Are you over 18 and want to see adult content?
More Annotations
A complete backup of rittenhousehotel.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of mansworldindia.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of alliance4creativity.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of freetheanimal.com
Are you over 18 and want to see adult content?
Favourite Annotations
A complete backup of gebuhrenfrei.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of northstarwriters.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of cialisgenlkf.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of southbankcentre.co.uk
Are you over 18 and want to see adult content?
A complete backup of tysonsreporter.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of successfulsoftware.net
Are you over 18 and want to see adult content?
A complete backup of chicagodistributioncenter.com
Are you over 18 and want to see adult content?
Text
MENU
Skip to content
* Home
* ஆதி முதல் அருள்கடவுள் * ஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள் * என்னைப் பற்றி * கிரிய யோகா * குண்டலினி சக்தி * சித்தர்களின் உடலுறவுகொள்கை
* சித்தர்களின் விஞ்ஞானம் * சித்தவேதம் * சிவனே அனைத்திற்கும் மூலாதாரம் * சுழிமுனை (SUSHUMNA) * தியானம் * நமச்சிவாயத் திருப்பதிகம் * பதஞ்சலி யோகம் * பிரபஞ்ச சக்திகள் * மந்திர தியானம்* யோகா
* யோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி * சௌந்தர முனிகளின் அருளமுதம் * சௌந்தர முனியின பாடல் * சௌந்தர மூனிகளின் பொன்னுரைகள் * யோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி வில்லயரவேந்தால் திருப்புவனம் அருகில் மதுரை அரசு பள்ளி மாணவா மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்4-03-2014 * பூஜ்ய ஸ்ரீ சௌந்திரபாண்டியன் சுவாமிகள் * சௌந்தர முனியின் காப்பு * வாசியோகம் * வாழும் சித்தர்/ தவ யோகி Livesiddar in Madurai
இறந்த பின் எங்கு செல்கிறோம்?Jul24
சூட்சும தளம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளம் கிடைக்கப் பெறுவதுடன் அதனைப் பற்றிய சிறப்பான முடிவையும் பெற முடியும். தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும். சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரமைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,*
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),*
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),*
கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),*
வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),*
தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல்(Psychometry),
*
மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy) ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது. இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது. இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும். உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். நம் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களையம் திணறடிக்கும் இவ்வுணர்வுகளுக்கான நிலைக்களன் வேறொரு சூட்சும தளம் (Astral Plane) என எண்ணவேண்டியுள்ளது. இவற்றைப் பற்றி முதலில் பதிவு செய்தவர்கள் யார்? இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தலை சிறந்த விஞ்ஞானிகளும் பெராசிரியர்களும் (Sir William Crooks, Dr, F.W.H.Miyers. Sir Oliver Lodge, Richardd Hodson, Edmmund Gurney, Frank Padmore, R.D. Own, Prof.Aksakof, Russel Wallace, C.N.Jones) ஒன்று சேர்நச்து சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள். இவர்களால் மடனோதத்துவ ஆராய்ச்சியாளர் சங்கம் (Society for the Psychical Reserch)) என்ற ஓர் அமைப்பு 1885 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. எஸ்.பி.ஆர் என்று பிரபல்யமாகிய இச்சங்கத்திற்கு அமெரிக்காவிலும் ஒரு கிளை இருந்தது. மனிதன் இறந்த பின் வேறொரு நிலையில் வாழ்கிறான் என்ற அபிப்பிராயத்தை யார் தெரிவித்தாலும் அவர் கிறிஸ்தவ உலகின் பலத்த கண்டனதுக்கு ஆளாகக்கூடிய கால கட்டத்தில் இச்சங்கம் தமது ஆராய்ச்சிகளின் முடிவுகளை துணிவுடன் வெளியிட்டுப் பரபரப்பை எற்படுத்தியது. This entry was posted on July 24, 2015, in Uncategorized. Leave a
comment
பாபாஜி
Jul24
பாபாஜி நாகராஜ் கி.பி. 203, நவம்பர் 30 ஆம் நாள் தமிழ் நாட்டில் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பரங்கிப்பேட்டை என்னும் ஊரில் வசித்து வந்த நம்பூதிரிப் பிராமணத் தம்பதியருக்கு குழந்தையாக பிறந்தார். கிருஷ்ண பரமாத்மாவின் ஜன்ம நட்சத்திரமான ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயரிடப்பட்டது. அவருடைய ஐந்து வயதில், ஒரு நாள் பரங்கிப்பேட்டை சிவன் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது அழகால் கவரப்பட்ட வெளிநாட்டு வியாபாரி ஒருவர் குழந்தையை விற்க நினைத்து கடத்திச் சென்றுவிட்டார். அவர் நாகராஜை கல்கத்தா கொண்டு சென்று அங்கு ஒரு பணக்காரனுக்கு அடிமையாக விற்றுவிட்டார். சில காலம் சென்றபின் இரக்க சித்தமுடைய அந்தப் பணக்காரர் நாகராஜை விடுவித்து விட்டார். விடுவிக்கப் பட்டதும் கல்கத்தாவிலிருந்த சந்நியாசிகளின் குழுவுடன் போய்ச் சேர்ந்துகொண்டார் நாகராஜ். அவர்களிடம் வேத உபநிடதங்களையும் இதிகாசங்களையும் கற்று சிறந்த அறிஞனானார். தனது பதினோராவது வயதில் சந்நியாசிகளுடன் சேர்ந்து இலங்கையிலுள்ள கதிர்காமத்திற்கு பயணம் மேற்கொண்டார் நாகராஜ். கதிர்காமத்தில் சித்தர் போகநாதரைச் சந்தித்த நாகராஜ், அவரது சீடரானார். போகரின் வழிகாட்டலில் யோக சாதனைகளையும் தியானக் கிரியைகளையும் பழகினார். அவற்றைப் பயின்று கதிர்காமத்தில் சவிகற்ப சமாதி நிலையை அடைந்தார் நாகராஜ். அதோடு அங்கு முருகனின் தரிசனமும் பெற்றார். போகநாதர், அகஸ்தியரிடம் சென்று க்ரியா குண்டலினி பிராணாயாமத்தில் உபதேசம் பெறும்படி நாகராஜை பொதிகைக்கு அனுப்பிவைத்தார். பொதிகை மலை சென்ற நாகராஜ் அகஸ்தியரின் தரிசனம் பெறவேண்டி நாற்பத்தெட்டு நாட்கள் தியானத்தில் அமர்ந்தார். நாற்பத்தெட்டாம் நாள், நாகராஜ் கிட்டத்தட்ட வாழ்வின் முடிவை நெருங்கிவிட்ட நேரத்தில் அகஸ்தியர் தரிசனமளித்து அவரைக் காப்பாற்றினார். அங்கே நாகராஜுக்கு க்ரியா குண்டலினி பிராணாயாமத்தில் தீட்சையளித்து, அதன் நுணுக்கங்களையும் விளக்கி, இமயமலையிலுள்ள பத்ரிநாத்துக்குச் செல்லும்படி பணித்தார் அகஸ்தியர். பத்ரிநாத்தில் பதினெட்டு மாதங்கள் க்ரியா யோக நுணுக்கங்களை எல்லாம் தீவிரமாகப் பயிற்சி செய்து சொருப சமாதி அடைந்தார். அன்றிலிருந்து சித்தர் பாபாஜியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அன்பர்களுக்கு உதவி வருகிறார். வெகு சிலருக்கு மட்டுமே அவர் நேரடியாகதீட்சை
வழங்கியிருக்கிறார். ஆதிசங்கரர், கபீர், லாகிரி மகாசயர், யோகி ராமையா, நீலகண்டன் போன்ற சிலருக்கு மட்டுமே பாபாஜி நேரடியாக தீட்சை வழங்கினார். அப்படி தீட்சை வழங்கப்பட்டவர்களுள் ஒருவரான யோகியார் ராமையா மூலம் இவரது இளம் பிராயத்துக் கதை வெளிப்படுத்தப் பட்டது. The Voice of Babaji and Mysticism Unlocked, Babaji’s Master key to All, மற்றும் Death of Death என்ற மூன்று நூல்களும் பாபாஜி சொல்லச் சொல்ல நீலகண்டனால் எழுதப்பட்டவை. பத்ரிநாத்தில் சொரூப சமாதியடைந்த இவரைப் பற்றி வெளி உலகுக்கு அறியக் கிடைத்த தகவல்கள் வெகு சிலவே. ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட க்ரியா யோகத்தை முன்னெடுத்துச் செல்லும் மாபெரும் ஆசிரியர் பாபாஜி. இரண்டாயிரம் ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாயோகி. இவர் க்ரியா பாபாஜி, பாபாஜி நாகராஜ், மகாவதார பாபாஜி, சிவாபாபா என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர். சாவை வென்று, என்றும் பதினாறு வயதினராக வாழும் பாபாஜி ஒரு மாபெரும் சித்தர். மகா அவதாரம் என்று போற்றப்படுபவர். உலகம் முழுவதும் தெய்வீகப் பேரருள் பொழியச் செய்வதே பாபாஜியின் முக்கிய பணி. இது தூய அன்புடன் தன்னலமற்ற தொண்டு செய்பவர்கள் மூலமாக உலகுக்கு வெளிப்படுகிறது. தனது சகோதரி மாதாஜி நாகலட்சுமி தேவியாருடன் பத்ரிநாத்தில் உள்ள தனது ஆச்சிரமத்தில் வாழ்ந்து வருகிறார் பாபாஜி. பாபாஜியின் கிரியா யோகம் என்றால் என்ன? மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் ஞானம் ஆகியவையே நமது வாழ்க்கையின் இலட்சியங்களாகும். நாம் முழுமையடைய வேண்டும் என்னும் அவா இறைவனின் பிரதியான நமது சுயத்தில் இருந்து எழுகின்றது. இது மனிதர்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பாபாஜியின் கிரியா யோகமானது கடவுள் எனும் மெய்யறிவுடன் ஒருமித்து ஆன்மானுபவம் பெறுவதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாகும். பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார் இந்தியாவின் மாபெரும் சித்தர்களில் ஒருவரான மஹாவதார் பாபாஜி. கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது. கிரியா குண்டலிணி பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மனிதர்களுக்குள் இறையுணர்வானது நிலைபெறுவது இயற்கையாகவே துரிதமடைகின்றது என்று பரமஹம்ச யோகானந்தர் குறிப்பிடுகிறார். This entry was posted on July 24, 2015, in Uncategorizedand tagged
கிரியா யோகம்,
பாபாஜி
,
பாபாஜியின் கிரியா யோகம்.
