைக்கிற வெஜிடபிள் ஆம்லேட்டும் இரவு மட்டும்தான் என்பதில் அவனுக்கு டபிள் வருத்தம். சென்னைக்குத் திரும்பியவுடன் மீண்டும் கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் திரும்பிய மனோஜிடம் கேட்டேன். ‘அப்படி என்னடா அந்த தோசை மேல ஒரு காதல், ஒனக்கு?’ ‘நேம் இண்டெரெஸ்டிங்கா இருந்துச்சு ஸார். அதான். இங்கே சென்னைல எங்கேயாவது கிடைக்குதான்னு செக் பண்ணிட்டு சொல்றேன், ஸார். ஒரு நாள் போயி டேஸ்ட் பண்ணிப் பாக்கலாம். நீங்க கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணலேன்னா நான் வேணா நீங்க சாப்பிட்டதை யார்க்கிட்டயும் சொல்லாம இருந்துக்கறேன், ஸார்’. உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ள மனோஜின் உள்ளம் கவர்ந்த திருச்சி சங்கீதாஸின் மெனு கார்டில் மூன்றாவதாக உள்ள அந்தக் கவர்ச்சி தோசையின் பெயர், ‘டிங்கிரி டோல்மா

தோசை’.

திருநெல்விருந்து November 1, 2019 by admn Posted in Uncategorized , கட்டுரை , திருநவேலி

Tagged உணவு

,

பந்தி

7 Comments

திருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம், குணம் பற்றியும் நான் மட்டுமேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சைவ சமையல் பயிற்சி வீடியோக்களைப் பார்த்து ஒரே ஒரு முறை ‘பிஸிபேளாபாத் என்ற சாம்பார் சாதம்’ செய்து பார்த்தேன். கடையத்தில் உள்ள ஒரு மெஸ்ஸில் முன்பு எப்போதோ ஒரு முறை சாப்பிட்ட மிளகு ரசத்தின் சுவையுடன் இன்னும் கொஞ்சம் வத்தக்குழம்பு சுவையும் சேர்ந்து வேறேதோ ருசிபேளாபாத்தாக அது உருவானது. மேற்படி சமையல் பரிசோதனைக்குப் பிறகு இணையத்தில் சமையல் முறைகள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள சொற்ப சைவ உணவுக் கடைகளைத் தேடத் துவங்கி விட்டேன். இன்றுவரை தேடல் தொடர்கிறது. அபூர்வமாக என் நாக்குக்கேற்ற சைவக் கடைகள் சிக்குவதுண்டு. அவையுமே இரண்டாம், மூன்றாம் விஜயத்தில் மாமியார் வீட்டு விருந்தாக இளைத்து, களைத்து விடுவதுண்டு. திருநவேலி சமையல் முறைகள் பற்றி யோசித்தாலே ஆழ்வார்குறிச்சியிலிருந்துதான் துவங்க வேண்டும். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ள சமயல் விசேஷம்லா. நல்லது கெட்டதுன்னு எல்லாத்துலயும் ஆளாருச்சி சமயல அடிச்சுக்கிட முடியுமா?’ என்பார்கள். பிரம்மாவுக்கு போன ஜென்மத்தில் விண்ணப்பம் அனுப்பி, அவரும் கருணையுடன் எனது விண்ணப்பத்தை ஏற்றுக்

கொண்டு

ஆழ்வார்குறிச்சியில் என்னை ஜனிக்கச் செய்ததன் விளைவாக, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக நான் ருசித்தது ‘ஆளாருச்சி’ சமையலைத்தான். அம்மையைப் பெற்ற வீடு முழுக்க விவசாயி வாசனை அடிக்கும். தாத்தாவின் வயலிலிருந்து வந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும் நெல் வாசனையும், பின் அது அவிக்கும் வாசனையுமாகத்தான் ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டைப் பற்றிய என் மனபிம்பம் விரிகிறது. மதிய சாப்பாட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு பொட்டல்புதூருக்குப் போய் புத்தம் புதிதாக கத்திரிக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், கொத்தவரங்காய், சீனிக்கிழங்கு, பலாக்காய்ப்பொடி, தடியங்காய்(மாண்புமிகு சென்னையில் அதன் பெயர் வெள்ளைப் பூசணி), இங்கிலீஷ் காய்கறிகளான பீன்ஸ், முட்டைக்கோஸ், (இதிலுள்ள முட்டையைக் கூட ஆச்சி சொல்ல மாட்டாள். கோஸ் என்பாள்), கேரட், பீட் ரூட் போன்றவற்றை ஒரு சாக்குப்பையில் போட்டு வாங்கி வருவார். வீட்டிலேயே முருங்கை மரம் இருந்ததால் பிஞ்சு காயாகப் பார்த்து, பறித்து சாம்பாரில் போடுவாள்,

ஆச்சி.

ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டின் பின் பக்கம் அமைந்துள்ள அடுக்களையில் இரண்டு மண் அடுப்புகளிலும், புறவாசலையொட்டி அமைந்துள்ள மேலும் இரண்டு மண் அடுப்புகளிலும் சமையல் நடக்கும். சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் தனித்தனி அடுப்புகளில் தயாராகும். எல்லா அரவைகளும் கல்லுரலிலும், அம்மியிலும்தான். கடைசியாக அப்பளம், வடகம், மோர் மிளகாய், சீனியவரைக்காய் வத்தல், சுண்டைவத்தல் போன்றவை வறுக்கும் வாசனை வாசலுக்கு வந்து நம்மைச் சாப்பிட அழைக்கும். திருநவேலியில் அப்பா ஆச்சி வீட்டில் அநேகமாக மூன்று வேளைகளிலுமே அமாவாசை விரதச் சாப்பாடு போல வாழையிலையில்தான் சாப்பாடு. இட்லி, தோசையாக இருந்தாலும் இலைதான். நாளடைவில் இவை எல்லாமே மாறிப்போய் இப்போது கின்ணத்தில் ஸ்பூன் போட்டு இளைய தலைமுறையினர் சாப்பிடத் துவங்கி விட்டனர். சரி, ஆழ்வார்குறிச்சிக்கு செல்வோம். ஆழ்வார்குறிச்சியில் மதியச் சாப்பாடு மட்டும் வாழை இலையில். சைவ சம்பிரதாய பரிமாற்று முறையில் இலையின் இடது ஓரத்தலையில் வைக்கப்படும் உப்பு, இப்போது புழக்கத்தில் உள்ள மேஜை உப்பு அல்ல. கற்கண்டு சைஸில் இருக்கும் கல் உப்பு. இலையின் வலது கை கீழ்ப்பக்கத்தில் பருப்பு வைத்து அதில் உருக்கிய பசுநெய்யை ஊற்றுவாள் ஆச்சி. சோறு வைத்த பின் அதன் மேலும் நெய் ஊற்றுவாள். அது சாம்பாருக்கு. சின்ன வயதிலேயே நான் ருசியடிமையாகிப் போனதற்கு, ரசத்திலும் ஆச்சி ஊற்றும் நெய்யும் ஒரு காரணம். ‘நீரு பரவாயில்ல பேரப்பிள்ள. நம்ம அம்மையப்ப முதலியார் வீட்ல மோர்ச்சோத்துக்கே நெய்யக் கோரி ஊத்துவாங்க தெரியும்லா’ என்பார் சைலு

தாத்தா.

திருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள் இயங்கின. அத்துறைகளில் ஆக்குபவர், உண்பவர் என எல்லோருமே அதிகாரிகள்தான். திருமண மறுவீடுகளில் கட்டாயமயமாக்கப்பட்ட சொதி உணவைப் பற்றிய சிந்தனை, மகளுக்கு, அல்லது மகனுக்கு வரன் பார்க்கத் துவங்கும் போதே இணைந்து கொள்ளும். ‘பத்தொம்பதாம் தேதியா? சரியா போச்சு. அன்னைக்குத்தான் வன்னிக்கோனேந்தல்ல என் மச்சினர் மகளுக்குக் கல்யாணம். நான் மறுவீட்டுக்கு வந்திருதென்’ என்று சாக்கு சொல்வது, சொதியைக் குறி வைத்துத்தான். சொதிக்கு நல்ல தேங்காயாக வாங்குவது குறித்து ஆளாளுக்கு ஓர் அபிப்ராயம் இருக்கும். ‘நாராயணன் கடைலயே வாங்குங்கடே. எம் ஜி ஆர் ரசிகம்லா. ஏமாத்த மாட்டான். போன மட்டம் நான் சொல்லச் சொல்லக் கேக்காம முத்தையா மாமா கடைல வாங்குனிய. பாதி தேங்கா அவாள மாரியே முத்தலு’. ‘ஒங்க சித்தப்பா ஏன் முத்தையா தாத்தா கட தேங்கா வேண்டாங்கான் தெரியுதா? அவாள் சின்ன மகள இவனுக்கு பொண்ணு கேட்டு குடுக்கல. அந்தப் பிள்ளையோட நல்ல நேரம் தப்பிச்சுட்டு. வருசம் இருவதாச்சு. இன்னும் அந்த கோவத்துல கொற சொல்லுதான்.’ திருநவேலி சைவ சப்பாட்டு வகைகளில் பிரதானமான சொதி சாப்பாடு அப்படி ஒன்றும் நிறைய வகைகள் உள்ள விசேஷமானது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொதிக்காக எடுக்கிற தேங்காய்ப்பால் மட்டும்தான் சுணக்கமான வேலை. மற்றபடி தொட்டுக் கொள்ள, இஞ்சிப் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ், தேவைப்பட்டால் கொஞ்சம் ரசம், வத்தக்குழம்பு, பிறகு கடைசியாக மோர் என அத்தோடு முடிந்தது கச்சேரி. இதில் தேவைப்பட்டால் ரசம், வத்தக்குழம்பு என்பது அநேகருக்குத் தேவையே படாது. ஏனென்றால் வளைத்து வளைத்து ‘முக்கா முக்கா மூணு ஆட்டை’ சொதியையே வாங்கி வாங்கிச் சாப்பிடுவார்கள். விசேஷ வீடுகளில் அல்லாமல் வீட்டில் செய்து சாப்பிட என்று சில பிரத்தியேகமான சைவ உணவு வகைகளும் திருநவேலியில் உள்ளன. கதம்ப சோறு என்று பல ஊர்களில் சொல்லப்படுகிற கூட்டாஞ்சோறு அவற்றில் ஒன்று. கூட்டாஞ்சோறு போக இன்னும் முக்கியமானது உளுந்தம் பருப்பு சோறு. உளுந்து என்றால் வெள்ளை உளுந்து அல்ல. கருப்பு உளுந்து. ‘கலர் கலர் ஸேம் கலர்’ என நிற ஒற்றுமை காரணமாகவும் எனக்கு மிகவும் பிடித்த உணவு, அது. பொதுவாக உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வகைகளை வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள். அவர்கள் புண்ணியத்தில் வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளுக்கும் அது கிடைக்கும். குறிப்பாக உளுந்தங்களி. உளுந்தும், கருப்பட்டியும் கலந்து, சுடச் சுடக் கிண்டி, கருப்பாக உருட்டி, அதில் குழி ஆக்கி நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிடக் கொடுப்பார்கள். சப்பு கொட்டி, கண்ணை மூடி அதை சுவைக்கும் போது தேவலோகத்தின் முதல் இரண்டு வாசற்படிகள் தெரியும். இன்னும் இரண்டு உருண்டைகளை முழுங்கினால் மூன்றாம் படியில் மயங்கிக் கிடப்போம். பொதுவாக புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, மதிய உணவுக்கு உளுந்தப்பருப்பு சோறு சாப்பிடுவது, திருநவேலி வழக்கம். சோற்றில் பிசைந்து சாப்பிட எள்ளுத் தொவையல். அதன் மேல் கட்டாயமாக நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொட்டுக் கொள்ள சில வீடுகளில் அவியல், சில வீடுகளில் வெண்டைக்காய் பச்சடி. இன்னும் சில வீடுகளில் கத்திரிக்காய் கொத்சு. பொரித்த அப்பளம், வடகம் கண்டிப்பாக உண்டு. சென்னையில் சில ஹோட்டல்களில் சொதி கிடைக்கிறது. என் மனநாக்கில் உள்ள சொதியின் சுவை இல்லை. உளுந்தம்பருப்பு சோற்றுக்கு வழி இருக்கிறது. என் பள்ளித்தோழன் பகவதியின் மனைவி, மற்றுமொரு பள்ளித்தோழன் ‘தளவாய்’ ராமலிங்கத்தின் மனைவி இருவரும் ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்கண்ணே. உளுந்தம்பருப்பு சோறும், எள்ளுத்தொவையலும் அரைச்சு வைக்கென்’ என்றழைக்கிறார்கள். அந்த சகோதரிகளில் ஒருத்திக்கு என் ஆழ்வார்குறிச்சி ஆச்சியின் குரல். இன்னொருத்திக்கு என் அம்மையின் குரல். நன்றி: விஜயபாரதம் புகைப்பட உதவி: தினமலர்,

நெல்லை

சுளுக்கு . . . October 22, 2019 by சுகா Posted in Uncategorized , அனுபவம் , திருநவேலி