Leave a comment
நோய் மற்றும் மனித உடல்Jul24
நோய் மற்றும் அசதி வருவதற்கான காரணங்கள் — . புறக் காரணிகளான பாக்டீரியா, வைரஸ், ப்ரொட்டோசொவா போன்றவை. வைரஸ் நோய் தொற்றை சரி செய்ய தடுப்பூசி போடுதல் மற்றும் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை தவிர வேறு சிகிச்சை எதுவும் கிடையாது. — . ஒவ்வாமை — . பூஞ்சைக் காளான் ஆகியவற்றால் ஏற்படும்தொற்று.
— . விபத்து, தீவிபத்து, எலும்பு உடைதல், உடற்காயம், உறுப்பு செயலிழத்தல். — . நீண்ட மற்றும் குறுகிய காலத்திற்க்கு எடுத்துக் கொள்ளும் தவறானஉணவு.
. — புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் போன்ற தீயப் பழக்கங்கள் —. நமது உடலைச் சுற்றியுள்ள ஒளி வியாபிப்பில் (ஆராவில்) ஏற்படும் சமன்பாடின்மை, தடைகள், குழப்பங்கள். — . எண்ணங்களினால் மன அழுத்த நோய்கள் — . செய்வினை/ கருப்பு மந்திரம் — . வெண் மந்திரம் — . சக்தியை பிறரிடம் இழத்தல் — . எதிர்மறையான இடங்களில் சக்தியை இழத்தல் முன் ஜென்ம வினைப் பயன் —. குறைபாட்டுடன் பிறத்தல் * உடலுறுப்பு வளர்ச்சியின்மை * குடும்ப நிலை, சகோதர-சகோதரிகள், திருமண உறவுகள். * ஏழ்மை நிலை * முற்பிறவிப் பலன்களைச் சரிசெய்தல் மனித உடல் மனித உடல் 4 வேறுபட்ட உடலை கொண்டது * பார்க்கக்கூடிய உள்ளுறுப்புகளுடன் கூடிய பரு உடல் * எனர்ஜி உடல் * அஸ்ட்ரல்(எமோஷனல்) உடல் * மெண்டல் உடல் மனிதனின் ஒளி வியாபிப்பு(ஆரா) மனிதனின் ஆரா நுட்பமான சக்தி உடலால் ஆனது * எனர்ஜி உடல் * அஸ்ட்ரல்(எமோஷனல்) உடல் * 3. மெண்டல் உடல் ஆரா / ஒளி வியாபிப்பு மனித உடலைச் சுற்றி உள்ளது. அது பரு உடலை உள்ளும் மற்றும் வெளியும் ஊடுருவிச் செல்லக்கூடியது. ஆரா பிராணனால் ஆனது. மற்றுமொரு சூட்சும சக்திஉடல்
காரண உடல் * உயர்ந்த சக்தியுடன் இணைக்கிறது * ஸ்தூல உடலுக்கு வெளியேஉள்ளது
* முற்பிறவி பலனில் ஒருபகுதி
* பரு உடல் மற்றும் காரண உடல் தெய்வீக கார்டு (வெள்ளி பிணைப்பு அல்லது அந்தகரணம்) மூலம் இணைக்கப்பட்டு உள்ளது. பிராணா நமது சக்தி உடல் வழியாக பரு உடலுக்குள் சக்கரங்களின் மூலமாக பாய்கிறது. இந்த சக்தி ஓட்டத்தில், சக்கரத்தில் உள்ள தடைகள் காரணமாக, ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் அவ்விடத்தில் வலி, அசௌகரியம் ஏற்படும். ஒழுங்கான தடையில்லா சக்தி ஓட்டம் பரு உடலுக்கு மிகவும் அவசியம். ஆராவைப் பார்க்க முடியுமா? — ஆம், உங்களால் முடியும் — கிர்லியன் புகைப்படம்மூலம்
— மனதால் காணும் சக்தி பெற்றவர் மூலம் (‘க்ளர்வாயண்ட்’) ஆனால் அவர்களின் பார்வை எல்லைக்குட்பட்டது — உங்களின் ஆராவை உணர்வதின் மூலம் — செடிக்கும் சக்தி புலம்உண்டு
சக்கரங்கள் என்றால் என்ன? — ஞான திருஷ்டி பெற்ற இந்திய யோகிகள் இதை கண்டு பிடித்தார்கள். — சுழலும் சக்தி மையங்கள் மனித உடலின் சக்தி உடலில் இருக்கிறது — அவை மனித உடலுள் பிராணாவை நாடிகள் அல்லது சக்திப் பாதைகள் மூலமாக அனுப்பும் ‘சக்தி பொறி’ஆகும்.
சக்கரங்களின் வகைகள் — சிறிய சக்கரங்கள் — மிகச் சிறிய சக்கரங்கள் — உறுப்புக்களின் சக்கரங்கள் — நாடிகள் / சக்தி பாதையின் சக்கரங்கள் — காகிதம் மற்றும் சக்கரத்தை கண்டு அறிதல் நூலைக் கொண்டு செய்த சிறிய ஊசலை உள்ளங்கை அல்லது ஏதேனும் சக்கரத்தின் மேல் நிறுத்தினால் அது சில விதமான அசைவை தோற்றுவிக்கும். சக்கரங்கள் சுழன்றவாறு பல வித செயல்களைச் செய்யும் சக்கரத்தின் சுழற்சி * கடிகார சுழற்சி * எதிர்மறை கடிகார சுழற்சி * நீளவாக்கில் * பக்கவாட்டில் * நீள்வட்டமாக * அசைவேதும் இன்றி சக்கரத்தின் தோற்றம் * சக்கரம் எனர்ஜி உடலில் அமைந்திருக்கும். * முன் மற்றும் பின் புறத்தில் அமைந்திருக்கும் * எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கும் * வாழ்நாள் முழுதும் பிராணாவை கிரஹித்து மற்றும் வெளியிட்டாவாறே இருக்கும். கார்டு என்றால் என்ன? — கார்டு என்பது இரண்டு அல்லது மேற்பட்ட மக்களை இணைக்கும் கயிறு போன்ற சக்தி பாதை — இந்த கார்டுகள் பிராண சக்தியை தடை செய்து பிரச்சினையை ஏற்படுத்துகிறது. — கார்டுகள் சக்கரத்தில் தோன்றும் போது அவ்விடத்தின் செயலை பாதிக்கும் — கார்டுகள் வேண்டுமென்றோ, அறியாமலோ ஒருவரை நோக்கி செல்கிறது. கார்டுகளின் வகை — கோபம் — ஏமாற்றம் — பொறாமை — காமம் — வருமானம்/ வெற்றி பெறத்தடை
— செய்வினையால் வரும்கார்டு
— வெண்மந்திரத்தால் வரும்கார்டு
கார்டுகள் ஏற்படும் இடம் — சக்கரங்களின் மீது — உறுப்புகளின் மீது — பரு உடலின் மீது — எனர்ஜி உடல், எமோஷனல் உடல், மெண்டல் உடலின் மீது கார்டுகள் எங்கிருந்து வருகின்றது — குடும்ப உறுப்பினர்கள் தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகள், போன்றோர் — திருமண உறவுகள் — முன்னால் காதலன், காதலி, கணவன், மனைவி — நண்பர்கள், அண்டைவீட்டார், வகுப்புத்தோழர் — உடன் பணிபுரிபவர் — ஆன்மீக குருமார்கள், பூசாரிகள் — செய்வினை செய்பவர்கள். — இன்னும் பிற சுவாசம் மூலம் நமக்கு நாமே பிராணாவை உற்பத்திச் செய்தல் சுவாச வகைகள் * எளிமையான சுவாசம் * பிராண சுவாசம் * யோகிகளின் சுவாசம் * சமன்படுத்தும் சுவாசம் கேசரி முத்திரை — நாக்கின் நுனியை மடித்து வாயின் மேல் அண்ணத்தில் வைத்தலை ‘கேசரி முத்திரை’ என்பர். — .சுவாசப் பயிற்சியின் போதும், மற்ற நேரங்களிலும் நாக்கை மடித்து மேலே வைப்பது சக்தி ஓட்டத்திற்க்கு உதவும். — நாக்கை மடித்து வைத்திருப்பது பிராண சக்தியை உடலின் முன், பின் புறங்களில் பரவச் செய்கிறது. இது நாடி மூலமாக பிராணனை உடல் முழுவதும் பரவச் செய்யும். எளிமையான சுவாசம் — நமது சுவாசம் பெரும்பான்மையான நேரத்தில் தன்னிச்சையாக நிகழ்கிறது. — எளிய சுவாசம் என்பது மூக்கின் வழியாக சுயநினைவுடன் சுவாசிப்பது. வயிறை நன்றாக சுருக்கி மற்றும் விரித்து சுவாசிப்பதுநன்று.
— வசதியாக அமர்ந்து சுவாசிக்கவும். சுவாசிக்கும் போது மனதை ஒருநிலைப் படுத்தவும். பிராண சுவாசம் — நாடி துடிப்பின் லயத்தில் 6-3-6-3 / 8-4-8-4 / 10-5-10-5 அல்லது அதற்குமேல் எண்ணவும். இதுவே நம் உடலின்லயம்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது வயிற்றை விரித்து நாடி துடிப்பின் — லயத்தில் 6எண்ணவும், நிறுத்தி 3 எண்ணவும், வெளிவிட்டவாறே வயிற்றை உள்ளிழுத்து 6 எண்ணவும், நிறுத்தி 3 எண்ணவும். இது ஒரு சுழற்சி. இதைப் போல் 2-3 நிமிடம் செய்யலாம். பழகிய பின் எண்ணிக்கையை 8-4-8-4 / 10-5-10-5 அல்லது அதற்குமேல் கூட்டலாம். யோகிகளின் சுவாசம் — இது பிராண சுவாசத்தைப் போல் தான் ஆனால் இம்முறை எண்ணிக்கை 8-4-8-4. உள்ளிழுக்கும் போது 6 எண்ணிக்கை வயிற்றை விரித்தும் மீதி 2 எண்ணிக்கை நெஞ்சை விரித்தும் சுவாசிக்கவும். 4 வரை நிறுத்தி, 8 எண்ணிக்கை மூச்சை வெளியேற்றவும். 2-3 நிமிடம் தொடரலாம். — சுவாசிக்கும் போது விரல் நுனியால் நுரையீரலுக்கு சக்தியூட்டலாம். சமப்படுத்தும் சுவாசம் — பிராண சுவாசத்தைப் போலவே ஆனால் வல, இட நாசி வழியாக மாற்றி மாற்றி சுவாசிக்கவும். — வலது நாசியை கட்டைவிரலால் மூடி இடது நாசியால் சுவாசத்தை உள்ளிழுக்கவும். — இடது நாசியை இட கட்டை விரலால் மூடி வலது நாசியால் சுவாசத்தை வெளிவிடவும். வலது நாசியால் இட நாசியை மூடியவாறே உள்ளிழுக்கவும். — வலது நாசியை மூடி இடது நாசியால் வெளியேற்றவும். — இது ஒரு சுழற்சி. தினமும் 2-3 நிமிடம் செய்யலாம். — 6-3-6-3 எண்ணிக்கையிலும் செய்யலாம். — இதை தினமும் செய்தால் ஒற்றை தலைவலி வருவதை தவிர்க்கலாம். கர்மாவும் சிகிச்சையும் — நோயுறுவதும், அறிய நோயில் துனுபுறுவதும் உங்கள் கெட்ட கர்மா என்றால், உங்களை குணமடையச் செய்வது எங்கள் நல்ல கர்மா. — நாங்கள் உங்களை குணப்படுத்துகிறோம். — சரியான முறையில் உங்களை சரி செய்வதின் மூலம் உங்கள் கெட்ட கர்மா எங்களிடம் வருவதில்லை. நீங்களே கர்மாவின் பாடங்களை படித்த பின்பே சிகிச்சை நடைபெறுகிறது. கர்மாவை நீங்களே, நீங்கள் மட்டுமே சமன் செய்கிறீர்கள். — நாங்கள் அதை எப்படி செய்வது என கற்றுத் தருகிறோம் — கர்மாவை வேறொருவருக்கு மாற்ற முடியாது. நீங்களே உங்கள் கர்மாவை சமன் செய்து நிர்வகிக்க வேண்டும்.Copy:
http://pranaviolethealingtamil.blogspot.in/2014_01_01_archive.html This entry was posted on July 24, 2015, in Uncategorizedand tagged
நோய் மற்றும் அசதி வருவதற்கான காரணங்கள்,
நோய் மற்றும் மனித உடல்.
Leave a comment
கிரியா யோகம் எப்படி நமக்குப் பயனளிக்கக் கூடும்?Jul24
கிரியா யோகம் ஒன்றிற்கும் மேற்பட்ட தீட்சைக் கருத்தரங்குத் தொடராகக் கற்பிக்கப்படுகின்றது. நம்முள் ஒருங்கிணைந்த மேம்பாட்டினை உண்டு செய்ய, தொடர்ச்சியான சில யுக்திகளை உட்கொண்டுள்ளது கிரியா யோகம். பல்வேறு விதமான யுக்திகளைத் தீவிரமாகப் பயிற்சி செய்தலின் மூலம் ஒருவருக்கு முழுமையான மாற்றம் கிடைக்கின்றது. மேம்பட்ட உடல் அரோக்கியம், சக்தி நிலை, சமன் பட்ட உணர்ச்சிகள், முழுமையான மனஅமைதி,
அதிகரித்திருக்கும் கவனம் மற்றும் உத்வேகம், அறிவு, மற்றும் ஆன்மீக ஞானம் ஆகியவை கிரியா யோகத்தின் பயிற்சியினால் வரும் சில பயன்கள் ஆகும். கிரியாக்கள் எனப்படும் யோக யுக்திகளை தினமும் பயிற்சி செய்வதன் மூலம், அளவிலா சக்தி, ஸ்திரத்தன்மை, மற்றும் அமைதி கிடைப்பதோடு மட்டுமல்லாது, அளவற்ற ஆற்றலும் தொலை நோக்குப் பார்வையும் ஒருவர் அடையலாம். நமது உடலிலும், மனதிலும் உள்ள செயலாற்றும்-தன்மை மற்றும் செயலற்றிருக்கும் தன்மை ஆகிய குணங்களை சமன் செய்து, கிரியா யோகம் நமக்கு சமநிலையும் முழு அமைதியையும் தருகின்றது. உடல், மனம் மற்றும் ஆன்ம நிலையில் மாற்றம் பெற விரும்புவோருக்கு இப்பயிற்சி மிகவும் உகந்ததாகும். இயேசு பிரான் கூறியதைப் போல், பூமியிலேயே இறைவனின் ஆட்சியைக் காண விரும்புவோருக்கு இது மிகவும் அவசியம். தங்களது வாழ்விலும், அடுத்தவரிடத்தும் மிகுந்த ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியினைக் காண விழைவோருக்கு இப்பயிற்சி ஏற்றதாகும். ஒருவரது வயது, பாலினம், பண்பாடு, சமூக மற்றும் சமயச் சார்பு அல்லது முந்தைய அனுபவம் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அனைவருக்கும் பயனளிக்க வல்லது கிரியா யோகம். கிரியா யோகம் வாழ்க்கையை, இன்பம் மற்றும் துன்பம்கலந்த
ஒருங்கிணைக்கப்பட்டு சரியான நேரத்தில் சரியான இடத்தில் நிகழும் பல நிகழ்வுகளின் தொகுப்பாகக் காண்கின்றது. கிரியா ஆசனங்கள், கிரியா பிராணாயாமம், கிரியா யோக தியானம் மற்றும் கிரியா மந்திரங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஒருவரது விழிப்புணர்வுநிலை மற்றும் சக்தி நிலையை உயர்த்துகின்றது. இதன் மூலம் ஒருவர், இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் சமமாகப் பார்த்து, தனது வளர்ச்சிக்கான வாய்ப்பாகஅவற்றை
ஏற்றுக்கொளகின்றார். கிரியா யோகம், உடல், உயிர், மனம், அறிவு மற்றும் ஆன்மநிலை சாதனையாகும். இதன் மூலம் நாம் நமது உண்மையான சொரூபத்தினையுணர்ந்து, கலங்கமற்ற சாட்சித்தன்மையில் ஐக்கியமாகி, உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களில் இருந்துநம்மை
வேறுபடுத்திக்கொண்டு அகங்காரத்தினை விட்டொழிக்கலாம். இதன் மூலம் நாம் நமது வாழ்வினைமுழுக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறோம். அவ்வாறு சுய கட்டுபாடு மேம்படும் பொழுது, ‘நான் செய்கின்றேன்’ என்னும் எண்ணத்தை விடுத்து, வாழ்க்கை நமக்களிக்கும் வாய்ப்புகளை முழுமனத்தோடு ஏற்றுக்கொள்கின்றோம். நமது வாழ்வில் இறைவனின் அனுகூலம் பெற நம்பிக்கையும், நன்றியுணர்வும் பக்தியும் கிரியா யோகப் பயிற்சியினால் மேம்படுகின்றது. நாம் இறைவனை நினைந்து தியானித்து, இறைவனின் நண்பனைப்போல அவருடன் பேசி அவரது பதிலையும் கேட்க முடிகின்றது. கிரியா யோகப் பயிற்சியினால் மனத்தெளிவும் முனைப்பும் பெருகுவதால், தொடர்ந்து நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும் சரியான வகையில் செயலாற்ற முடிகின்றது. பெருகும் மனத்தெளிவு மற்றும் அறிவுத்திறனால் நமது விழிப்புணர்வு நிலை விரிவடைந்து, குறைந்த சக்தி செலவிட்டு மிகுந்த பயன்களை சாதிப்பதோடு, அவற்றிற்கான நற்பெயரையும் விரும்பாது, இறைவனிடத்தே நன்றியுணர்வு பெருகுகின்றது. கிரியா யோகப் பயிற்சிகள், நமது உள்ளுணர்வு மற்றும் குணப்படுத்தும் ஆற்றலை வலுவடையச் செய்கின்றது. நமது நோய் எதிர்ப்புத் திறன் வலுப்பெற்று, மிகுந்த ஆரோக்கியமும், வலுவான நரம்பு மண்டலம், அதிக சக்தி மற்றும் அமைதியான குணமும் பெறலாம். கிரியா யோகப் பயிற்சியினால் நமது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவை முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதால், நமக்குள் இருக்கும் ‘குண்டலினி’எனப்படும் பேராற்றல் வாய்ந்த விழிப்புணர்வு நிலை எழுப்பப்படுகின்றது. நமது விழிப்புணர்வு நிலையே நமது குணம் மற்றும் வாழ்வியல் தரத்தைத் தீர்மானிக்கின்றது. ஆகையால் நாம் மேம்பட்ட விழிப்புணர்வு நிலையை அடைதல் வேண்டும். இதன் மூலம், நம் மனது வேறு பல பரிணாமங்களையுணர்ந்து நமது நற்செயல்களின் மூலம் இவ்வுலகிற்கும் நம்மைச் சுற்றியுள்ளோருக்கும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.Copy
This entry was posted on July 24, 2015, in Uncategorizedand tagged
கிரியா யோகம்.
Leave a comment
பிராணா என்றால் என்ன?Jul24
பிராணா என்பது நம்மை சூழ்ந்துள்ள உயிர்ச் சக்தி, இது நம்மைச் சுற்றிஉள்ளது.