13 Comments

இந்தமுறை திருநவேலி வாசம் ஒரு வாரத்துக்கு மேல் எடுத்துக் கொண்டது. கவிஞர்கள் பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஒரு மழைநாளில் சில்லென்று சிலிர்த்தபடி தூறலும், சாரலுமாக திருநவேலி என்னை வரவேற்றது’. போய் இறங்கிய நாளிலிருந்து தொடர் பயணம். முதல் இரண்டொரு தினங்களில் ‘அசுரன்’ திரையரங்குகளுக்கும், மீதி நாட்களில் திவ்ய தேசம், நவ திருப்பதி, திருச்செந்தூர், சித்தூர் தென்கரை மகராஜா திருக்கோயில் மற்றும் அம்மையப்பன் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோயில் என சுற்றியபடியே இருந்தேன். இதில் நெல்லையப்பர் கோயிலைத் தவிர மற்ற கோயில்களுக்கும், ஊர்களுக்கும் காரில் பயணம் செய்ததால், சென்னைக்குக் கிளம்பும் முந்தைய நாளில் கடும் உடல்வலி. ஏற்கனவே ‘அசுரன்’ பட இறுதிக்கட்ட பணிகளுக்காக இரண்டு மாதங்களாக ஒரே அறைக்குள் ஒரு பிரத்தியேக நாற்காலியில் அமர்ந்தபடியே இரவுபகலாக வேலை செய்ததன் பலன் முதுகில் மெல்ல மெல்ல இறங்கியிருந்தது. கூடவே இந்தத் தொடர்பயணம் மேலும் வலியை வலுவாக்கியது. படுத்து உறங்க இயலவில்லை. மல்லாக்க, ஒருச்சாய்த்து எப்படி படுத்தாலும் வலி குறையவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க இயலாமல் தங்கையின் கணவரை ஃபோனில் அழைத்தேன். அவர்தான் என்னை நவதிருப்பதிக்கு அழைத்துச் சென்று பெருமாளை சேவிக்க வைத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டவர். ‘மாப்ளே! நம்ம ஊர்ல கோட்டக்கல் வைத்திய சாலை எங்கன இருக்கு?’ வலியில் முனகினேன். ‘என்ன விஷயம் அத்தான்? சிரிச்சுக்கிட்டே கேக்கேளே! ஏன்?’ தங்கை கணவரென்பதால் வலியையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ‘கடுமையான முதுகு வலி மாப்ளே. அங்கனன்னா சுளுக்கு கிளுக்கு தடவுவாங்கல்லா?’ ‘முதுகு வலியா? இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதானே? இரிங்க. அரை மணிநேரத்துல வாரென்’. சொன்ன படியே ஒரு மணிநேரத்தில் கையில் ஒரு புட்டியுடன் வந்து சேர்ந்தார், மாப்பிள்ளை. அதன் மேல் ஓர் அழுக்குத்தாளில் மங்கிய எழுத்துகளில் கேரள ஆயுர்வேத சாலை என்று தமிழ் போன்ற மலையாளத்தில் எழுதியிருந்தது. ‘இதுக்குப் போய் அங்கன போய் முன்னப்பின்ன தெரியாத மலையாளத்தான்கிட்ட முதுகக் காட்டுவேளாக்கும்?! சட்டயக் கெளட்டுங்க. நானே தடவி விடுதென்’ என்று சொன்ன கையோடு என் மேல் பாய்ந்து சட்டைப் பித்தான்களைக் கழட்ட ஆரம்பித்தார். ‘இரிங்க மாப்ளே. நானே களட்டுதேன்’. ‘ச்செரி.அப்பம் நான் போயி ஸ்டூலைக் கொண்டு வாரென்’. மாப்பிள்ளை வருவதற்குள் சட்டையைக் கழட்டி விட்டு வேஷ்டியுடன் அமர்ந்திருந்தேன். ஸ்டூலுடன் வந்த மாப்பிள்ளை, ‘வாங்கத்தான். இதுல வந்து உக்காருங்க’ என்று ஸ்டூலைக் காட்டினார். உட்காரப் போன என்னைப் பிடித்து நிறுத்தி சட்டென்று இடுப்பில் கை வைத்தார். ‘மாப்ளே! என்ன இது? என்ன இருந்தாலும் நான் ஒங்க அத்தான். அத மறந்துராதிய.’ கோபத்தில் முறைத்தபடி சொன்னேன். ‘அட நீங்க ஒரு ஆளு. வேட்டிய அவுருங்கய்யா’. ‘மாப் . . .ளே’ ‘துண்ட உடுத்திக்கோங்க. கொண்டாந்துருக்கெம்லா!’ துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஸ்டூலில் அமர்ந்தேன். அழுக்கு புட்டியிலிருந்த தைலம் என்னும் திரவத்தை கையில் ஊற்றிக் கொண்டார் மாப்பிள்ளை. நறுமணத்தில் மயக்கம் வந்தது. முதலில் தோள்பட்டையில் தைலத்தை வடிய விட்டார். மிதமான சூடு. நேரடியாக மூக்கில் மணம் அடித்து தலையைத் துவளச் செய்தது. ‘ஆங்! தலையத் தொங்கப் போடாதிய’. பட்டென்று பிடரியில் அடி விழுந்தது. அடிகளின் பிள்ளையார்சுழி அது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தோளிலிருந்து மாப்பிள்ளையின் முரட்டுக்கரங்கள் நடு முதுகுக்கு இறங்கி அங்கு சிறிது நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டு இடுப்புக்குச் சென்றது. ‘அங்கனதான் அங்கனதான் மாப்ளே. குறுக்குலதான்