பூமியைச் சூழ்ந்துள்ளது சூரிய மண்டலத்தைச் சூழ்ந்துள்ளது பிரபஞ்சத்தைச் சூழ்ந்துள்ளது அது தான் “ தெய்வீக சக்தி”. தொன்றுதொட்டே பிராணா எல்லா இடத்திலும் உள்ளது. * சமஸ்கிருதத்தில் ‘பிராணா’ * சீனத்தில் ‘ச்சீ’ * ஜப்பானில் ‘கீ’ * பாலினேசியனில் ‘மன்னா’ * மேற்கத்திய நாடுகளில் ‘லைப் ஃபோர்ஸ்’ * நாம் அதையே தமிழில் இப்பொழுது ‘உயிர்ச் சக்தி’ என்கிறோம். பிராணா உடற்பயிற்சிவகைகள்
— யோகா
— டாய்ச்சி — சீ குங்க் — அகிடோ போன்றவை பிராணா எங்கிருந்து வருகிறது * சூரிய பிராணா * பூமி பிராணா * அண்டவெளி பிராணா சூரிய பிராணா * கண்களால் காணக்கூடிய மற்றும் காண முடியாத ஒளிக்கதிர்கள் சேர்ந்தது தான் சூரியனின் வெள்ளை ஒளி. * சூரியனில் உள்ள ஏழு வண்ணங்களுக்கு சாட்சியாக வானவில் உள்ளது. * சூரியனின் காந்த சக்தி கிரகங்களை அதனதன் இடத்தில் இருக்க செய்கிறது. * நாம் எப்போதும் பல கிரகங்கத்தின் சக்திக்கு ஆட்பட்டு உள்ளோம். * சூரிய சக்தி (வெப்பமாக மாறி) அனைத்து உயிர்களையும் சென்றடைகிறது. * சூரியகாந்திப் பூ எப்பொழுதும் சூரியனின் பக்கமாகத் திரும்பி அதன் முழு சக்தியையும் பெறுகிறது. * சூரிய சக்தி அல்லது பிராணாவுடன் கரியமில வாயு உபயோகித்து ஒளித்தொகுப்பின் மூலமாக செடிகள் தானே தனது உணவை தயாரித்துக் கொள்கிறேன். * நிலத்தில் இருந்து கிடைக்கும் பிற கூட்டுப் பொருட்களான தண்ணீர் மற்றும் தாதுக்களைக் கொண்டு வேண்டியன தயாரிக்கலாம். * ஒருவர் சூரிய வழிபாட்டின் மூலம் சூரிய பிராணாவைப் பெறுகிறார். சூரிய சக்தியை பெற சூரியனை நோக்கி நின்று இவ்வாறு கூறி வணங்கலாம்: ஓ தெய்வீகச் சூரியனே! எங்களுக்காக ஒளி வீசுவதற்க்கு நன்றி. என்னை குணப்படுத்தி, புதுப்பித்துக் கொள்ள சக்தியை தாரும். நன்றி. நன்றி. நன்றி. பூமியின் பிராணா — பூமியின் பிராணன் புவியீர்ப்பு சக்தியாக வெளிப்படுகிறது. — பூமி சந்திரனை அதன் பாதையில் நிறுத்தி பூமியை வட்டமிட வைக்கிறது. சந்திரனுக்கும் அதன் சொந்த காந்த சக்தி உள்ளது. — சந்திரனின் காந்த சக்தி பூமியின் கடல்நீரை ஈர்த்து பெரிய மற்றும் சிறிய அலைகளை ஏற்படுத்துகிறது. கடல் அலை சில நேரம் 2-3 மீட்டர் உயரம்வரும்.
— _நாம் எப்பொழுதும் பூமி மற்றும் சந்திரனின் காந்த சக்திக்கு உட்பட்டே இருக்கிறோம்._ _பூமித்தாயிடமிருந்து சக்தியை இந்த எளியப் பிரார்த்தனை மூலம் பெறலாம்._ _இனிய பூமித் தாயே, எனது இருப்பிடமாக இருப்பதற்கு நன்றி. தயவுசெய்து என்னை குணப்படுத்தி புதுப்பித்துக் கொள்ள சக்தியை தாருங்கள். நன்றி. நன்றி. நன்றி.__ _
_அண்டவெளிப் பிராணா_ அண்டவெளிப் பிராணாவை தலை உச்சியில் சகஸ்ராரச் சக்கரத்தின் வழியாகப் பெறுதல் சில மந்திரங்களும் அண்டவெளிப் பிராணாவை பெறஉதவும்.
எடுத்துக்காட்டாக * அல்லா ஹு அக்பர் * ஓம் பரப்பிரம்மா * ஓ! டிவைன் ஹெவன்லி ஃபாதர் பிராணாவின் பிற வடிவங்கள் * மூச்சுக் காற்றில் கிடைக்கும் பிராணா * உணவில் கிடைக்கும்பிராணா
* நீரில் கிடைக்கும்பிராணா
* மரங்களில் இருந்து கிடைக்கும் பிராணா * ஸ்படிகம்/பளிங்கு கற்களில் கிடைக்கும்பிராணா
* புனித இடங்களில் கிடைக்கும் பிராணா * புனிதமான மனிதர்களிடம் கிடைக்கும் பிராணா * புனிதமான பொருட்களில் கிடைக்கும் பிராணா காற்றின் பிராணா * இந்திய பிரணாயாம கலையின் மூலம் நமது பருவுடல் மற்றும் சக்தி உடல் காற்றின் பிராணனை தாராளமாகப் பெறுகிறது. * நீல வானத்தை உற்று நோக்கினால் மிதக்கும் சிறிய வெள்ளைத் துகள்களே காற்றின் பிராணா. * யோகிகள் காற்றை மட்டுமே உட்கொண்டு நீண்ட நாட்கள் உணவின்றி வாழ்வார்கள். நீல வானத்தை உற்று நோக்கினால் காற்றின் பிராணவைக் காணலாம். உணவின் பிராணா * செடிகள் பிராணாவைப் பெற்று தனது இலைகள், தண்டுகள், வேர்கள் மற்றும் பழங்களில் சேமிக்கும். * ஒவ்வொரு செடியும் ஒரு குறிப்பிட்ட ஆராவை சூரியனிடமிருந்து பெறும்.*
யோகிகள்/தீர்க்கதரிசிகள் செடிகளின் பல வகையான பிராணாவைக் க்ண்டு பருவுடலின் நோய்களைத் தீர்க்க பயன்படுத்தினர். இதுவே, இந்திய ஆயுர்வேதம், இந்தோனேசிய ஜாமூ, சீன மூலிகை மருத்துவ முறைகளை தோற்றுவித்தது. அம்மா சமைத்த உணவு ருசிப்பதற்க்கும், சமைத்த உணவில் உள்ள உணர்வுபூர்வமான பிராணாவே காரணம். உணவு விடுதியில் சமைக்கப்படும் உணவில் எதிர்மறை உணர்ச்சி நிறைய இருக்கலாம். பூக்கள் நிரம்பிய நீரில் குளிப்பதின் மூலம் நமது ஆராவை தூய்மையாக்கலாம். நீரிலிருந்து கிடைக்கும்பிராணா
— நீரால் நிறைய பிராணாவை சேமித்து வைக்க இயலும் . — புனித இடங்களில் கிடைக்கும் நீரில் பிராணா அதிகமாக இருப்பதால் அவற்றைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம். — நல் வார்த்தைகளினால் ஆசிர்வதிப்பதின் மூலம் நீரின் பிராணாவை அதிகரிக்க செய்து, குணப்படுத்த உபயோகிக்கலாம். முஸ்லிம் மதகுருமார்கள் இவ்வாறு செய்வார்கள். — நம்மில் பலர் நாம் குடிக்கும் மற்றும் குளிக்கும் நீருக்கு நன்றி சொல்வதே இல்லை. — கடல் நீர் அல்லது உப்பு நீர் நமது ஆராவைத் தூய்மைப்படுத்தும் சக்தி வாய்ந்தது. — நாம் அனைவரும் நீரை அனுபவிக்கின்றோம். நீங்கள் குளிக்கும் போது நீருக்கு நன்றி சொல்லுங்கள். — கடல் நீரும், குடிநீரும் உயிரினங்கள் அழியாமல் இருக்கச் செய்கிறது. நீர் ஸ்படிகங்கள் * டாக்டர் எமட்டோ என்பவர் நீரை உறைய செய்து பளிங்கு கற்களைப் போல மாற்றலாம் என நிருபித்துள்ளார்._ _
* நீர் ஸ்படிகங்கள் பலவித உணர்ச்சிகளால் பாதிக்கப்படுகிறது. * சாதாரண சொற்களும் எண்ணங்களும் நீர் ஸ்ப்டிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. * நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் 72%-75% நீர்உள்ளது
* நமக்கு எதிர்மறை எண்ணம் வரும் போது உடலில் உள்ள் ஒவ்வொரு உயிரணுவும் எப்படி மாறி நடந்து கொள்ளும் என கற்பனை செய்து பார்க்கவும். * நாம் எப்போதும் நேர்மறை எண்ணங்களையே சிந்திக்க வேண்டும். மரங்களின் பிராணா — நம்மை குணப்படுத்தும் பிராணா மரங்களிடம் தாராளமாக இருக்கிறது. — அவற்றின் பிராணா இளஞ்சிவப்பு/ கருநீல வண்ணத்தில் இருக்கும். — கோவில்களில் இருக்கும் மரங்கள் அவ்விடம் முழுமைக்கும் சக்தி அளிக்கிறது. சில கோவில்கள் ஏற்கனவே வளர்ந்த சக்தி நிறைந்த மரத்தடியில் கட்டப்பட்டு இருக்கும். மரங்களிடமிருந்து பிராணாவை இவ்வாறு கேட்டுப் பெறலாம் “ ஓ தெய்வீக மரமே! நாமிருவருமே தெய்வீகப் படைப்பு. தயவுசெய்து, உனது உபரி சக்தியை கொண்டு என்னை குணப்படுத்தவும், புதுப்பிக்கவும் செய். நன்றி. நன்றி. நன்றி. ஸ்படிகத்தின் பிராணா — ஸ்படிகத்தால் தேவையான சக்தியை சேமித்து வைக்கவும், தேவைப்படும் போது திருப்பித் தரவும் முடியும். — சில ஸ்படிகங்கள் குறிப்பிட்ட சக்கரங்களை செயல்பட வைக்கும் மற்றும் நமது ஆராவை சக்தி வாய்ந்ததாக மாற்றவும் செய்யும். — சக்தியுட்டப்பட்ட ஸ்படிகங்களைக் கொண்டு மனிதர்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்களை எதிர்மறையான அல்லது தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கச் செய்யலாம். — ஸ்படிகம் அதன் சக்திக்கு ஏற்ற விதவிதமான நிறம் மற்றும் வடிவங்களில் கிடைக்கும். — ஸ்படிக கற்கள் மோதிரம், காதணி மற்றும் அட்டிகை ஆகியவற்றில் இருக்கிறது. — ஸ்படிகம் அசுத்தமடைந்து போகலாம். — எதிர்மறை விளைவை ஏற்படுத்தலாம். — தேவைக்கேற்ப அதனை வடிவமைக்க வேண்டும். — சில வகை ஸ்படிகம் சில சக்கரத்தை மட்டுமே ஊக்குவிக்கும். புனித இடங்களில் கிடைக்கும் பிராணா — நிறைய கோவில்கள் பிரபஞ்ச சக்தியை கிரஹிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால், அவற்றில் எப்போதும் பிராணா நிறைந்துள்ளது. பிரமிட், கோவில் மண்டபம், மசூதி கோபுரம் ஆகியவை பிராணாவை கிரஹிக்கும் படி கட்டப்பட்டுள்ளது. — இத்தகைய புனித இடத்திலிருந்து பிராணாவை அங்கே செல்பவர்கள் பெறலாம். — தெய்வச் சிலை வடிவங்களும் கோவில்களுக்கு சக்தி அளிப்பவையாக உள்ளன. — சிலைகள் சில நின்ற அல்லது உட்காரும் நிலையில் காட்சி அளிக்கின்றன. — அவை சக்தியை அண்டவெளியில் இருந்து பெற்று புனித இடங்களிற்கு அனுப்புகின்றன. — அனைத்து சிலைகளும் ஒரு காரணத்திற்காக வடிவமைக்கப் பெற்றுள்ளன. தெய்வத்தினால் அனுப்பப்படும் சக்தியின்வகைகள்