வலி’.

‘ஆமாமா. திண்டு கணக்கால்லா ரத்தம் கெட்டியிருக்கு. இரிங்கொ’. புட்டியிலிருந்து இன்னும் கொஞ்சம் தைலத்தை கைகளில் ஊற்றிக் கொண்டார். தைலக் கைகளோடு ‘சளத் சளத்’ என இடுப்பில் வைத்து சாத்தினார். என் கேவல் ஒலி மாப்பிள்ளையின் காதுகளை எட்டவே இல்லை. அவர் தியானம் பண்ணுவது போல மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு என் இடுப்பில் கைகளால் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தார். ‘துண்டை லேசா தூக்குங்கொ’. அம்பாசமுத்திரத்திலிருந்து அந்தக் காலத்தில் டிரங்க் காலில் ஒலிக்கும் குரல் போல மாப்பிள்ளையில் குரல் எங்கோ கேட்டது. நான் சுயநினைவுக்குத் திரும்புவதற்குள் மாப்பிள்ளை என் தொடைகளில் தைலத்தை வழிய விட்டார். அடி அங்கும் பலமாகத்தான் விழுந்தது. பாதம் வரைக்கும் வழிந்த தைலம் சின்ன வாய்க்கால் போல அறையெங்கும் ஓடியது. ஆனாலும் திருப்தியடையாத மாப்பிள்ளை மேலும் புட்டியைக் கையில் கவிழ்த்து தைலத்தை ஏந்தினார். ‘போதுமே மாப்ளே! அதான் நல்ல்ல்லா தேச்சுட்டேளே!’ ‘சும்ம கெடைங்கத்தான். எறநூறு ரூவா குடுத்துல்லா வாங்கியிருக்கென். முளுசா கவித்திருவோம்.’ மாப்பிள்ளையின் கரங்களிலிருந்து நான் விடுபடும் போது வெளியிலும், எனக்குள்ளும் இருட்டத் துவங்கியிருந்தது. ‘நல்லது மாப்ளே! ஒங்களுக்கு ஆயிரம் சோலி கெடக்கும். ஒங்கள வேற சங்கடப்படுத்திட்டென். நீங்க கெளம்புங்க’. ‘நல்ல கதயா இருக்கெ! வெந்நி போடச் சொல்லியிருக்கென். ஒங்களுக்கு முதுகு தேச்சுக் குளிப்பாட்டிவிட்டுட்டுத்தான் கெளம்புவென். எண்ணெ போணும்லா!’ நான் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன். உடம்பு வலியும், மனவலியும் சேர்ந்து கொண்டு பரிசாக அளித்த சோர்வு. ‘எத்தான் . . . . எத்தான்’. கவனம் கலைந்து, ‘சொல்லுங்க மாப்ளே’. ‘வெந்நி சுடதுக்குள்ள இந்தாக்ல ஒரு செல்ஃபி எடுக்கிடுவோமா?! இந்த மாரில்லாம் அமையாது பாத்துக்கிடுங்க’. காந்திமதித்தாயின் அருளால் தங்கை அங்கு வந்து சேர்ந்தாள். ‘எய்யா! வெந்நி சுட்டுட்டு. கூட்டிட்டு வாருங்கொ’. ‘மாடு குளுப்பாட்டுன கையால அண்ணன போட்டு என்னா பாடு படுத்துட்டியோ!’ தங்கையின் முணுமுணுப்பை மனக்காது கேட்க மறுத்தது. மாப்பிள்ளை இயற்கை விவசாய ஆர்வலர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் விருது பெற்றவர். அவர் மாடு குளிப்பாட்டும் விவரம் அறிந்த பின்னும் அவர் கைகளினால் குளிப்பாட்டப்பட சென்றேன். கொதிக்கக் கொதிக்க சுடுநீரை முதுகில் ஊற்றித் தேய்க்கத் துவங்கினார். மாப்பிள்ளையின் கரங்களில் வைக்கோல் இருப்பதாகவே என் மடமுதுகு உணர்ந்தது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் ஈனஸ்வரத்தில் ‘மா . . .ப் . . .