* வீடு,நபர், குடும்ப பாதுகாப்பு. * செல்வ செழிப்பு * குணப்படுத்துதல் * அன்பு, கருணை, நல்லெண்ணம். * தடைகளை விலக்குதல்.* அறிவு
* போன்றவை. புனிதமான மனிதரிடமிருந்து கிடைக்கும் பிராணா — யோகி மற்றும் தெய்வீக மனிதர்கள் தங்களின் சீடர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏராளமான பிராணாவை வழங்க முடியும். — புனிதமானவரின் ஆரா பல மைல்கள் நீண்டிருக்கும். — புனிதர்களால் தங்களின் பிராணாவை உள்ளங்கைகள், கண்கள், புருவ மத்தி மற்றும் முழு உடல் வழியாக செலுத்த முடியும். பொருட்களின் பிராணா — குறிப்பிட்ட சில பொருட்கள் நிறைய சக்தியை கொண்டிருக்கும். புனித நூல்கள், ரட்சைகள், படங்கள் மற்றும் விசேஷ குறியிடுகள் போன்றவை நிறைய பிராணாவைக் கொண்டிருக்கும். — பைபிள், குரான் மற்றும் பகவத்கீதை போன்றவை தெய்வீக சக்தியை வெளியிடும். புனித/தெய்வீக சின்னங்களின் மற்றும் புனித நூல்களில் இருந்தும் சக்தி கிடைக்கிறது.copy:
This entry was posted on July 24, 2015, in Uncategorizedand tagged
பிராணா என்றால் என்ன?.
Leave a comment
PARAMAHANSA YOGANANDA QUOTES ON KRIYA YOGAJul20
KRIYA YOGA
PRACTICE KRIYA YOGA, AND YOU WILL SURELY SUCCEED ON THE SPIRITUAL PATH. That is my own experience. The liberating power of KRIYA YOGA sunders the prison bars of karma. I have never found in East or West such a great technique as this. Everyone who is a follower of Kriya and of this path of SELF-REALIZATION FELLOWSHIP will go far ahead. Meditate and see the results in yourself… The real _Kriya Yoga_ way (life-force control) is not a bypath. It is the direct highway, the shortest route, to divine realization. It teaches man to ascend heavenward by leading the ego, mind, and life force through the same spinal channel that was used when the soul originally descended into the body. (bg p.654) _Pranayama_ is the primary art of realization. You cannot find God unless you can master the mortal breath. Breath ties the mind to the sense plane. As your breath becomes calm, your mind goes within. BREATHLESSNESS IS THE WAY TO GOD. Practice pranayama and you will know how to meditate—how to perceive God and be one withHim.
KRIYA YOGA PLUS DEVOTION —it works like mathematics;it cannot fail.
THE SCIENCE OF _KRIYA YOGA_ IS ETERNAL. IT IS TRUE LIKE MATHEMATICS, LIKE THE SIMPLE RULES OF ADDITION AND SUBSTRACTION, THE LAW OF _KRIYA_ CAN NEVER BE DESTROYED. Burn to ashes all books on mathematics; the logically minded will always rediscover such truths. Suppress all books on yoga; its fundamentals will be re-revealed whenever there appears a sage with pure devotion and consequently pure knowledge. _Kriya_, controlling the mind directly through the life force, is the easiest, most effective, and most scientific avenue of approach to the Infinite. In contrast to the slow, uncertain ‘bullock cart’ theological path to God, _Kriya Yoga_ may justly be called the ‘airplane’ route. Bliss—which is God, man’s ultimate goal—is felt in an intense degree in the practice of _Kriya Yoga_. The practice of _Kriya_ is far more purely blissful than the greatest enjoyment that any of our five senses or the mind can ever afford us. I do not wish to give anyone any other proof of this truth than is afforded by his own experience. The more one practices _Kriya_ with patience and regularity, the more one feels intensely and durably fixed in Bliss, or God. The Self-Realization Fellowship meditation technique of _KRIYA YOGA_ BASES ITSELF ON INTUITION. The more earnest we are about it, the wider and surer will be our vision of Reality—God. It is through intuition that humanity reaches Divinity. One-half minute of revolution of energy around the sensitive spinal cord of man effects subtle progress in his evolution; that HALF-MINUTE OF _KRIYA_ EQUALS ONE YEAR OF NATURAL SPIRITUAL UNFOLDMENT. We can know God only by knowing ourselves, for our real nature is similar to His. Man has been created in the image of God. If _Kriya Yoga_ is learned and earnestly practiced, you will know yourself to be a blissful spirit and will realize God. The ancient yogic technique convert the breath into mind-stuff. By spiritual advancement one is able to cognize the breath as a mental concept, an act of mind: a dream breath. Master of his body and mind the _Kriya Yogi_ ultimately achieves victory over the ‘last enemy,’ Death. When the yogi is able to see the light between the eyebrows and to withdraw his life force from the nervous system to the five sense-telephones, he enters the state of esoteric _tapasya_ (ascetical renunciation). His mind, being disconnected from the senses, then exists in a state of esoteric renunciation. After _Kriya_ practice, sit long in meditation with attention fixed at the _Kutastha_(the Spiritual Eye). The soul-consciousness that usually flows outward into body-consciousness is turned inwardly by _Kriya_. Then the mind, freed from its attraction to external objects, will experience the wondrous inner world of Spirit. Twenty-four hours of prayer or meditation by any other technique (except _Kriya Yoga_) will not produce as much spiritual advancement as one hour practice of_Hong-Sau_. Likewise, it would take twenty-four hours of deep _Hong-Sau_ practice to produce the same spiritual result gained from ONE HOUR OF _KRIYA YOGA_.
1 hour of Kriya Yoga = ~ 576 hours of normal meditation The true follower of _Kriya Yoga_ is the highest yogi, and_ Kriya Yoga_ is the greatest yoga technique ever developed in man’s searchfor the Infinite.