ளே’ என்று என் உதடு பிரிந்து லேசாக சத்தம் வந்தது. மாப்பிள்ளையின் காதுகளில் அது எட்டியதொ இல்லையோ அறியேன். ஆனால் அவராகவே, ‘சவம் எண்ணெ போவெனாங்கு. மலயாளத்தான் எண்ணெல்லா’ என்றபடி மேலும் தேய்த்தார். குளித்து முடித்து மாடிப்படிகளில் தவழ்ந்து சென்று நான் படுக்கையில் விழுந்த போது, மாப்பிள்ளை விடைபெறும் குரல் கேட்டது. நா . . .  ன் ரா . . . த்த்த் . . . திரி வா . . . ரேன் . . . அத்தான். தூ . . . ங்கு . . . ங்கொ. தா . . . வல ஆ . . . யி . . .ரு . . .ம்.’ சில நிமிடங்களில் முதுகு வலி குறைந்ததை உணர்ந்தேன். ‘மாப்ளெ சொன்ன மாரி என்ன இருந்தாலும் மலயாளத்தான் எண்ணெல்லா!’ என்று மனதுக்குள் சிலாகித்து முடிப்பதற்குள், இடுப்பிலிருந்து கால் வரைக்கும் பேயாக வலி பரவுவதை உணர்ந்தேன். இந்த முறை மறந்தும் மாப்பிள்ளையை அழைக்காமல் குத்துமதிப்பாக யாரையோ அழைத்து அலறினேன். கொஞ்ச நேரத்தில் காதருகில் ஓர் அறிந்த குரல். ‘யண்ணே! சும்ம இருக்கேளா?’ மந்திரம்லா வந்துருக்கென்’. சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்திருக்கும் மந்திரத்தின் குரல். அதாவது மந்திரத்தின் சிறு வயதைலிருந்ந்தே. சின்னஞ்சிறுவனாக அம்மன் சன்னதியில் ஒரு நடமாடும் இஸ்திரி வண்டி வைத்து துணிகளைத் தேய்த்துக் கொடுக்கும் காலத்திருந்தே மந்திரத்தின் குரல் மாறவில்லை. உருவத்தில் ஒரு பெரிய மனிதர் நின்று கொண்டிருந்தார். ‘மந்திரம்! ஆளே அடையாளம் தெரியலயடே!’ என்றபடி சிரமத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன். அருகில் அமர்ந்த மந்திரம் என் கைகளைப் பிடித்து கண்களை மூடிக் கொண்டு ‘நாடி’ பார்த்தான். ‘இடுப்புலதான் சுளுக்கு இருக்கு. கரண்டக்கால் வரைக்கும் ஒளைச்சல் இருக்குமெ!’ ‘ஆமா மாந்திரம். தாங்க முடியல.’ ‘துண்டக் கட்டிக்கிட்டு நில்லுங்க. தடவி விட்டு உப்பு கட்டி அடிச்சிருவொம். பத்தே நிமிசத்துல சரி ஆயிரும்.’ தீர்க்கமாக ஒலித்த மந்திரத்தின் குரல் திருமந்திரம் போல ஒலித்தது. பாதிவலி குறைந்த மாதிரி இருந்தது. துண்டைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். கையில் ஒரு புட்டி. அதே புட்டி. அதே என்றால் அதே. கேரள வைத்தியசாலை புட்டி. மனம் மிரள குமுறி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘இது எதுக்குடே?’ என்றேன். ‘ஒங்க மாப்பிள்ள சொல்லிட்டுப் போனாவொ. எறநூறு ரூவா குடுத்து வாங்கியிருக்காக. வம்பாப் போயிரக்கூடாதுல்லா!’ மாப்பிள்ளையை மனதுக்குள் காதலிக்க ஆரம்பித்தபடி, ‘ஸ்டூல் வேண்டாமாடே?’ என்றேன். ‘அதெதுக்கு? சுவத்தப் புடிச்சுக்கிட்டுத் திரும்பி நில்லுங்கொ’ சுவரைப் பிடித்தபடி நிற்கவும், கண்ணிமைக்கும் நேரத்தில் ‘அது’ நிகழ்ந்தது. விருட்டென்று என் இடுப்பில் உடுத்தியிருந்த துண்டை உருவினான், மந்திரம். ‘கிருஷ்ணாஆஆஆஆஆஆஆ’ என்று அலறினேன். ‘காசியாபிள்ள மவன் கிட்ணன் செத்துப் போயி ஆறு மாசம் ஆச்சுல்லா. ஹார்ட் அட்டாக்கு’ என்றான், மந்திரம். எதையும் கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. ‘எல்லாம் போச்சு. இனிமேல் நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டது. தேய்த்து முடித்த பின் மந்திரம் துணியில் கல் உப்பைக் கட்டி வெந்நீரில் முக்கி ஒத்தடம் கொடுக்கத் துவங்கினான். அந்த சோகத்திலும் சுகமாகத்தான் இருந்தது. வேலையை முடித்தபின், ‘அப்பொ நான் வாரென்’ என்றான், மந்திரம். திரும்பாமலேயே, ‘ம்ம்ம்’ என்றேன். ‘இன்னும் ஏன் சொவத்தப் புடிச்சிக்கிட்டெ நிக்கியோ?’ என்றான் மந்திரம். ‘கொஞ்ச நேரம் சொவத்தப் புடிச்சுக்கிட்டு நின்னா சொகமா இருக்கு. நீ கெளம்பித் தொலடே. நல்லாயிருப்ப’ என்றேன். இரவு டாக்டர் ராமச்சந்திரன் மாமா வந்து பார்த்தார். ‘இப்பந்தான் க்ளினிக்கச் சாத்திட்டு வாரென். ஊசி போட்டிருதென். அப்பதான் தூங்குவிய. மருமகன் ஊசிக்கு பயப்பட மாட்டேளே!’ என்றார். ‘அதெல்லாம் இல்ல மாமா. கத்தாம லேசா அளுவென். அவ்வளவுதான்’ என்றேன். ‘சரி. வேட்டிய எறக்குங்க’, என்றார். ‘சரி இது மாமாவின் முறை போல’ என்று நினைத்தபடி, திரும்பி நின்றேன். மாப்பிள்ளையின் கரங்களும், மந்திரத்தின் உப்பு ஒத்தடமும் ‘எதையும் தாங்கும் பின் புறத்தை’ எனக்கு வழங்கியிருந்ததால் வாழ்க்கையில் முதன் முறையாக ஊசிக்குக் கண்ணீர் சிந்தாமல் கல்லாய்ச் சமைந்து நின்றேன். இரவு ஆழ்ந்த உறக்கம். காலையில் எல்லாம் சரியானது. குஞ்சுவின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். சின்ன தாத்தா வீட்டு வாசலில் தனது இஸ்திரி வண்டியை நிறுத்தி துணிகளைத் தேய்த்துக் கொண்டிருந்த மந்திரம், என்னைப் பார்த்ததும் பாசத்துடன் பாய்ந்து அருகில் வந்து, ‘எங்கண்ணெ கெளம்பிட்டியொ? குஞ்சண்ணனப் பாக்கவா? இப்பமும் ஒரு மட்டம் சுளுக்கு தடவி விட வரணும்லா நெனச்சென். துணி நெறய சேந்துட்டு’ என்றான். ‘வேண்டாம்டெ. தாவல ஆயிட்டு. வரட்டுமா? தேங்க்ஸு’. மந்திரத்தின் கண்களைத் தவிர்த்தபடி குஞ்சுவின் வீட்டுக்கு நடையைக் கட்டினேன். குஞ்சுவின் தகப்பனாரிடம் ஆசியும், குஞ்சுவின் மனைவியிடம் ஏச்சும் வாங்கி விட்டு குஞ்சுவை இழுத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன். தாமிரபரணிக்குச் செல்லும் வழியில் நாங்கள் வழக்கமாகக் காதல் கடிதங்கள் எழுதுகிற குறுக்குத் துறை ரோட்டுக்குச் சென்றோம். வழக்கம் போல புத்திசாலித்தனமாகத் துப்பறிவதாக நினைத்துக் கொண்டு, மருத மரங்களைப் பார்த்துக் கொண்டு, என் முகம் பார்க்காமல், ‘யாருல அவ?’ என்றான், குஞ்சு. ‘கோட்டிக்காரப்பயல. அவ இல்லல. அவன். அவன் கூட இல்ல. அவன்கள்’ என்றேன். ‘என்னல சொல்லுதெ?’ முகம் சுளித்தபடி என் கண்களைப் பார்த்துக் கேட்டான், குஞ்சு. நான் கற்பிழந்த கதையை ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன். ‘இனிமேல் வாள்க்கைல நீ என்ன டிரஸ் போட்டாலும் நம்ம மந்திரம் கண்ணுக்குத் தெரியாது’ என்றான், குஞ்சு.