A devotee’s life is never all roses and honey. God tests each one to determine the degree of his devotion. For many latent desires of the past remain buried in the spinal region ready to spring forth when conditions are right. These tendencies must be burned in the fire of meditation. THE CURRENT WHICH IS REVOLVED AROUND THE SPINE WHILE PRACTICING KRIYA IS SO INTENSE THAT IT LITERALLY BAKES THE SEEDS OF KARMA. So if you practice _Kriya_ regularly, and with ever-increasing devotion for God you will reach the goal in the end. Every SRF student should remember that _Kriya Yoga_ is a science consisting of various steps, only one of which is that special technique called _Kriya Yoga_ (the particular _Kriya Yoga_ Technique that was taught by Lahiri Mahasaya and is now given through Self-Realization Fellowship). Get away from this world; not by flying away to a cave in the Himalayas, but to the cave of your mind, where you are free of the body and of the world. Practice Kriya Yoga, and you will surely succeed on the spiritual path. That is my own experience. The liberating power of Kriya Yoga sunders the prison bars of karma. I have never found in East or West such a great technique as this. Everyone who is a follower of Kriya and of this path of Self-Realization Fellowship will go far ahead. Meditate and see the results in yourself after a few years. As Self-Realization students know, when your spiritual eye is open in meditation, you see the astral light of the spiritual eye as a ring of golden radiance encircling a sphere of opalescent blue, and at the center, a five-pointed silvery-white star. If you can penetrate that star, you are immediately in God’s kingdom in the astral world. So learn to concentrate and meditate deeply. Though the spiritual man experiences the physical world and works through the instruments of the physical body, he does not identify himself with any sensation of the body; he is always centered in the spiritual eye. I never take my mind away from there, no matter what I am doing. When by constant practice of _Kriya_, the consciousness of this blissful state of the spiritual self becomes real, we find ourselves always in the holy presence of the blissful God in us. The principles of _Kriya Yoga_, therefore, are not the formula of a sectarian rite, but a science through the application of which the individual may realize how his soul descended into the body and became identified with the senses, and how that soul may be withdrawn from the senses and reunited with Spirit by a scientific method of meditation. This route of descent and ascension is the one universal path that every soul must travel. By the special technique of _Kriya Yoga_, the ingoing breath of _prana_ and the outgoing breath of _apana_ are converted into cool and warm currents. In the beginning of the practice of _Kriya Yoga_, the devotee feels the cool _prana_current going up the spine and the warm _apana_ current going down the spine, in accompaniment with the ingoing and outgoing breath. Only those who have acquired great good _karma_ through the good works of many incarnations are drawn to the path of Kriya Yoga. They are blessed who have learned this technique. It is not the technique of meditation alone that will bring you freedom; your character must be strong and pure. Your whole life and behavior must be in harmony with the laws of truth. The first rules of the yoga path of meditation are 1. & 2. You should follow: purity, evenminded contentment, introspection (self-study), devotion to God, and self-discipline. To progress in meditation, you must be working to free yourself from pride, wrath, greed, jealousy. 3. The body must be under your control in order to meditate deeply. 4. Then comes _pranayama_ (control of _prana_ or life force), techniques for calming the body and mind, breath and heartbeat. _Pranayama_ is the primary art of realization. You cannot find God unless you can master the mortal breath. Breath ties the mind to the sense plane. As your breath becomes calm, your mind goes within. BREATHLESSNESS IS THE WAY TO GOD. 5. The consciousness is turned within, away from the senses. 6. When your attention is freed from distractions of breath and body and outer sensations, it is able to focus single-pointedly on God. 7. In the inner stillness, one hears the mighty voice of Spirit as Aum… As you listen to and merge in that great, comforting Cosmic Vibration, the consciousness expands with it into all space. 8. And as the concentration and perception of meditation becomes deeper, one reaches the ultimate state, samadhi, in which the meditator, the process of meditation, and the object of meditation (God) merge in oneness. In samadhi, you know by direct experience that God and you are One. This entry was posted on July 20, 2015, in Uncategorized. 2 Comments
KRIYA YOGA
Jul20
THE SCIENCE OF KRIYA YOGA _Excerpts from Autobiography of a Yogi by Paramahansa Yogananda_ _Kriya Yoga_ is a simple, psychophysiological method by which human blood is decarbonated and recharged with oxygen. The atoms of this extra oxygen are transmuted into life current to rejuvenate the brain and spinal centers. By stopping the accumulation of venous blood, the yogi is able to lessen or prevent the decay of tissues. The advanced yogi transmutes his cells into energy. Elijah, Jesus, Kabir, and other prophets were past masters in the use of _Kriya_or a similar technique, by which they caused their bodies to materialize and dematerialize at will. _Kriya_ is an ancient science. Lahiri Mahasaya received it from his great guru, Babaji, who rediscovered and clarified the technique after it had been lost in the Dark Ages. Babaji renamed it, simply, _KriyaYoga_.
Mahavatar Babaji Lahiri Mahasaya “The _Kriya Yoga_ that I am giving to the world through you in this nineteenth century,” Babaji told Lahiri Mahasaya, “is a revival of the same science that Krishna gave millenniums ago to Arjuna; and that was later known to Patanjali and Christ, and to St. John, St. Paul, and other disciples.” TRANSMISSION OF KRIYA YOGA KRIYA YOGA IN THE BHAGAVAD GITA _Kriya Yoga_ is twice referred to by Lord Krishna, India’s greatest prophet, in the Bhagavad-Gita. One stanza reads: “Offering the inhaling breath into the exhaling breath and offering the exhaling breath into the inhaling breath, the yogi neutralizes both breaths; thus he releases prana from the heart and brings life force under his control.” _ —The Bhagavad Gita IV:29_ The interpretation is: “The yogi arrests decay in the body by securing an additional supply of prana (life force) through quieting the action of the lungs and heart; he also arrests mutations of growth in the body by control of apana (eliminating current). Thus neutralizing decay and growth, the yogi learns life-force control.” Another Gita stanza states: “That meditation-expert (_muni_) becomes eternally free who, seeking the Supreme Goal, is able to withdraw from external phenomena by fixing his gaze within the mid-spot of the eyebrows and by neutralizing the even currents of _prana_ and_apana_ within the nostrils and lungs; and to control his sensory mind and intellect; and to banish desire, fear, and anger.” —_The Bhagavad Gita V:27-28_ KRIYA YOGA IN YOGA SUTRAS BY PATANJALI _Kriya Yoga_ is mentioned twice by the ancient sage Patanjali, foremost exponent of yoga, who wrote: “_Kriya Yoga_ consists of body discipline, mental control, and meditating on _Aum_.”—Yoga Sutras II:1
Patanjali speaks of God as the actual Cosmic Sound of_Aum_ that is heard in meditation. _Aum_ is the Creative Word, the whir of the Vibratory Motor, the witness of Divine Presence. Even the beginner in yoga may soon hear the wondrous sound of _Aum_. Through this blissful spiritual encouragement, he becomes convinced that he is in communion with supernal realms. Patanjali refers a second time to the _Kriya_ technique or life-forcecontrol thus:
“Liberation can be attained by that pranayama which is accomplished by disjoining the course of inspiration andexpiration.”
—Yoga Sutras II:49 ACCELERATED SPIRITUAL EVOLUTION WITH KRIYA YOGA “_Kriya Yoga_ is an instrument through which human evolution can be quickened,” Sri Yukteswar explained to his students. “The ancient yogis discovered that the secret of cosmic consciousnessis
intimately linked with breath mastery. This is India’s unique and deathless contribution to the world’s treasury of knowledge. The life force, which is ordinarily absorbed in maintaining heart action, must be freed for higher activities by a method of calming and stilling the ceaseless demands of the breath.” The _Kriya_ Yogi mentally directs his life energy to revolve, upward and downward, around the six spinal centers (medullary, cervical, dorsal, lumbar, sacral, and coccygeal plexuses), which correspond to the twelve astral signs of the zodiac, the symbolic Cosmic Man. One-half minute of revolution of energy around the sensitive spinal cord of man effects subtle progress in his evolution; that half-minute of _Kriya_ equals one year of natural spiritual unfoldment. One thousand _Kriyas_ practiced in eight and a half hours gives the yogi, in one day, the equivalent of one thousand years of natural evolution: 365,000 years of evolution in one year. In three years, a _Kriya Yogi_ can thus accomplish by intelligent self-effort the same result that Nature brings to pass in a million years. The _Kriya_ shortcut, of course, can be taken only by deeply developed yogis. With the guidance of a guru, such yogis have carefully prepared their body and brain to withstand the power generated by intensive practice. The body of the average man is like a fifty-watt lamp, which cannot accommodate the billion watts of power roused by an excessive practice of_Kriya_. Through gradual and regular increase of the simple and foolproof methods of _Kriya_, man’s body becomes astrally transformed day by day, and is finally fitted to express the infinite potentials of cosmic energy, which constitutes the first materially active expression of Spirit. Referring to the sure and methodical efficacy of yoga, Krishna praises the technological yogi in the following words: “The yogi is greater than body-disciplining ascetics, greater even than the followers of the path of wisdom (Jnana Yoga), or of the path of action (Karma Yoga); be thou, O disciple Arjuna, a yogi!” —The Bhagavad Gita VI:46 FROM MATERIAL TO DIVINE CONSCIOUSNESS The _Kriya Yoga_ meditation techniques of _pranayama_, life-force control that transmutes breath into subtle lifetronic energy, bring positive realization that the composition of the body is pure cosmicenergy.
In the adept practice of _Kriya_, the body is oxygenated and its atoms etherealized until it becomes light as a feather. Man has no idea how much power comes into the body when he has mastered the mystery of the breath._Kriya_ practice brings a regulated, continuous inflow of oxygen into the body, the atoms of which, by the process of _pranayama_, are transmuted into life force, reinforcing the subtle currents in the spine, which in turn awaken the astral cerebrospinal centers and spiritualize the entire body. After years of successful practice, the body of the advanced _Kriya Yogi_becomes so spiritualized that in exalted states he can hardly feel it touch the ground. The suffusion of life force becomes so powerful that the whole body loses its delusive solidity and actually levitates. I can testify to that from my own experience. But the beginner should not expect to jump weightless tomorrow! Modern man is accustomed to getting results quickly; his industry and technology manufactures products so rapidly that he thinks there should be a convenience package of concise spiritual progress as well. A presumption of instant spiritual achievement is perhaps more than a bit audacious considering the innumerable lifetimes already spent in making oneself an unspiritual being. Even a lifelong practice is little to be required. Nevertheless, the _Kriya Yoga_science and art of meditation are not drudgery, because gradual transforming results are felt from the very beginning. (p.823, Discourse 42, The Second Coming of Christ by Paramahansa Yogananda) This entry was posted on July 20, 2015, in Uncategorizedand tagged
KRIYA YOGA . Leave acomment
ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை…Jul20
1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். 2. Extra Sensory Perception (ESP) எனப்படும் நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. 3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. 4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. 5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. 6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும்சக்தி.
7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்தசக்தி.
8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. 9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.Copy
This entry was posted on July 20, 2015, in Uncategorized. Leave a
comment
மகாவாக்கியங்கள்Jul20
மகாவாக்கியங்கள்என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மகாவாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மகாவாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு: 1. பிரக்ஞானம் பிரம்ம – “பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்” (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்]) 2. அயம் ஆத்மா பிரம்ம – “இந்த ஆத்மா பிரம்மன்”(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்) 3. தத் த்வம் அஸி – “அது(பிரம்மம்) நீ” (சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம்) 4. அஹம் பிரம்மாஸ்மி – “நான் பிரம்மன்” (யஜுர் வேதத்தின்பிருஹதாரண்யக உபநிடதம்) மேலே கூறப்பட்டுள்ள பிரம்மன்,பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் ‘பிரம்மனை’ குறிக்கிறது இந்த நான்கு மகாவாக்கியங்களும் ஆத்மனுக்கும் பிரம்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது. பிரம்மன் படைப்பின் அடிப்படை தத்துவம், பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியது. அதே சமயம் ஆத்மன் அனைத்து உயிர்களிடத்தும் அறியப்படும் தான் என்ற தத்துவத்தின் மூலாதார உருவகம். ஆத்மன் அழிவற்றது அதே போல் பிரம்மனும் அழிவற்றது. யோகத்தின் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் ஒருவர் ஆத்மனும் பிரம்மனும் ஒன்று என்பதை அறிய இயலும். காஞ்சி பராமாச்சாரியர் தன்னுடைய புத்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: சன்யாசத்துக்குள் ஒருவர் நுழையும் போது அவருக்கு இந்த நான்கு மகாவாக்கியங்களும் கற்றுத்தரப்படுகின்றன. பிற வாக்கியங்கள் உபநிடதங்களில் குறிப்பிடப்படும் வேறு சில முக்கியமான வாக்கியங்கள்: சர்வம் கல்விதம் பிரம்ம – அனைத்து அறிவும் பிரம்மன் (சந்தோக்ய உபநிடதம்) நேஹ நானாஸ்தி கிஞ்சின – வேறெங்கும் எதுவும் இல்லை(சந்தோக்ய உபநிடதம்) தத்துவமசி என்ற மகாவாக்கியம்.இந்து சமய வேத நூல்களில் வேதாந்தப்பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற்கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாமவேதத்திய மகாவாக்கியம் தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய், அல்லது ‘நீ அதுவாக உளாய்’ என்றும் சொல்லலாம். இம்மகாவாக்கியத்திலுள்ள சொற்களின் பொருள் இவ்வளவு எளிதாக இருப்பினும், வாக்கியத்தின் உட்கருத்தைப்பற்றி வெவ்வேறு வேதாந்தப்பிரிவினரின் கொள்கைகள் கணிசமாக மாறுபடுகின்றன. சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் சுவேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேதசாத்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்துவிட்டுத் திரும்பும் வாலிபனிடம் “எதனால் கேள்விக் கெட்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ்வுபதேசத்தை குருவிடம் தெரிந்துகொண்டாயா?”என்று கேட்கிறார். இதைத்தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்தமுடிவாக இதே மகாவாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார். “எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகிவிடுகின்றனவோ, மற்றும் அவை அந்நிலையில் ‘நான் இது’என்று எங்ஙனம் அறியமாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம்பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்” “ஆலம்பழம் ஒன்றைப்பிளந்தால் அணுவடிவான விதைகள் காணப்படுகின்றன. அவ்விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த சூட்சுமப் பொருளிலிருந்தே பெரிய ஆலமரம் உண்டாகி நிற்கிறது. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்” “உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக்கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல்பாகத்தையோ நடுப்பாகத்தையோ அடிப்பாகத்தையோ உண்டுபார்த்தால் அது உப்பாகவேயிருப்பது தெரியும். அதேபோல் முக்காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்””ஒருவனை கண்ணைக்கட்டி காந்தாரதேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய்விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும்? அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஞானோதயம் பெற்று அப்பரம்பொருளுடன் ஒன்று படலாம். அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்” ஆதி சங்கரரால் விரிவாக விளக்கப்பட்டு பற்பல நூற்றாண்டுகளாக பல்வேறு அறிவாளிகளால் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் அத்வைத வேதாந்தம் ‘அதுவே நீயாக உளாய்’ என்பதை ‘அது’வும் ‘நீ’யும் ஒன்றே என்று பொருள் கொள்கிறது. இங்கு ‘அது’ என்பது பரம்பொருள். ‘நீ’ என்பது ஒவ்வொரு பிராணிகளிலுமுள்ள ஆன்மா. நாம் ஓரிடத்தில் ஒருகாலத்தில் பார்த்த ஒரு நபரை, மற்றோரிடத்தில், மற்றொருகாலத்தில் வேறு பெயரிலும், வேறு வேடத்திலும் சந்தித்தாலும், ‘அவர் தான் இவர்’ என்று சொல்லும்போது எப்படி ‘அவர்’, ‘இவர்’ இருவருடைய நடை, உடை, பாவனைகளில் ‘அன்று’, ‘இன்று’ என்ற இருகாலகட்டங்களில் உள்ள வேற்றுமைகளைத் தள்ளுபடி செய்துவிட்டு, இருவருக்குள்ளும் உள்ள ஏதோ ஓர் ஒற்றுமையை ‘இது தான் நிரந்தரம்; மற்றவையெல்லாம் கால தேசங்களால் ஏற்பட்ட வெளி வேற்றுமைகள்’ என்று தீர்மானித்து, இருவரும் ஒருவரே என்று தீர்மானிக்கிறோமோ, அதே முறையில் ‘அதுவே நீயாக உளாய்’ என்ற வாக்கியத்தில், ‘அது’ என்ற பரம்பொருளினிடத்திலுள்ள படைப்பாற்றல், மாயா ஆற்றல் முதலிய மானிடமல்லாத குணங்களைத் தள்ளிவிட்டு, அவ்விதமே ‘நீ’ என்ற பிராணியினிடத்தில் குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத்தையும், உடல், மனது, புத்தி இவைகளையும் தள்ளிவிட்டால், ‘அது’வும், ‘நீ’யும் ஒன்றே என்பது விளங்கும் என்பது அத்வைத சித்தாந்தம். ஸ்ரீராமானுஜரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக வைணவம் என்ற பெயரில் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விசிட்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. மகாவாக்கியத்திலுள்ள ‘நீ’ என்ற சொல், பிராணிகளிலுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் இவ்வான்மாவையும் அப்பரம்பொருளையும் ஒன்றாக்கி ஒரு முற்றொருமையாகக் கூறமுடியாது. ஏனென்றால், இவ்வான்மா அப்பரம்பொருளின் ஒர் அம்சமே. ‘இது’ வும் ‘அது’ வும் ஒன்றாகாது. இரண்டன்மை என்னும் பொருள் படும் அத்வைதம் என்னும் கருத்தில் இருந்து நுட்பமாய் வேறுபாடு கொண்டது என்று குறிக்கவே விசிட்டா என்னும் முன்னொட்டு உள்ளது. மத்வாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக பெரிதும் போற்றப்படும் துவைத வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. ‘தத்துவமஸி’ என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் ‘ஸ ஆத்மா’ என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, ‘ஸ ஆத்மாதத்துவமஸி’ என்பதை ‘ஸ ஆத்மா + அதத்துவமஸி’ என்று பிரிக்கவேண்டும் என்றும், அதனால் அதன் பொருள் ‘நீ ‘அதத்’, அதாவது, பரம்பொருள் அல்லாததாக, உளாய்’ என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு, என்பது துவைத சித்தாந்தம். மேலும் இவ்விதம் ‘அதத்துவமஸி’ என்று சொல்வதுதான் சுவேதகேதுவின் கேள்விகள் ஏற்பட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிறது. ஏனென்றால் அவன் வரும்போதே தான் 12 ஆண்டுகள் படித்துவிட்ட செறுக்குடன் வந்தான். அவன் உண்மையில் பரம்பொருள்என்று
சொல்லப்பட்டுவிட்டால் அவனது கர்வம் இன்னும் அதிகமாகிவிடும். (அத்வைதப்பிரிவினர் இவ்வாதத்தை மறுக்கின்றனர்.) சுத்தாத்வைதம் இது 15ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்ட வேதாந்தப்பிரிவு. இதன்படி ஆன்மாவும் பரம்பொருளும் சாராம்சத்தில் ஒன்றே; ஆனால் ஆன்மாவுக்கு பரம்பொருளின் ஆனந்தாம்சம் கிடையாது. அதனால் ‘தத்துவமஸி’ என்ற மகாவாக்கியத்திற்கு சங்கரரின் முற்றொருமையில் ஒரு சிறிய மாற்றத்துடன் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, ‘தத்’ என்பது பரம்பொருள். ‘துவம்’ என்ற சீவன் அதனுடைய ஒரு பாகம். துவைதாத்வைதம் இது நிம்பர்ககாச்சாரியாரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம். இதன்படி, பரம்பொருளுக்கும் தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள ‘பேதத்தில் அபேதம்’, ஆதவனுக்கும் அதன் கிரணங்களுக்கும் உள்ள உறவு, அல்லது நெருப்புக்கும் நெருப்புத்துளிகளுக்கும் உள்ள உறவு, இவைகளைப் போன்றது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும். அசிந்த்ய-பேதாபேதம் இது 16ம் நூற்றாண்டில் சைதன்யரால் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதாபேதம் நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் ‘அது’வும் ‘நீ’யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, ம்ற்றொன்று முடிவில்லாதது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும். Copy http://angelinmery.weebly.com/ This entry was posted on July 20, 2015, in Uncategorized. Leave a
comment
வேதங்களின் மூலக்கூறுகளாக சித்தர்களின் மகத்துவத்தை உணர்வது)Jul20