POST NAVIGATION

← Older posts

சுகா

* at Chennai International Airport at Chennai International Airport

* Photo

* முன்னுரை முன்னுரை

Search

RECENT POSTS

* நடைப்பழக்கம் . . . * கோவிட் காலம் * ராஜதாளம் . . . * மகானுபாவர் . . . * நடைச்சித்திரம் . . .

RECENT COMMENTS

* சங்கரன் on நாத தனுமனிஷம் * Sivaramakrishnan B on பைரவ ப்ரியம் * Chockalingam on நாத தனுமனிஷம் * jyothsna on கோவிட் காலம் * Kopalamani on கோவிட் காலம்

ARCHIVES

* November 2020

* June 2020

* May 2020

* February 2020

* January 2020

* December 2019

* November 2019

* October 2019

* July 2019

* March 2019

* December 2018

* November 2018

* January 2018

* July 2017

* December 2016

* November 2016

* September 2016

* August 2016

* June 2016

* March 2016

* February 2016

* November 2015

* September 2015

* August 2015

* July 2015

* June 2015

* May 2015

* April 2015

* February 2015

* September 2014

* August 2014

* July 2014

* May 2014

* April 2014

* March 2014

* February 2014

* January 2014

* December 2013

* July 2013

* May 2013

* April 2013

* December 2012

* November 2012

* August 2012

* July 2012

* May 2012

* April 2012

* February 2012

* January 2012

* December 2011

* November 2011

* October 2011

* September 2011

* May 2011

* April 2011

* March 2011

* February 2011

* January 2011

* November 2010

* October 2010

* September 2010

* August 2010

* July 2010

* June 2010

* May 2010

* April 2010

* March 2010

* February 2010

* January 2010

* December 2009

* November 2009

* October 2009

* September 2009

* August 2009

* June 2009

* May 2009

* April 2009

* March 2009

* February 2009

* January 2009

* December 2008

* November 2008

* October 2008

* September 2008

CATEGORIES

* 'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது * 'சொல்வனம்' இணைய இதழ் * 'சொல்வனம்' இதழ் 1 * 'சொல்வனம்' மின்னிதழ்' * 'வார்த்தை' November issue. * 'வார்த்தை' ஆகஸ்ட் இதழ் * 'வார்த்தை' இதழ் * 'வார்த்தை' செப்டம்பர்

இதழ்

* 'வார்த்தை' ஜனவரி இதழ் * 'வார்த்தை' டிசம்பர் 2008 * 'வார்த்தை' டிசம்பர் இதழ் * 'வார்த்தை' நவம்பர் இதழ் * 'வார்த்தை' மார்ச் இதழ். * ’ஊஞ்சல்’ மே மாத இதழ் * ’தி இந்து’ நாளிதழ். * ’வார்த்தை’ அக்டோபர்

இதழ்

* ’வார்த்தை’Feb இதழ்

* Uncategorized

* அஞ்சலி * அணிந்துரை * அந்திமழை இதழ் * அனுபவம் * அனுபவம் (இனிய) * ஆனந்த விகடன்

* ஆளுமை

* இசை

* இலக்கியம் * இளையராஜா * எண்ணமும் * எண்ணமும் குழுமத்தில் எழுதியது * எழுத்தும் * எழுத்தும் எண்ணமும் * எஸ்.கேபி.கருணா * கட்டுரை * காமதேனு * குமுதம் லைஃப்

* கோவை

* சிறுகதை

* சுகா

* சொல்வனம் * ஜான் சுந்தர் * ஜெயகாந்தன் * ஜெயமோகன் * தினகரன் * திருநவேலி * திருவண்ணாமலை * தீபாவளி மலர்

* தொடர்

* நாய்கள் * படித்துறை * பாலு மகேந்திரா * புத்தக வெளியீடு * புத்தகக் கண்காட்சி * புத்தகம் * மரபின் மைந்தன் * ரமணாசிரமம்

* லாலா

* வம்சி பதிப்பகம் * வாத்தியார் * வார்த்தை ஜூலை இதழ் * வார்த்தை மே இதழ் * ஸ்மிதா பாட்டீல்

META

* Log in

* Entries feed

* Comments feed

* WordPress.org

WIDGET READY

This left column is widget ready! Add one in the admin panel.

WIDGET READY

This center column is widget ready! Add one in the admin panel.

WIDGET READY

This right column is widget ready! Add one in the admin panel. Formation WordPress Theme Powered By WordPress

Details

Copyright © 2022 ArchiveBay.com. All rights reserved. Terms of Use | Privacy Policy | DMCA | 2021 | Feedback | Advertising | RSS 2.0