வேதங்களின் மூலக்கூறுகளாக சித்தர்களின் மகத்துவத்தை உணர்வது) உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது.”புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்”அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.உபநிஷதங்கள், பிரம்மா சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை முஉன்றும் ‘பிரஸ்தான த்ரயம்’என்று வழங்கப் படுகின்றன.அறுதி உண்மைகளில் உபநிஷதங்களே சிகரத்தைத தொட்டதாக கருதுகின்றனர்.உபநிஷங்கள் பலவானாலும்,108 பொதுவாக கொள்ளப் படுகின்றன. அவற்றில் ஈஸ,கேன,கட,பிரச்சன,முண்டக,மாண்டூக்ய, ஐதரேய,தைத்திரீய,சாந்தோக்ய ,பிருகதரன்யா , சுவேதஸ்வதார , கௌசீதகி , மகாநாராயண, மைத்ராயணி இவை பதினான்கும் முக்கியமானைவை. உபநிஷதம் ஐதரேய, கௌசீதகி , வேதம் ரிக் உபநிஷதம் ஈஸ,கட,தைத்திரீய,பிருகதரான்யா, சுவேதஸ்வதார , வேதம் யஜுர் மைத்ராயணி, மகாநாராயண. உபநிஷதம் கேன,சாந்தோக்ய வேதம் சாம உபநிஷதம் பிரச்சன,முண்டக,மாண்டூக்ய வேதம் அதர்வண யஜூர் வேதத்தில் சுக்ல,கிருஷ்ணா என இரு பிரிவுகள் உண்டு.கிருஷ்ணா யஜுர் வேதத்தில் தைத்த்ரிய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் பற்றி கூறப் பட்டுள்ளது.சுடர் என்ற முனிவரால் அருளப் பட்டது.வாழ்க்கை தத்துவங்களையும் , புரிதல்களையும் பிற மதங்களிலும் ,சமய புத்தகங்களையும் மேற்கோள்களையும் பார்க்கும் நாம் , நம் மதத்தின் பெருமைகளை தேடி நாடினால் , அதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.இறப்புக்கு பின் என்ன நடக்கும்…..ஒரு ஆராய்ச்சி பூர்வமான அலசல் எமனுடன் இருந்தால்….இருந்தால் என்ன? இருக்கிறதே? அதுதான் கட உபநிஷதம்.வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின் முலம் உண்மை புகட்டப் படுகின்றது.நசிகேதன் என்கிற சிறுவன், வாஜசிரவசின் மகன்.தந்தையின் யாக நியதிகளை சரியாக கடை பிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை அவன் தந்தை விரும்பாததால் அவன் எம தர்மனிடம் செல்ல நேர்ந்தது. அவன் மூன்று வரங்களை கால தேவனிடம் பெற்றான்.அதைப் பற்றி கூறுவதுதான் இந்தக் கட உபநிஷதம். வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன: ரிக் வேதம் யசுர் வேதம் சாம வேதம்அதர்வண
வேதம்என்பனவாகும்.இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை: 1. மந்திரங்கள் (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்) 2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள் 3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள் 4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காட்டு முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யஜுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சடபாத பிராமணா என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சடபாத பிராமணா சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது. முதல் இரண்டு பாகங்களும் “கர்ம கண்டங்களாகவும்”, அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் துணையான வேதாங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தங்கள் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது. வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன: ரிக் வேதம்யசுர் வேதம்சாம வேதம்அதர்வண வேதம் என்பனவாகும். இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.ஒவ்வொரு வேதமும் உபவேதங்களைக் குறிப்பிடுகின்றன. அவை நான்கு. ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், சில்ப வேதம் என்பனவாகும். அ) ஆயுர்வேதம்:- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது. ஆ) தனுர் வேதம்:- யஜøர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது. இ) காந்தர்வ வேதம்:- சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது. ஈ) சில்ப வேதம்:- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது. பஞ்சபூதங்களில் ஒன்றானதும் வேதங்களால் வணங்கப்பட்டதுமான அக்னி இறையாற்றலின் தனித்துவமான வடிவம். நவநாகரீக கலாச்சாரத்தால் அக்னியின் மகத்துவத்தை உணராமல் ஒரு ஜடமான நிலையில் நம் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இறைவன் ஒருவனே என்றும் பல்வேறு வடிவில் இருப்பவனும், பல்வேறு பெயரில் அழைக்கப்படுபவனும் இறைவன் தான் என கூறுவது போல தீ,வெம்மை, வெப்பம், நெருப்பு, கனல் மற்றும் அக்னி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பல்வேறு நிலையில் இருப்பது இறைவனின் ஆற்றலான அக்னியே என்பதை உணரவேண்டும். சிந்தித்து பார்த்தோமானால் தினமும் நம் வாழ்க்கையில் அக்னியின் செயல் மிகவும் இன்றியமயாதது. காலையில் நீங்கள் எழும் நேரம் கிழக்கில் சூரியன் என்னும் அக்னி ரூபம் செயல்பட வேண்டும். உங்கள் உடலை சுத்தமாக்கும் நீர் மழை வடிவிலும் நதி வடிவிலும் கிடைப்பதற்கு அந்த சூரியனே அக்னியாக இருந்து செயல்படுகிறார். தாவரங்களின் செயலுக்கும் நம் உணவின் உற்பத்திற்கும் அக்னியின் பயன் மிகவும் அவசியமாகிறது. நம் உடலின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் வெப்பமே உணவை ஜீரணம் செய்ய உதவுகிறது. இதற்கு ஜட அக்னி என்று பெயர். ஒரு மனித உடலின் வெப்ப நிலை இழந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பெயர் பிணம் என்கிறார்கள். ஆக ஒரு மனிதன் உயிருடன் இருப்பதை நிர்ணயிப்பதே அக்னியின் செயலாகிறது. எந்த ஒரு பொருளும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அக்னியே காரணம் என்பது ஆழ்ந்து உணர்ந்தால் புரியும். பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் பஞ்சபூதத்தால் ஆனது. அவற்றில் அக்னியின் அளவு கூடுதலாக இருப்பது இயங்கும் உயிராகவும், அக்னி குறைவாக இருப்பது இயக்கமற்ற பொருளாகவும் மாறுகிறது.பூமியின் மையத்தில் அக்னி குழம்பு இருக்கிறது அவை நில அடுக்குகளில் புகுந்து வெளிவரும் பொழுது எரிமலை அக்னி குழம்பை கக்குகிறது. நாம் வசிக்கும் சூரிய மண்டலத்தின் மையத்தில் அக்னி ரூபமாக இருக்கிறது சூரியன். சூரிய மண்டலத்தில் மட்டுமல்ல அனைத்திலும் விதையாகவும், கருவாகவும் இருப்பது அக்னியே ஆகும். தீ நெருப்பு என குறிப்பிடாமல் அக்னி என குறிப்பிட காரணம் என்ன? அக்னி என்பது நெருப்பின் ஆழ்ந்த சொரூபம். ஜிவாலையாக எரியும் பொழுது நெருப்பு என்றும் கட்டுப்பாட்டுடன் திகழும் பொழுது அக்னி என்றும் கூறலாம். அக்னி என்பது வடமொழிச்சொல் என்றாலும் அக்னி என பல்வேறு சங்ககால தமிழ் படலிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. யஜூர் வேதத்தின் அக்னி என்பது முழுமுதற்கடவுளாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் உபநிஷத்தில் அக்னி ஜாதவேதன் என கூறிப்பிடுகிறார்கள். ஜாதவேதன் என்றால் அனைத்திலும் இருப்பவன் – அனைத்தையும் உணர்ந்தவன் என கூறலாம். எனக்கு பிடித்த பெயர்களின் ஒன்று ஜாதவேத் எனும் பெயர். வேதாந்தம் வேதம் + அந்தம் என்ற சமஸ்கிருத சொற் பிணைப்பினால் வருவது. வேதம் அல்லது வேதங்கள் நான்கு ஆரிய சமய தத்துவ நூல்களைக் குறிக்கும். அவை இருக்கு, யசூர், சாமம், அதர்வம் எனபனவாகும். அந்தம் என்றால் கடைசியில் வருவது அல்லது முடிவில் வருவது என்று பொருள் தரும். ஒவ்வொரு வேதத்துக்கும் நான்கு பாகங்கள் உண்டு. அவை மந்திரங்கள், பிராமணங்கள், அரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகும். வேதம் + அந்தம் வேதங்களின் கடைசி இரு பாகங்களான அரண்யகம் மற்றும் உபநிடதங்களை சிறப்பாக சுட்டும். வேதங்களின் கடைசி இரு பாகங்களும் பெரும்பாலும் தத்துவரீதியில் அமைந்தவை, அவற்றில் கூறப்பட்ட பல கருத்துக்கள் முதல் இரு பாகங்களில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பாகவும், முரணாகவும் இருப்பதைக் காணமுடியும். ஆகையால் வேதாந்தத்தை வேதம் என்று நேரடியாக ஒப்பிடுவது பொருந்துமா என்பது கேள்விக்குரியதே. Copy:http://angelinmery.weebly.com/vetham.html This entry was posted on July 20, 2015, in Uncategorized. Leave a
comment
POST NAVIGATION
← Older posts
Newer posts →
Search for:
ARCHIVES
* January 2021 (1) * December 2020 (1)* June 2020 (1)
* May 2020 (1)
* April 2020 (1)
* March 2020 (5)
* February 2018 (1) * January 2018 (3) * September 2017 (1)* June 2017 (1)
* April 2017 (3)
* March 2017 (1)
* December 2016 (9) * November 2016 (3) * October 2016 (1) * September 2016 (1)* August 2016 (2)
* July 2016 (3)
* June 2016 (2)
* January 2016 (6) * November 2015 (2) * September 2015 (4)* August 2015 (5)
* July 2015 (13)
* June 2015 (1)
* May 2015 (3)
* April 2015 (20)
* March 2015 (12)
* February 2015 (57) * January 2015 (44) * December 2014 (17) * November 2014 (8) * October 2014 (13) * September 2014 (7) * August 2014 (10)* July 2014 (3)
* June 2014 (2)
* May 2014 (5)
* April 2014 (30)
* July 2013 (1)
BLOG STATS
* 660,333 hits
Blog at WordPress.com. மூன்றாம் கண்-SUZHIMUNAI Create a free website or blog at WordPress.com. Add your thoughts here... (optional) Post toCancel
Email (Required) Name (Required) WebsiteLoading Comments...
Comment
×
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. To find out more, including how to control cookies, see here: CookiePolicy
* FollowFollowing
* மூன்றாம் கண்-SUZHIMUNAI*
Already have a WordPress.com account? Log in now.*
* மூன்றாம் கண்-SUZHIMUNAI* Customize
* FollowFollowing
* Sign up
* Log in
* Report this content * Manage subscriptions* Collapse this bar
Details
Copyright © 2024 ArchiveBay.com. All rights reserved. Terms of Use | Privacy Policy | DMCA | 2021 | Feedback | Advertising | RSS 2.0